Monday, July 23, 2012

நட்சத்திர வீதியில் என் மனதின் பிரதிபலிப்பு



சினிமாவில் நான் அதிக ஆர்வம் கொண்டு பேசுவதாகவும் அதிகம் அதை பற்றி எழுதுவதாகவும் பலர் என்னிடம் குறைபட்டிருக்கின்றார்கள். சில நண்பர்கள் திட்டியும் இருக்கின்றார்கள்.  என்னை பொறுத்த மட்டில் சினிமா என்பது மட்டும்தான் என் பொழுது போக்கு அதை நான் ஆழமாய் நேசிக்கின்றேன், வலுவாய் காதலிக்கிறேன். அஜித் பற்றி நான் அதிகம் அலட்டுவதாகவும் பலர் திடியிருக்கின்றார்கள் அஜித் என்ற மனிதனையும் நடிகனையும் நான் நேசிக்கிறேன் அவரவர் தம்மை வளர்த்துக்கொள்ள முன்னுதாரணமாய் பலரை எடுக்கின்றார்கள், நான் அஜித்தின் உழைப்பை நேசிக்கிறேன், அந்த அடங்காமையை விரும்புகின்றேன். இதில் என்ன தவறு இருக்கின்றது என எனக்கு புரியவில்லை. சாப்பிட கோட காசு இல்லாமல் இருக்க படத்துக்காக பணத்தை செலவழிக்கும் கோமாளி அல்ல நான். என்னை அடுத்த வேலைக்காக தயார்படுத்தும் ஒரு இடமாகவே படங்களை பார்க்கின்றேன் .  "குடித்து கும்மாளம் அடிப்பதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை செலவழிப்பதும், குட்டி உஷார் பண்ணி ஊர் சுத்துவதும் தப்பில்லை என்றானபோது" ஒரு நடிகனுக்காக நான் எழுதுவதில் என்ன தவறு இருக்கின்றது? புரியவில்லை , இன்னுமொன்று நான் ஒரு நடிகனுக்காக எப்போதும் பிற நடிகர்களையோ அல்லது மனிதர்களையோ தாழ்த்தியதும் இல்லை, தேவை இல்லாமல் உயர்த்தியதும் இல்லை இந்த வலைப்பூவை நான் என் மன உணர்வை பிரதி பலிக்கும் ஒரு இடமாகவே கருதுகின்றேன். கிட்டத்தட்ட நட்சத்திர வீதியில் என்பது என் நாட் குறிப்பு போன்றதே என்ன ஒன்று அந்த நாட்குறிப்பை பொதுவாக யாரும் படிக்கக்கூடியதாய் வைத்திருக்கின்றேன்  எந்த ஒழிவு மறைவும் இல்லாமல்  அஜித் படத்தை பார்த்து என்னை நான் ஒய்வாக்கிக்கொள்கிறேன். மூன்று மணித்தியாலங்கள் சந்தோசப்படுகின்றேன் இதில் என்ன தவறு இருக்கின்றது ?

Tuesday, July 17, 2012

THE DIRTY PICTURE

சிலுக்கின் பார்வை, கவர்ச்சி, இதழ் அசைவு, என்று எதையுமே வித்யா பாலனால் ஈடுகட்ட முடியவில்லை ஏன் நெருங்கவே முடியவில்லை. ஆனால் நடிப்பில் சில்ல்கை பல மடங்கு தோற்கடித்துவிட்டார். மிரள வைக்கும் உழைப்பு . இந்த படத்தை வித்யாபாலனை தவிர யாராலும் இவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது.

பில்லா 2

.
அஜித் என்ற மனிதன் மீது வைத்திருக்கும் அர்த்தமே தெரியாத ஈர்ப்பினால் பில்லா இரண்டாம் பாகத்துக்காக காத்திருந்து, முதல் நாள் முதல் ஷோவுக்கு கொழும்பு கான்கார்ட் திரையரங்கத்துக்கு சென்று, அடித்து பிடித்து டிக்கட் வாங்கி கூச்சலும் கும்மாளமுமாக படத்தை பார்த்து, விசில் பறக்க ரகளை பண்ணியது எனக்கு புது அனுபவம் . படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் எதோ ஒரு குறை என்று ஒருத்தன் கமன்ட் அடிக்க நல்லா பாரு மச்சான் படத்துல கதைதான் குறை என்று இன்னொருத்தன் சொல்ல தியட்டரில் விசில் மலை.
கதை

அல்பற்சிநோவின் பழைய படத்தின் கதையை பில்லாவின் முதல் கட்ட வாழ்க்கையாக சொல்லியிருக்கின்றார்கள். படம் sarukkiya இடமே கதை தான். ஆரம்பிக்க போகிறது என்று பார்த்தால் படம் முடிகிறது இன்னுமொன்று எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கின்றார்கள். அல்லது சென்சாரில் படத்தின் பாதி குதரப்பட்டிருக்கின்றது அப்படி என்றால் சக்ரியை மன்னிக்கலாம்

அஜித் 


முரட்டுத்தனமான உழைப்பு, நேர்த்தியான நடிப்பு ,பார்வையிலேயே பேசுகிறார் அத்திப்படியை தொலைத்து பக்கம் பக்கமாக பேசியதை விட இரண்டே வரிகளில் திருக்குறள் போல பேசி கைதட்டல்களை அள்ளுகிறார். பில்லாவின் இளைய பருவம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதளவு குண்டாக இருப்பது குறை ,ஆனால் அதை மறைக்கும் விதம் சண்டை காட்சிகள் , அனால் காலை தூக்க சிரமப்படுவது தெரிகிறது. தமிழ் சினிமாவின் மிக அழகான நடிகர் ஸ்டைலிஷான நடிகர் என்றால் அது அஜித் தான் மீண்டும் நிரூபித்திருக்கின்றார்.


 விஜய் உச்சத்தில் இருக்கும்போது அவர் செய்த தவறு திருமலையில் கிடைத்த மாஸ் அங்கீகாரத்தை அப்படியே எல்லா படத்திலும் பிரயோகித்தது.
 ( திருமலை திருப்பாச்சி கில்லி சிவகாசி ஆதி வேட்டைக்காரன் ..........) ஆனால் வெற்றிக்குரிய சமன்பாட்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. அதனால் சறுக்கினார் அஜித் பில்லாவில் கிடைத்த ஸ்டைலிஷ் இமேஜ்ஜை தொடர்ந்து பயன்படுத்தினால் அவருக்கும் சறுக்கல் நிச்சையம் அதை மாற்ற முடியாது மக்கள் வித்தியாசத்தை விரும்புவதை   தல புரிஞ்சிக்கணம்  .ஸ்டான்ட் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும் வான் சண்டை என தல நடிப்பில் அடுத்த லெவலுக்கு போய்ட்டாருங்க தல தல தல .

இசை

யுவன் ஷங்கர் ராஜ இசை
என்றதும்  திரையரங்கம் அதிரும் ஆனால் பில்லா ஒன்றில் இருந்த மேஜிக் இங்கு இல்லை மங்காத்தாவில் இருந்த அசத்தல் இங்கு இல்லை ஏமாற்றிட்டார் .

வசனம்


இரா முருகன் தன அடையாளத்தை பதித்து விட்டார் ஒவ்வொரு வசனமும் ரொம்ப கூர்மை
( ஆசை இல்ல அண்ணாச்சி பசி )

கதாநாயகிகள் 


இரண்டு பேராம் பார்வதியை விட ப்ருணா க்கு வாய்ப்பு அதிகம். கலக்கல் அடிக்கடி நீச்சல் உடையில் வந்தாலும் சூடேறினா மாறி தெரியல, பல இடங்களில் முகம் சுளிக்க வைத்ததனால் கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி ஆபாசம் என்ற எல்லைக்குள் போய்ட்டாங்க சோ......... சாட் .

இயக்கம்

சக்ரி மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஆனால் அது எல்லாவற்றையும் சரி பாதியாக முறியடித்திருக்கிறார் அவரிடம் நல்ல திறமை இருப்பது தெரிகிறது. படம் ஆங்கில படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் கலர் டோன் உட்பட அத்தனையும் பார்த்து பார்த்து செதுக்கிய சக்ரி திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் மற்றப்படி சக்ரி தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குனர்.


"மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து ஏமாற்றிய படங்கள் வரிசையில் பில்லா இரண்டாம் பாகத்தையும் அடக்க வேண்டி வரும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் நிஜத்தை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும் ?லாஜிக் பார்த்தால் உலகத்தில் சினிமாவை ரசிக்கவே முடியாது படம் என்பது சந்தோஷப்பட பொழுதை போக்க அவ்வளவுதான் என்பவர்களின் வரிசையில் நானும் ஒருவன் என்பதால் பில்லா எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் அஜித் என்ற நடிகன் மீது அளவுகடந்த பிரியம் எனக்குண்டு அல்லவா அதுவாகவும் இருக்கலாம் . ஆனால் அஜித் தன திரையுலக வாழ்வில் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து செய்யும் ஒரு தவறை இங்கேயும் செய்துவிட்டார்.
இன்னமும் தொடர்ந்து செய்கிறார்.படத்தின் கதை தேர்வில் அஜித் இன்னமும் பக்குவம் அடைந்ததாக தெரியவில்லை ,இதனால்தான் அவருக்கு கிடைக்கும் பல பெரிய வெற்றிகளை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

பில்லாவில் மறு அவதாரம் எடுத்த அஜித் ஏகன் , அசல் என்று கதை தேர்வில் சொதப்பி தோல்விபெற மங்காத்த அவரை ரஜினிக்கு அடுத்து என்ற இடத்தில் அசால்ட்டாக உட்கார வைத்தது ஆனால் அந்த வெற்றியையும் அவரால் தக்க வைக்க முடியாமல் போகுமோ என்பதுதான் கவலை."


"மொத்தத்தில் பில்லா இருக்கு  கொஞ்சம் நல்லா அனால் நான்கு நாட்களிலேயே தியட்டர்கள் இல்ல புல்லா........"

Friday, June 22, 2012

ஒரு விபச்சாரியின் வாக்குமூலம்

ஒரு குட்டிப்பையனை ஒரு பெண் ஆசையோடு முத்தம் கொடுக்க கன்னத்தை நெருங்குகிறாள் அவன் உடனே கன்னத்தை திருப்பிக்கொள்கிறான்


அருகில் இருந்த பெரியவன் அவனுக்கு ( அந்த குட்டிப்பையனுக்கு ) முத்தம் பிடிக்காது என்கிறான்.

அதற்கு அந்த பெண் -

எனக்கும் முத்தம் பிடிக்காது ஆனால் காசு வாங்கினா கொடுத்துதான் ஆகணும் வயசான கிழவன் , குடிகாரன் , சீக்காளி எவனா இருந்தாலும். என் உடம்பெல்லாம் நாருது எங்க அம்மா பிணம் கூட இப்டி நாரால. அம்மாவ நான் கொண்ணுட்டேன் ஓடிப்போய் கொண்ணுட்டேன். வண்டி உடன்சுடுச்சுனு மூணு நாள் என் வீட்டுப்பக்கம் ஒருத்தன் தங்கினான். முதல்நாள் அவன் போட்டிருந்த வெள்ளை ட்ரஸ் பிடிச்சுருந்தது, இரண்டாவது நாள் அவன் தண்ணி கேட்டப்போ அவன் சிரிச்ச வெள்ளை பல் பிடிச்சது. மூணாவது நாள் அவன் பக்கத்துல உட்கார்ந்து கார்ல போனபோ அவன பிடிச்சது. வழியில எதையோ குடிக்க குடுத்தான் மயக்கமா வந்துச்சு நா மயக்கத்துல இருக்குறப்போ என் மேல ஏறி என்னெல்லாமோ பண்ணினான் அது பிடிச்சிருந்துச்சு.

கண் முழிச்சா என் வாழ்க்கைல ஓட்டட பிடிச்சிருந்துச்சு. என்ன சுத்தி வர நாத்தம் பிடிச்ச பொம்பளைக. "புது சரக்கு புது சரக்குனு" சொல்லி சொல்லி மூணு நாள்ல என்ன முப்பத்தாறு பேரு மோ................ட்டானுங்க அதுக்கப்பறம் நான் எண்ணல கடைசியா ஒரு கெழவன் வந்தான்.அவன் அம்மா மார்புல இருந்த மச்சம் என்கிட்டே இருக்குனு என்ன சுத்தி சுத்தி வந்தான். ஓடிவந்துட்டேன் அம்மா முகத்த திருப்பிக்கிட்டா படு பாவி செத்த பிறகு குழில வைக்கும்போது கூட முகத்த திருப்பிக்கிடேதான் இருந்தா. அப்புறம் வயித்து பசிக்காக ரோட்டுல நிக்க ஆரம்பிச்சேன் இப்போ போற வர்றவன்
எல்லாம் என்ன பிச்சி பிச்சி திங்குறான்.

உடம்போட சேர்த்து இப்போ மனசும் நாருது ..........
 
( நந்தலாலா படத்தில் இருந்து )

Thursday, May 31, 2012

Satru Mun Varai Tamil Short Film

எமது சக்தி தொலைக்காட்சியின் கமரா கலைஞரான மதிப்பிற்குரிய திரு.கார்த்திக் அவர்கள் இயக்கிய குறும் படம் இது லங்கையின் சிறந்த தமிழ் குறும்படத்துக்கான தேசிய விருதை கடந்த ஆண்டு பெற்றது ( என் குரல் இந்த கதாநாயகனுக்கு பொருத்தமா என்று சொல்லுங்கள் )


வித்தக கவிஞன் "பா.விஜய்" அவர்களுடன்
அமரத்துவம் மிக்க இரண்டு நாட்கள்


இரண்டு முக்கிய நிகழ்வுகளை அண்மையில் சந்தித்தேன்.
 முதலாவது சந்தோசமானது ,இரண்டாவது கொஞ்சம் கவலை
தரக்கூடியது. முதலாவதுசந்திப்பு இரண்டாவது பிரிவு ஆனால்
இரண்டுமே வேறு வேறு மனிதர்களால்.


சந்திப்பு


வித்தக  கவிஞன்  பா விஜய் அவர்கள் எங்கள் வானொலிக்கு வந்திருந்தார். ராஜ ராஜ சோழன் சரித்திர தொடரில் நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பல மாத முயற்சியின் பின்னர் பா விஜய் அவர்களை அழைத்து வந்தவர் அண்ணன் ராஜ்மோகன் அவர்கள். ( இதற்காக அவர் போராடாத போராட்டமே கிடையாது அதை பற்றி பேசுவது
 உசிதம் அல்ல ) ஆனால் முழுமையாக பா விஜய் அவர்களுடன் இரண்டு நாட்கள் நேரத்தை செலவழிக்க கிடைத்தது.
என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நொடிகள் அவை அமரத்துவமான நிமிடங்கள் அவை நீண்ட நாட்களுக்கு பின்னர் பயனுள்ள சில மணித்தியாலங்கள் அவை . ரொம்ப இயல்பாக எளிமையாக அவர் பழகிய விதம் எல்லோரையும் கவர்ந்தது அவருடன் நடித்த    ஈழத்து மூத்த நாடக கலைஞர்கள் எல்லோருடனும் அவர் பழகிய விதம் ரொம்ப எளிமை.   


அவ்வளவு பெரிய இமேஜ் உள்ள ஒரு கலைஞன் எவ்வளவு எளிமையாக பழகியது ஆச்சர்யமாக இருந்தாலும் அவர் ஏன்
 இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தார் என்பதற்கு அவரின் 
எளிமையே பதில்.
(ஏற்கனவே எனக்கு பிடித்த இரண்டு பாடகர்கள் தென்னகத்தில் இருந்து  எமது கலையகம் வந்திருந்தனர் அதன் பின்னர் அவர்களின் பாடல்களே பிடிக்காமல் போனது அவ்வளவு அடம்  ) நிறைகுடம் எப்போதும்  தளம்பாது
  அவரிடம் பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் என்ன  எல்லாம் கேட்கலாம் என்று   மனதில்  நினைத்தேனோ அத்தனையும் மறந்துவிட்டு என்னெல்லாமோ கேட்டுவிட்டேன். ஆனால் தேவையான அளவு படங்கள் மட்டும் மாறி மாறி எடுத்துக்கொண்டேன் இனி அதை நான் என் வாழ்க்கை முழுவதும் பொக்கிஷமாய் வைத்திருக்கப்போவதாயிற்றே. ( படங்கள் நன்றி- அகிலா ) எங்கள் வானொலியின்
இசை அமைப்பு பணிகள் செய்பவரும் இசையமைப்பாளருமான பிரஜீவ் இன் மெட்டை கேட்கும்போதே வரிகளை எழுதிக்கொடுத்தார் ( பொட்டபுள்ள பொட்டபுள்ள பொசுக்குனு போறியே  ... என்ற  ஆரம்ப வரிகள் ) அதை அவர் எழுதிய வேகம் மெய் சிலிர்க்க வைத்தது. வாழ்வில் மறக்கவே முடியாத பொழுதுகளை தந்த மதிப்பிற்குரிய திரு பா விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
  



Thursday, April 19, 2012

மூன்றில் உள்ள நான்கு

1-தனுஷ் மீண்டும்  சய்க்கோவாக  நடித்திருக்கும் படம்
2-ஸ்ருதி ஹாசனுக்கு  நடிப்பு வராது  என்று மீண்டும்   காட்டிய படம்
3-இயக்குனராக ஐஸ்வர்யா எந்த இடத்திலும் தனித்துவமாக தெரியாத படம்

4-அனிருத்தின் பின்னணி இசைக்காகவும் பாடல்களுக்க்காகவுமே பார்க்கலாம்   என்று பேசவைத்த படம்

ஓகே........ ஓகே........ நல்லாத்தான் இருக்கு ஓகே........ ஓகே........

புதுசா காதல் வயப்படுறவங்க சொல்வாங்களே" அவளை  ஏன் பார்க்குறேன்னு புரியல ஆனா புடிச்சு இருக்கு பார்த்தா என்னையே மறக்குறேனு" அந்த மாதிரி   ஏன் பார்க்கிறோம் எதற்காக பார்க்கிறோம் என்று தெரியாமலேயே விரும்பி பார்க்க வைத்திருக்கின்றார்கள். உதயநிதிக்கு இயல்பாகவே  நடிப்பு வந்திருக்கு சந்தானம் இந்த வருஷம் இனி படம் பண்ணவே தேவையில்ல என்றளவுக்கு தீனி போட்டிருக்கின்றார். வேணாம் மச்சான் வேணாம் திரையரங்கிலும் அப்ளாஸ், ஹரிஷின் வழக்கமான மெட்டுக்கள் அனால் வழக்கம் போல ரசிக்க வைத்துவிட்டார். ஐயோ என ஏங்கவைக்கும் ஹன்சிகா என்று படம் முழுக்க சந்தோசம் சந்தோசமாக பொழுதை கழிக்க செம படம் , குறைகள் நிறைய ஆனால் சொல்ல மனசே வரல காரணம் படம் முடியும் வரை அப்படி ஒரு சிரிப்பு மழை  ( சிரிக்க வச்சு சந்தோஷ பட வைக்குரவங்கள எப்டிங்க குறை சொல்றது ?)

பி கு -     சிவா மனசுல சக்திக்காக இயக்குனர் ராஜேஷ் ஜீவாவை தேர்வு செய்திருப்பார் அந்த படத்தில் சிவா கதாபாத்திரத்தை ராஜேஷ் என்ன விதத்தில் உருவாக்கினாரோ அதே முறையில்  உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவும் , இப்போ ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்திருக்கும்  உதய நிதியும். ஆனால் இருவராலும் ஜீவா அளவுக்கு  அந்த கதாபாத்திரத்திட்கு உயிர் கொடுக்க முடியவில்லை

மனம் திண்ணிக்கழுகு


தமிழில் இதுவரை தொடாத ஒரு கதை தான் என்று ஓரளவுக்கு சொல்லலாம் ஆனால் தொடாத மையக்கரு என்று தைரியமாக சொல்லலாம் தீண்டத்தகாதவர்கள் போல கணக்கெடுக்கப்படும் விளிம்பு நிலை மனிதன் ஒருவனுக்கு இருக்கும் சராசரி உணர்வுகளை அற்புதமாக சுட்டிருக்கின்றார்கள்,பிணம் தின்னும் கழுகு கூட பசிக்காகத்தானே தின்கின்றது ? இங்கு பிணம் தேடி அதில் இருந்து வயிற்றை நிரப்புபவர்களின் கதை என்பதால் படத்தின் பெயர் "  கழுகு" சபாஷ் இயக்குனர் அவர்களே. கிருஷ்ணாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு, தேசிய விருது பெற்ற கலைஞன் ஆச்சே தம்பி ராமையா வழக்கம் போல பின்னி பெடலெடுத்திருக்கு மனுஷன். கருணாசுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க நல்ல வாய்ப்பு ", பிந்து மாதவி பொருத்தமான தேர்வு ,  ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் " இப்போதும் காதுகளுக்குள். நல்ல படம் .  வெளிச்சம் இல்லாமல் திரைக்கதை காட்சிகள் அமைத்தது என்ன லாஜிக் என்று மட்டும் புரியல ....

Tuesday, April 10, 2012

"தமிழ் தொலைகாட்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகர ஆளுமை "


பொண்ணுங்கள பொருத்தவரைக்கும் டி வீ க்கு முன்னால அழகா இருந்தாலே போதும் மண்டைல எதுமே இல்லாததுகள் கூட சீக்கிரமே மக்கள் ரசிக்குறாங்க ஆனா இந்த பசங்க நிலைமை எப்பவுமே திண்டாட்டம் தான். எதையாவது வித்தியாசமா செய்தே ஆகணும் . நம்ம நாட பொறுத்த வரைக்கும் நல்ல துல்லியமான தமிழுக்கும் , உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் ஆனா இப்போ நம்ம நாட்லயும் இந்திய தொலைக்காட்சி மோகம் வந்ததால அவசர அவசரமா எல்லா டி வீ களும் தங்களையும் தொகுப்பாளர்களையும் மாத்த வேண்டிய நிலைமை அதுலயும் இந்திய நிகழ்ச்சிகளை வச்சு இப்போ எல்லாம் டி வீ நடத்தவே முடியாது ஏன்னா அதுக்கு செய்மதில சன் டி வீ இல்லனா விஜய் டி வீ பார்த்துடலாம் .

இந்த இந்திய தொலைகாட்சிகளின் இலங்கை மீதான ஊடுருவல் பற்றி நிறைய பேர் அக்கறை படுறாங்களே இல்ல. இன்னமும் ழைய பஞ்சாங்கங்கல்லேயே அக்கறையா இருக்காங்க அடையாளம் அடையாளம்னு , அடையாளம் இல்லாம போறாங்க . ஆனா இலங்கை தொலைகாட்சிகள் இப்படியே போனா கண்டிப்பா இலங்கை முழுக்க சன் டி வியும் விஜய் டி வீ யும் கொடி கட்டி பறக்கத்தான் போகுது.



இப்போ மேற்படி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் மேட்டருக்கு வருவோம் நல்ல தமிழ் பேசணும் துல்லியமா பேசணும் அப்டினா அது இயல்பா வந்தாதான் அழகு. ஆனா பலர் அப்படி ஒரு தமிழை கஷ்டப்படுத்தி வரவச்சு பேசினா எரிச்சல் தான் மிஞ்சும் , இன்னுமொரு பக்கம் இந்திய தமிழ் பேசுகிறோம் அப்டினா அதுவும் இயல்பாவே வரணுமா இல்லையா ? இங்க நம்ம தொலைகாட்சிகள்ள ஏதோ பிறந்து வளர்ந்ததே தமிழ் நாடு அப்டின்ற மாதிரி இந்திய தமிழ் பேச போய் அதுவும் கொச்சைபடுத்தப்பட்டு மறுபடி எரிச்சல். நமக்கு என்ன வருமோ அத செய்தாதான் அழகு மக்களும் ரசிப்பாங்க (எனக்கு பூர்வீகம் தமிழ் நாடு அதால எனக்குள்ள இந்திய தமிழ் வாடை இயல்பாவே ஒட்டியிருக்கு அதுனால நான் தைரியமா அந்த தமிழ் பேசுறேன் )

விஜய் டிவீ அறிமுகப்படுத்திய புரட்சிகர மாற்றங்கள் தொகுப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை எல்லா நிகழ்சிகளிலும் ஒரு பொண்ணு வந்து கையையும் தலையையும் ஆட்டி , அர்த்தமே இல்லாம காரணமே இல்லாமல் சிரித்துகொண்டிருந்த சம நேரத்துல விஜய் டி வீ பல புதுமையான தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ் வசந்தன் ( தற்போது இசையமைப்பாளர் ) தொகுப்பாளராக புகழ் பெற்றார். தொடர்ந்து அவரை விஜய் டி வீ பயன்படுத்தியது விஜய் என்றாலே ஜேம்ஸ் வசந்தன் தான் என்று அவரை அடையாளப்படுத்தியது அதன் தொடர்ச்சியாக அந்த இடம் வெறுமையாய் இருக்க ந்த இடத்தை நிரப்பினார் டீ டீ எனப்படும் திவ்ய தர்சினி. விஜய் டி வீயை பொருத்தமட்டில் ஒருவரை மிக அழகாக அடையாளப்படுத்தும். அதன் தொடர்ச்சியாக திடீரென தன்னை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நேயர்களையும் தன் பக்கம் ஈர்த்துகொண்டார் "நீயா நானா கோபிநாத்" மீசை இல்லாமல் இருபத்தைந்து வயதுக்குள் தான் தொகுப்பாளர்கள் என்ற வரை முறையை மாற்றி கோபி அசத்தினார் எல்லா டி வீ களும் கோபி மாதிரி ஆளுமை உள்ள தொகுப்பாளர்களை தேட ஆரம்பித்தது. குறைந்தது அந்த உருவம் உள்ளவர்களையாவது தேடி போட ஆரம்பித்தது . ( இதுல நல்ல உதாரணம் கலைஞர் டிவி யின் சங்கர் ) அப்புறமா விஜய் டி வி யின் வழக்கமான பார்முலாதான் கோபி எல்லா நிகழ்ச்சிகள்ளையும் பயன்படுத்தப்பட்டார் ( இப்பவும் அப்டிதான் )

எல்லாம் தாண்டி விஜய் தொலைகாட்சியின் ஒரு சிரிப்பு நிகழ்ச்சி " கலக்க போவது யாரு " மூலமா ஒரு போட்டியாளரா அறிமுகமான அந்த இளைஞன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பையே மாத்தி போடுவான் என்று அப்போது டி வீ பார்த்த யாருமே நினைக்க வாய்ப்பில்லை . ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் அந்த இளைஞன் அபாரமாய் தன்னை வளர்த்துக்கொண்ட விதம் ஆச்சர்யமாய் இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை , மிமிக்ரிளையும் அண்ணன் வெளுத்து வாங்கவே விஜய் டி வீ யின் தேடலில் அடுத்த வித்தியாசாமான ஆளுமையாய் சிக்கினார் "சிவகார்த்திகேயன் ". மற்றைய எல்லா தொகுப்பாளர்களையும் தன் பக்கம் ஈர்த்த விதம் மிக வித்தியாசம் நாம பார்க்கும் போது எந்த நிமிசமும் நம்ம பார்வைக்குள்லையே நிரம்பும் ஆளுமை சிவகார்த்திகேயனுக்கு உண்டு ,எவ்வளவு பெரிய ஆர்டிஸ்டாக இருந்தாலும் சிவா விடம் அலாதி பிரியம் காட்ட ஆரம்பித்தனர். எல்லோரிடமும் தனித்து தெரிந்தார் சிவா , மீண்டும் விஜய் டி வியின் வழக்கமான பார்முலா இப்போது விஜய் டி வி யின் எல்லா நிகழ்ச்சிகளிளும் சிவகார்த்திகேயனின் முகம்தான் , பார்க்க பக்கத்து வீட்டு பையனின் முகம் செயற்கை இல்லாத தமிழ் எல்லா விஷயத்துலயும் நகைச்சுவையை கொண்டு வந்து சேர்த்தல் , ன்று இந்திய தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நடையையே மாற்றி போட்ட பெருமை சிவாவுக்கு உண்டு . இப்போது அதன் தொடர்ச்சியாக சினிமாவுலயும் அண்ணன் கலக்க ஆரம்பிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு !


நிற்க சிவகார்த்திகேயனிடம் இருந்து நம்ம கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு அதெல்லாம் சொல்ல போனால் எழுத போனா நான் ஏதோ சொல்லகூடாத எதையோ சொன்ன மாதிரி தூற்றப்படுவேன். ஆனால் எனக்கு தெரிய இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தமக்கு இயல்பாக வருவதை செய்ய வேண்டும் ( இது எனக்கும் சேர்த்துதான் ) . அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு இடமளிக்க வேண்டும் இல்லையெனில் மாறும் ரசனையில் இந்திய டி வீ விகளின் அபார வளர்ச்சியில் நம்ம ரசிகர்கள் ஊரிப்போவதை தடுக்க முடியாது ( இப்பவே இலங்கை நாளேடுகள்ள நேத்ரா டி வி , சக்தி டிவி , வசந்தம் டி வி களின் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போய் ஜெயா டிவி, சண் டிவியில் என்ன நிகழச்சிகள் என்று நிரல் போட ஆரம்பிச்சுடாங்க ).
Copyright © 2014 நட்சத்திரவீதியில்