Friday, November 11, 2011

அஜீத் என்னும் ”மனிதன்” - ஒரு மேக்கப்மேனின் பார்வையிலிருந்து ..





நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.
கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.
இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.
அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.
‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.
‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.


‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.


‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.
‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.


‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’


‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’
‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’



இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’
‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’


‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’
‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

ஹெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’


‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’


‘அது பெரிய விஷயமாப்பா?’
‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’


‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’
‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’
‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’


‘அப்புறம்?’
‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’


‘சாப்பாடு மட்டும்தானா?’
‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு…’ இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.
செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.
மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.



பத்ரி சேசாத்ரி கிழக்கு பதிப்பக உரிமையாளர் ( நன்றி -அஜித் ரசிகர் இணையம் )

Sunday, October 30, 2011

விசித்திரமாகிப்போன சரித்திரம்



'சரித்திரம் விசித்திரங்களால் ஆனது அல்லது விசித்திரங்கள் நிறைந்தது தான் சரித்திரம் வெற்றியாளணினால் சரித்திரம் எழுதப்படுவதும் தோல்வியடைந்தவனின் விம்பம் அதில் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவதும் சரித்திரத்தின் விசித்திரம்தான். நாளை நிகழ்கால நல்லவர்களை அது கெட்டவர்களாக காட்டும் நிகழ்கால கெட்டவர்களை வீர தீர சாகசம் புரிந்தவனாக சரித்திர விம்பம் காட்டலாம் எல்லாமே வெற்றியின் கைகளில் உள்ளது. அல்லது சரித்திரத்தின் விம்பத்தை நிர்ணயிக்கும் சக்தி வெற்றிதான் '

கடாபி .......

கடந்த ஒரு வாரம் முழுவதும் உலகின் மூலைமுடுக்கெங்கும் உச்சரிக்கப்பட்ட அழுத்தமான பெயர் ஒரு சிலருக்கு கடாபி ஒரு கடுமையான புரட்சியாளன் ஒரு போராளி மேற்கின் நவகாலனித்துவ சக்திகளுக்கு எதிராக உரத்த தொனியில் எதிர்ப்பை காட்டியவர் லிபியாவை செல்வந்தனாக்கியவர் லிபிய தேசத்தை சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியவர் ஆரம்பத்தில் லிபியாவின் 'ச்சே குவேரா' என்று அழைக்கப்பட்டவர் உலக முஸ்லிம் இளைஞர்களின் 'ஹீரோவாக' போற்றப்பட்டவர் ஒரு சமயம் மத்தி
ய கிழக்கையும் மறு சமயம் ஆப்பிரிக்காவையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர முயன்ற 'மண்ணை தான் சார்ந்த இனத்தை'நேசித்த ஒரு தலைவன்

ஒரு சிலருக்கு அவர் ஒரு மோசமான சர்வாதிகாரி தானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு பிடிவாதக்காரன் தன்னை பற்றி அதீத நம்பிக்கை கொண்ட ஒரு கற்பனா வாதி வெகு சிலருக்கு அவர் ஒரு பயங்கர வாதி சர்வ அதிகாரங்களையும் கொண்டதனால் அத்து மீறல்களை தாராளமாய் செய்த ஒரு சுயநல வாதி

இப்படி கடாபி நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் நாயகன் பாணியில் 'தெரியலம்மா' என்றுதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது நாற்பது வருடங்கள் பின்னோக்கி சென்றால் லிபியாவின் ஒரு ஆட்சியாளனை எதிர்த்து ரத்தம் சிந்தா இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை தன் கைக்குள் கொண்டு வந்த அந்த இளைஞன் ஒரு சாதாரண 'பழங்குடி இனத்தை சேந்தவன்'

வசீகரிக்கும் தோற்றம் கொண்ட அவனுக்கு வயது வெறும் இருபத்தேளே ஆனபோது உலகின் அனைத்து மூலையின் பார்வையையும் தன் வசப்படுத்தி ஆச்சர்ய படுத்தினான் தன்னை கேர்ணலாக தானே பதவி உயர்த்திக்கொண்டு ஆட்சியில் அமர்ந்த போது லிபிய மக்கள் அவனைஒரு மாவீரனாகவே பார்த்தனர் லிபியாவின் விடுதலைக்கான சரியான வழிகாட்டி அவன்தான் என பரி பூரணமாய் நம்பினர் மேற்குலகம் லிபிய என்னை வளங்களை சூறையாடுகிறது அவை லிபிய மக்களின் சொத்து என முழங்கிய பொது அவன் லிபிய மக்களின் 'ச்சே குவேராவாக' போற்றப்படுகிறான்

முழங்கியதோடு நின்றுவிடாமல் மேற்கு சூறையாடும் என்னை வள வருமானங்களை லிபியாவிட்குள்ளேயே முடக்கி லிபிய மக்களுக்கான பல நல திட்டங்களையும் உருவாக்கி வெற்றி கண்டான் என்னை வள வருமானங்கள் மக்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு லிபியாவின் தனி நபர் வருமானத்தையும் உயர்த்திய போது அவன் ஒரு சிறந்த தலைவனாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டான் கடாபியின் அடுத்தடுத்த செயற்பாடுகளும் மக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டன இந்த அங்கீகாரமே கடாபிக்கு தான் செய்வதனைத்தும் சரி என்ற மமதையை கொடுத்திருக்கலாம்



அடிப்படையில் ஆழமான கல்வியறிவு கடாபிக்கு இருந்ததாக தெரியவில்லை அதுவே தனக்கான ஒரு அரசியல் சித்தாந்தத்தை கடாபி உருவாக்க காரணமாய் அமைந்தது இந்த அரசியல் சித்தாந்தமே பல சுவாரஸ்யங்களை கொண்டது 'கிரீன் புக'; என்ற பெயர் கொண்ட நூல் வடிவில் அந்த சித்தாந்தத்தை கீறினார் கடாபி பல்வேறு பழங்குடி இனக்குழுக்களை கொண்ட லிபியா என்னும் அகண்ட தேசத்தை ஆழ அந்த சித்தாந்தம் கிட்டத்தட்ட சரியானதுதான் ஜனநாயகத்தையே சர்வாதிகாரமாக சித்தரிக்கும் கடாபி மக்கள் குழுக்கள் மூலம் மக்களை கட்டுப்படுத்துவதும் மத்திய குழு மூலம் நாடு ஆளப்படுவதும் கடாபியின் பச்சை புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் ஆனால் இது நடைமுறைக்கு வந்ததன்

பின்னர்தான் கடாபியின் சுய ரூபம் மக்களுக்கு புலப்பட்டது மத்திய மக்கள் குழுவை மக்கள் காங்கிரசாக சித்தரித்த கடாபி முழு ஆட்சி அதிகாரத்தையும் தனக்கே உரித்தாக்கினார் லிபியாவின் பல்வேறு பட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் கொண்ட தலமைப்பதவிகளுக்கு தமது உறவுகள் பிள்ளைகளை நியமித்தார் லிபிய மக்களிடம் இருந்து கடாபி விலகி செல்ல ஆரம்பித்தது இந்த சமயத்தில் தான் மட்டுமல்லாமல் என்னை வளங்கள் மூலம் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் பில்லியன் கணக்கான சொத்துக்களையும் சேர்க்க ஆரம்பித்தார்

அமெரிக்காவை நேரடியாக பகைத்துக்கொண்ட தலைவர்களில் கடாபிக்கு தனி பங்கு உண்டு எண்பதுகளில் அமெரிக்க ஜனாதிபதிகளுள் ஒருவர் கடாபியை 'மத்தியகிழக்கின் பைத்தியகார நாய்' என்று அநாகரீகமாக திட்டியதிளிருந்தே தெரியும் கடாபி மீது அமரிக்காவின் விரோதம் கடாபியும் அமெரிக்காவுக்கு எதிராக சும்மா இருந்து விடவில்லை எந்த மூலையில் அமெரிக்காவுக்கு எதிராக எந்த குழு போராடினாலும் அங்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்தார் அவர் மட்டுமல்லாமல் கடாபியின் ஆதரவு குழுக்களும் அமெரிக்காவுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு உதவி செய்தன

கடாபி பொது நலனுக்காக போராடுவது போன்று தம்மை சித்தரித்தாலும் ஆழத்தில் அதில் கடாபியின் சுய நலம் மிகுந்திருக்கிறது ஆப்பிரிக்காவை ஒன்றிணைத்து அதன் மூலம் உலகை வெல்ல அவர் கனவு கண்டார் ஆரம்பத்தில் லிபியாவை மத்திய கிழக்கு நாடாக கூறிக்கொண்டிருந்த கடாபி பின்னாளில் அதை ஆப்பிரிக்க நாடாக கூறிக்கொண்டார் இதன் மூலம் ஐக்கிய ஆபிரிக்க என்ற கோட்பாட்டை உருவாக்கி அதிலும் தலைமையை தமக்கு எதிர்பார்த்திருந்தார் கடாபி


என்னதான் தான் ஒரு போராளியாக மக்களிடம் தம்மை சித்தரிக்க கடாபி முயன்றாலும் அடிப்படையில் அவர் தம் பதவி புகழ் உயிர் பாதுகாப்பில் எப்போதும் கவனமாய் இருந்திருக்கிறார் சதாம் {ஹசைன் பிடிபட்ட பின் தம் மேற்குலக நகர்வுகளில் சில தளர்ச்சியான போக்குகளை காட்ட ஆரம்பித்ததை சொல்லலாம் இது முழுக்க முழுக்க தமது பாதுகாப்புக்காகவே கடாபியினால் மேட்கொள்ளப்பட்டது பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் இவரின் உற்ற நண்பன் ஆனார் அமெரிக்கவுடனும் நல்லிணக்கத்தை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திகொண்டார் இவையனைத்தும் தம் உயிர் மற்றும் பதவி மீது அவர் வைத்திருந்த பயத்தினாலேயே மேட்கொள்ளப்பட்டது

சுற்றியிருப்பவர்களின் பார்வை எப்போதும் தம்பக்கமே இருக்க வேண்டும் என்பது காடாபிக்கு அவசியமான ஒன்று இதற்காக தம் சொந்த பிள்ளைகளை கூட புகழின் உச்சிக்கு செல்ல விட மாட்டார் அதே சமயம் தம்மை சுற்றி நம்பிக்கையானவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே கன்னிப்பெண்களை மெய்ப்பாதுகாப்பிட்காய் அமர்த்தியிருந்தார் ( அவர்கள் கடாபியினாலும் அவர் பிள்ளைகளாலும் பாலியல் ரீதியில் பயன் படுத்தப்பட்டார்கள் என்று தற்போது கூறப்படுகிறது ) தன் உடல் சுகாதாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பார் கடாபி இதற்க்கும் உக்ரெயினில் இருந்த பெண் தாதியர்களை கொண்டு வந்து அருகில் வைத்திருந்தார் இவரை சூழ எப்போதும் அழகான பெண்கள் கூட்டம் இருக்கும் அது இவருக்கு ரொம்ப பிடித்த ஒன்று ஆனால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு கடாபியை சபலபுத்திகாரர் என்று எடை போட முடியாது , பழைய கேசட்டுக்களில் அரேபிய பாடல்களை கேட்பது கடாபிக்கு ரொம்ப பிடிக்கும் தம் மீது நோய்கள் அண்டி விடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருப்பார் இதற்காக கடாபி அருகில் செல்பவர்கள் கூட பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டனர்

அடிப்படயில் பழங்குடி நாடோடி இனத்தவர் என்பதால் தம் அரண்மனைக்கு வெளியே எப்போதும் இவர் தங்குவதற்கான கூடாரம் அமைக்கபட்டிருக்கும் அதிலும் வெளியிடங்களுக்கு சென்றால் கூடாரத்தில் தங்குவதை கட்டாய வழக்காக கொண்டிருந்தார் கடாபி

எல்லா வகையிலும் ராஜ சுகங்களை அனுபவித்த கடாபி தன்னை சுற்றி தன் தேசத்துக்குள் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மட்டும் கடைசி காலத்தில் சரியாக மதிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மை நாற்பதாண்டு கால ராஜ வாழ்க்கை என்பதால் தாம் செய்யும் அனைத்திலும் அவர் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வாய்ப்பிருக்கின்றது தம்மை ஒருபோதும் அழித்து விட முடியாது என்று பலமாக நம்பினார் அவர் அந்த நம்பிக்கையே அவரை ஒரு துர் மரணத்திற்கு சொந்த காரனாக்கியுள்ளது

மேற்;கு உலகத்திற்க்கு கடாபியை வீழ்த்த ஒரு சரியான தருணம் மட்டுமே தேவைப்பட்டது டுனீசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி அலை எகிப்தை தாக்கியது இதை லிபியாவை தாக்க வைத்தது மேற்கின் சூழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அந்த புரட்சி அலையின் சத்தம் கேட்க்க ஆரம்பித்த உடனேயே லிபியாவில் தமக்கான செல்வாக்கை பற்றியும் மாறிவந்துள்ள உலக ஒழுங்கியலை பற்றியும் கடாபி மதிப்பீடு செய்திருந்தால் இந்த நிலை இன்று அவருக்கு வந்திருக்காது தன் மீது கொண்ட அதீத நம்பிக்கை அவரை துரத்தி துரத்தி கொலை செய்திருக்கிறது

கடாபியின் வாழ்க்கை நல்லது கெட்டது இரண்டும் கலந்தது என்றாலும் அவர் மரணித்த விதம் மனித நேயத்தை கேவலத்துக்குல்லாகும் விதத்தில் அமைந்திருந்ததை மறுக்க முடியாது அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தமக்குரிய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள புரட்சி படைக்கு கிடைத்த வாய்ப்பை புரட்சிப்படை இழந்து விட்டது மட்டுமல்லாமல் கடாபி இல்லாத லிபியா எப்படி அமையபோகிறது என்ற கேள்வி இங்கு முக்கியம் பல்வேறு இஸ்லாமிய இன குழுமங்களை கொண்ட லிபிய தேசம் அதிகாரத்துக்கான போட்டியில் இப்போது முண்டியடிப்பது தெரிகிறது சில கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் ஆனால் மாறி வரும் உலகியல் ஒழுங்குகளுக்கு தம்மை உட்படுத்தி தளர்த்தி செல்லாத எந்த தனி மனிதனோ அல்லது தலைவனோ கடைசியில் இப்படித்தான் தனிமை படுத்தப்படுவான் என்ற அழுத்தமான செய்தியை கடாபி உலகத்திக்கு சொல்லியிருக்கிறார் இனி பல சந்ததிகளுக்கு கடாபி ஒரு கொடுங்கோலனாக மட்டுமே சித்தரிக்கப்படுவார் என்பது மட்டும் கொஞ்சம் வேதனைதான் காரணம் கடாபி சரித்திரத்தையும் வெற்றியாளர்கள் தான் எழுதப்போகிறார்கள்

Wednesday, October 26, 2011

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்




அளவா சிரிக்கிற அஞ்சலி.
பட படக்குற அனன்யா.,
எங்க ஊரு பையன் ஜெய்.,
கடைசி நிமிடம் கலங்க வைக்கும் சர்வானந்.,
நெஞ்சை அவ்வப்போது கீரிப்போடும் சத்யாவின் இசை.,
பழனி மலை , விதி ஓட்டிச்செல்லும் பஸ்.,
பஸ்சுடன் பயணிக்கும் இசைஞானி பாடல்.,
காதல் சிட்டுக்கள்.,
தொடங்க முதல் முடியும் காதல்.,
உடைந்த பஸ் இன் வெற்றி கோப்பை.,
கடைசி நிமிட அமைதி மரண படுக்கையில் சொல்லப்படும் காதல்.,
மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்.,
திரும்ப வருமா என ஏங்க வைக்கும் நொடிகள்.,
அறுந்து அறுந்து போகும் உயிர்கள்.,
இப்போதும் காலை கண் விழித்ததும் வெறுமை படுத்தும் அந்த முடிவு.,
டைரக்டர் சரவணன் (இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்).,

Thursday, September 15, 2011

மங்காத்தா (லாஜிக் இல்லா மேஜிக் )

மாப்பிள்ளை மாதிரி மொக்க படத்தையே மனசாட்சியில்லாமல் விளம்பரப்படுத்தி ஓட்டு ஓட்டு என்று ஓட்டும் சன் பிச்சர்ஸ் காரர்களின் கையில் மங்காத்தா மாதிரி மாஸ் படம் கிடைத்தால் சும்மாவா சென்னையில் மட்டும் படம் வந்து ஒரே வாரத்தில் முப்பது கோடி வசூல் ......


எல்லோருக்கும் தெரியும் அஜித்தின் ஐம்பதாவது படம் இது ஏற்கனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தல என்ற செல்ல பெயர் தமிழ் நாடு முழுவதும் இயங்கி வந்த முப்பத்தெட்டாயிரம் ரசிகர் மன்றங்கள் / நற்பணி மன்றங்கள் அத்தனையும் அஜித் கலைத்து கைவிட்ட பிறகு இந்த படம் என்ன கதியாகுமோ என்று பலரும் உச்சு கொட்ட , நரை முடியுடன் கொடூர வில்லத்தனத்துடன் படத்தை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக்கியிருக்கிறார் தல .. காட்சிக்கு காட்சி பார்வையிலேயே பேசும் வித்தை அஜித்துக்கே உரியது மனுஷன் அநியாயத்துக்கு அழகு கை தட்டல்களை ஏகத்துக்கு வாங்கி குவிக்கிறார் அஜித் வரலாறில் ஐம்பது படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள திரைப்படம் இது அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் தல தொடரட்டும் தல பயணம்


பி. கு - ஒரு சின்ன குறை ஐம்பதாவது படத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்

Wednesday, September 7, 2011

யாழ் பயணம் ......

யாழ்பாணத்தில் என்னை பார்க்க ஒரு மாற்று திறநாளி வந்திருந்தார் அவரையும் அவர் குரலையும் நான் கவிராத்திரி நிகழ்ச்சியில் பல முறை கேட்டிருக்கிறேன் உணர்வுகள் பொங்கும் அவர் வரிகளை என்னை மறந்து அனுபவிப்பேன் அவர் என்னை நேரில் பார்க்க வந்தபோதுதான் அவர் ஒரு மாற்று திறநாளி என்பதே எனக்கு தெரியும் ! அவர் என்னிடம் எத்தனையோ வானொலிகளில் நான் கவிதை சொல்லியிருக்கிறேன் ஆனால் நீங்கள் தந்த அங்கீகாரம் எனக்கு யாருமே தந்ததில்லை ,உங்க வார்த்தைகள இரவுல கேட்கும்போது என் அத்தனை கவலைகளும் எங்க போகுதுனே தெரியல நீ நல்ல இருக்கனும்பா என்று என் கையை இருகப்பிடித்துக்கொண்டார் இவ்வளவு தூரம் வந்ததே உங்களிடம் இதை சொல்லத்தான் என்று சொல்லிவிட்டு கையில் கொண்டுவந்திருந்த சில இனிப்புகளையும் கொடுத்துவிட்டு தன் வழியே போக ஆரம்பித்தார் அவர் அப்பாவித்தனமான அன்பு தெரிந்த அந்த கண்ணில் என் இரண்டு வருட உழைப்பின் உண்மை பெறுமதியை நான் அப்போதுதான் உணர்ந்தேன்
நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் அவமானங்களும்
அப்படியே கரைந்து போனது , இதற்காகத்தானே அத்தனை உழைப்பு ? உண்மையில் எனக்கான உண்மை அளவீடும் இப்படியான உண்மை மனிதர்களிடம்தான் இருக்கிறது என்பதை சரியாக உணர்ந்த பொழுது அவர் என் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்... !

நிற்க ......

யாழ் பயணம் வெகு சிறப்பாக இருந்தது நீண்ட நாட்கள் பார்க்க ஆசைப்பட்ட மண் அது உணர்வுக்கொப்பளிப்புகளுக்கு அளவே கிடையாது சக்தி கலையகம் நல்லூரில் இருந்தாலும் நான் நல்லூரிலும் கலையகத்திலும் இருந்தது என்னவோ ரொம்ப குறைவான நேரம் தான் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு வெளியிலேயே செலவு செய்தேன் அத்தனையும் ரசித்தேன் என்பதை விட ருசித்தேன் என்றால் தவறில்லை ( இனியொரு முறை யாழ் பயணம் சாத்தியப்படாது என்ற உணர்வு மேலோங்கி இருந்ததால் இந்த பயணத்தை அங்குலம் அங்குலமாக அனுபவித்தேன் ) எல்லாம் தவிர்த்து யாழ் பயணம் சிந்தனை ரீதியான பல மாற்றங்களை எனக்குள் ஏட்படுத்தியிருக்கிறது பழகும் பலரின் நிஜ முகங்களை
கூட என்னால் யாழ் பயணத்தில்தான் தெரிந்து கொள்ள முடிந்தது பல ஊர்களுக்கு சென்று வீடு வீடாக நாம் நம் துறை அது தொடர்பாக மக்கள் சம காலத்தில் என்ன பார்வையை செலுத்துகிறார்கள் என்று பலதும் தெரிந்து கொள்ளக்கூடியாதாக இருந்தது (மக்கள் ரசனையில் எத்தனை மாற்றங்கள் வந்துவிட்டது ?)


வவுனியா கிளிநொச்சியை தாண்டும் போது உணர்வில் ஏற்பட்ட விசித்திரங்கள் எனக்கு புதுமையானவை , இதற்கு முன் எங்கும் எப்போதும் அறிந்திராத உணர்வு அது கிளிநொச்சியில் சில நேரம் என்னை அறியாமலே கண்கள் காரணம் இல்லாமல் ? கலங்கியது அந்த மண்ணை கூட பத்திராமாக கொண்டு வந்து என் வீட்டில் வைத்திருக்கிறேன் யாழ்பாணத்தில் எங்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு இது வரை அல்லது இனிமேல் வேறு ஒரு வானொலிக்கு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது .. அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றிகள் தனிப்பட்ட என் வானொலி நிகழ்சிகளுக்கு விமர்சனங்களை சொன்ன , எனக்காக பரிசுகளை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 12, 2011

எண்ணெய் மனிதர்களின் நடமாட்டம்


தலை தூக்கியிருக்கும் எண்ணெய் மனிதன் விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் சூடு பிடிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை இந்த எண்ணெய் மனிதன் விவகாரம் எனக்கு ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ தரவில்லை காரணம் சில நாட்களுக்கு முன் மலேசியா வின் பிரபல இணைய சஞ்சிகையான வணக்கம் மலேசியாவில் இதே போன்றதொரு செய்தி படித்திருந்தேன் ( இப்போதும் அந்த சஞ்சிகையில் இது தொடர்பான செய்தி இருக்கிறது ) இது எதோ அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதில் பின்னணி காரணவாதிகள் நினைத்தது பிசுபிசுத்துவிட்டது மட்டும் நிம்மதி காரணம் இப்போது மக்களிடம் வர குறித்த ஆசாமிகளே பயம் கொள்ளும் அளவிற்கு மக்கள் நையப்புடைக்கின்றனர் .,

இந்த மலேசியா எண்ணெய் மனிதர்களின் அறிய சேவைகளுக்கும் இலங்கையின் எண்ணெய் மனிதர்கள் செய்யும் சேவைகளுக்கும் பாரிய வித்யாசம் இல்லை
1 ) பெண்களை குறி வைத்தல்
2 ) பயமுறுத்தும் விதத்தில் ஆங்காங்கே அசையாமல் நிற்றல்
3 ) உடலை கீறிவிட்டு ஓடுதல்
4 ) நான்காவதும் , முக்கியமானது மலேசியாவில் போலவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்துவது ( அது எப்புடி ?)

இன்று மாலை வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் இந்த பிரச்சினையினால் சில உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன , மலையகத்தை பொருத்தவரைக்கும் இப்போது கொஞ்சம் பிரச்சினை அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது

T.V .க்கு போயிட்டோம்ல ?

என் கடந்த பதிவு ஐம்பதாவது பதிவு அதுவே இப்போதுதான் நிணைவுக்கு வந்தது அது ஒருபுறம் இருக்க ஆகஸ்ட்டு மாதம் முதலாம் (2011/08/01) திகதி ஊடகத்துறையின் இன்னொரு பரிமாணத்துக்குள் உள்வாங்கப்பட்டேன் இதுவரை குரலில் மட்டுமே வித்தை காட்ட கிடைத்த எனக்கு காட்சி ஊடகத்திலும் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதிலும் சக்தி டி வீ யில் இந்த அறிமுகம் இலகுவில் கிடைக்கமுடியாத ஒன்று காலை நேர நிகழ்ச்சியான good morning srilanka வில் முகத்தை எல்லோரும் கதற கதற காட்டிவிட்டேன் நீண்டகால கனவு என்பதால் இந்த வாய்ப்பையும் இறுகப்பிடித்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது இந்த வாய்ப்பை எனக்கு வழங்க பலவாறு முயற்சி செய்த கஜமுகன் அண்ணாவிற்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன் ! (ஆனாலும் கஜமுகன் அண்ணாவுக்கு தைரியம் ரொம்ப அதிகம்தான் என்னையெல்லாம் தொலைக்காட்சில காட்ட ஒரு தைரியம் வேணும் இல்ல ???)...ஆனாலும் ஒரு சின்ன கவலை அப்பா இருந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பார் ஹ்ம்ம்ம் ...............

Monday, August 1, 2011

"கலைக்காவலன்A. இராஜ்மோகன்"


"கலைக்காவலன் A.இராஜ்மோகன்"( பகுதி -1)

தனி ஒரு மனிதனை உயர்த்திப்பிடிக்கும் என் இன்னுமொரு பதிவு இப்படியான பதிவுகளை படிக்கும் போது வயிறு மற்றும் இதர உறுப்புகளில் எரிச்சல் ஏற்படும் என்று கருதுபவர்கள் இப்போதே வேறு பதிவுக்கு செல்வது உசிதம் ( அவ்வாறான எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல )

இன்றைய தேதிக்கு இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு முன்னணி வானொலிக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது சில நேரங்களில் அந்த அடையாளம் ஒரு அறிவிப்பாளராகவும் இருக்கிறது வெற்றியை பொருத்தமட்டில் லோஷன் அண்ணா அதன் அடையாளம் (வெற்றி என்றால் லோஷன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு ) , சூரியனை பொருத்தமட்டில் அங்கும் இருவர் அடையாளமாக இருக்கின்றனர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை )



மதிப்பிற்குரிய திரு . A.R.V லோசன் அவர்கள்


நான் சார்ந்த சக்தியை பொருத்தமட்டில் கடந்த ஒரு தசாப்த காலமாக பலரை தன் அடயாளமாக சுமந்திருக்கிறது அப்படி அடயாளமாக இருந்த பலர் வானொலிகளுக்கே புது வடிவம் கொடுத்தனர் என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது எழில் வேந்தன் அவர்களின் காலம் , இறுக்கமான அதே நேரம் அழகிய சரளமான தமிழில் ஒரு வானொலியாய் சக்தி வளம் வந்தது , அபர்ணாவின் வருகையை தொடர்ந்து இன்னும் இலகு தமிழில் சக்தி பட்டி தொட்டியெங்கும் கலக்கியது ( பாமரர்களுக்கும் சராசரி தோட்ட தொழிலாளர்களிடமும் சக்தியை அடையாளப்படுத்திய பெருமை அபர்ணா அண்ணாவையே சாரும் )


மதிப்பிற்குரிய திரு . R.P.அபர்ணா சுதன் அவர்கள்


அவருக்கு பிற்பட்ட காலத்தில் எந்த வடிவ மாற்றமும் இல்லாமல் ஒரே வடிவில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை தாக்கத்தை ஏட்படுத்தியிருந்தார் தமிழகத்தில் இருந்து வந்த மாயா இலகு தமிழில் அவர் காட்டும் வார்த்தை ஜாலங்களை ரசிக்காத வானொலி பிரியர்களே இல்லை என்று கூட சொல்லலாம் அவர் சக்தியில் இருந்த நாட்களில் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அணைத்து வகுப்பினரையும் உள்ளடக்கியது , படித்தவர் முதல் பள்ளிக்கூடமே செல்லாதவர்களை கூட வார்த்தைகளால் கட்டிப்போடும் ஒரு அற்புதமான கலைஞனாக விளங்கினார்


மதிப்பிற்குரிய திரு. மாயா அவர்கள்


... இப்படி அவர் காலத்தினை தாண்டிப்பார்த்தால் மறுக்க முடியாத , தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாய் தன்னை வளர்துகொண்டவர்தான் இந்த ராஜ்மோகன் ( இந்த பதிவின் கதாநாயகன் )

"ராஜ்மோகனும் சக்தியும்,ஓரமாய் நானும்"


மதிப்பிற்குரிய திரு . இராஜ்மோகன் அவர்கள்


எப்படி சக்திக்குள் வந்தார் யார் மூலம் வந்தார் என்பதெல்லாம் கிடக்கட்டும் ஆனால் ராஜ் அவர்களின் வருகையை தொடர்ந்து சக்தி ஒரு புதுமையான பரிமாணத்தை தொட்டது (அதை நான் வானொலி ரசிகனாய் உணர்ந்தேன் ) தமிழில் வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கொட்டும் இவருக்கு இலங்கை முழுவதும் ரசிகர்கள் ( நேயர் என்ற பதத்திற்கு பதில் இங்கு ரசிகன் என்ற பதத்தை பயன்படுத்துவதில் ஒரு நோக்கம் உண்டு சராசரி அறிவிப்பாளர்கள் எல்லோருக்குமே நேயர்கள் உண்டு ஆனால் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்கள் உண்டு யார் யாருக்கு என்பதை மேல் பந்திகளில் புரிந்து கொள்ளலாம் ) வானொலி விளம்பரங்களில் ( treilors) எமது வானொலிக்கென தனி ஒரு அடையாளத்தை ஏட்படுத்திக்கொடுத்தவர் ராஜ் , வானொலி ரசிகன் ஒருவன் என்ன எதிர் பார்ப்பான் அதை அப்படியே கொடுக்காமல் அவன் ஆச்சர்யப்படும் வகையில் கொடுக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு

இன்றைய திகதிக்கு சக்தியில் ஒலிபரப்பாகும் பல நிகழ்சிகளின் வடிவத்திற்கு இவர்தான் உரிமையாளர் ! இவரின் ஆளுமையால்
வானொலி நாடகங்கள் என்றுமில்லாத அளவு வீரியம் பெற்றன வந்திய தேவனை பற்றி பலகலைக்கழக கருத்தரங்குகளில் பேசப்பட்டது , வாராந்தரிகளில் முன்னணி நாளேடுகளில் பெருமையாக பேசப்பட்டது துணிந்து யாரும் தொடாத வந்திய தேவனை பெரும் செலவில் எமது வானொலியால் தயாரிக்கப்பட்டது அதை மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாக்கினார் ராஜ் , அதிகம் பயன்பட்ட , பயன்படாத , நம் நாட்டு தங்கங்களை ஒன்று திரட்டி தேடி தேடி வாய்ப்பு கொடுத்தார் , பிரபல நடிகர் கே. எஸ் . சந்திர சேகர் , ஜப்பு நாசீர், முது பெரும் நடிகர் ராஜா கணேஷன் , மகேஸ்வரி அம்மா , சில்மியா ஹாதி , புர்க்கான் பீ இப்திகார் , இளைய அறிமுகம் சஞ்சூபன் , அறிமுகம் தேவையில்லாத அசோக் பரன் , நிரோஜி, சம்ரத் , பிரகாஷ் , சில நேரங்களில் நான் என்று அத்தனை திறமைகளையும் லாவகமாக பயன்படுத்தி பல வெற்றிப்படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் , நெகிழ்வான ஒரு உண்மையும் உண்டு மறைந்த அமரர் சகல கலா வல்லவன் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் நாடகம் ஒன்றுக்கு கடைசியாக குரல் கொடுத்தது இவருக்காகத்தான் ( வந்திய தேவன் படைப்பில் )


வந்திய தேவன் கதை வசனக்கோர்வை

மணித்தியாலத்திட்கு ஒரு தடவை வரும் நகைச்சுவை பகுதிகள் இவர் காலத்தில் புது வடிவம் பெற்றது . . . அது வரை நகைச்சுவை என்ற பெயரில் இருந் நிமிடக்கனக்கான அலட்டல்களை இருபது செக்கண்களுக்குள் அடக்கி சிரிக்க வைத்தார் , இவரின் குபேரன் பட்டி தொட்டி எங்கும் ராஜ நடை போட்டது குழந்தைகளின் செல் பொம்மை ஆனான் குபேரன் , தந்திரன் இளையவர்களை கொள்ளையடித்தான் ,
அண்டா புளுகன் ஆகாச புளுகன் என்ற நிகழ்ச்சி வெறும் பதினைந்தே செக்கன்கள் நீடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஆனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கண்டது இப்படி எல்லாவற்றிலும் புதுமை எதிலும் புதுமையல் புகுத்தும் வல்லமை ராஜ்கே உரியது

இன்றைய திகதியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் அரேபிய இரவுகள் , மகா லக்ஷ்மி , தக்காளி தியட்டர் ,என்று அத்தனை படைப்புகளும் இவரின் இயக்கத்திலேயே சென்று கொண்டிருக்கிறது தக்காளி தியட்டர் வானொலிகளுக்கே புதிய வடிவம் , ( லொள்ளு சபாவின் பிரதி என்றாலும் வியாபாரத்தை மையநோக்காக கொண்ட வானொலி நிகழ்ச்சி என்ற வரம்பு மீறாமல் மாற்றி அமைத்துக்கொடுத்தவர் ராஜ் ). .. இவ் அனைத்து படைப்புகளிலும் பிரஷாந்த் ,ஹோசியா . சதீசன் , ரஜீவன் , அவ்வப்போது நான் என்று பல உதவி இயக்குனர்களையும் உருவாக்கினவர் இந்த ராஜ் மோகன்

இவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததின் உந்துதலால் அல்லது அது தந்த நம்பிக்கையினால் நான் உருவாக்கிய சுழியம் என்ற மர்ம விவரண நிகழ்ச்சி சக்தியின் மெகா ஹிட் நிகழ்ச்சி ! கொழும்பு தமிழ் சங்கத்தில் இவரின் குரலில் தமிழ் ஒலிக்காத வார இறுதிகளே இல்லை என்றளவில் இருக்கிறது நிகழ்காலம் ...... இப்படி இலங்கையில் ஒரு வானொலி அறிவிப்பாளன் படைப்பாளன் பெற வேண்டிய அதி உச்சத்தை தொட்டு சத்தமில்லாமல் வாழும் ஒரு அற்புதமான மனிதன் ( (இவையனைத்தும் அவரோடு பணி புரிந்தபோது நான் நேரடியாக கண்டவை சில விடயங்கள் குறிப்பிட தவறியும் இருக்கலாம் )


தொடரும் ................

Saturday, July 9, 2011

தெற்கு சூடான் விடுதலை



"50 வருடகால போராட்டத்தின் முடிவில் கருப்பு தேசம் ஒன்றிற்கு வைர விடுதலை இருபது லட்சம் ஆத்மாக்களை காவுகொண்ட குழல் துப்பாக்கி அரக்கர்களாலும் கேவலமான சித்திரவதை கூடங்களாலும் தடுக்க முடியாமல் போன நியாயத்தின் வெற்றி ! புதிய தேசத்திற்கு தமிழனாய் வாழ்த்துகிறேன் !

Tuesday, July 5, 2011

"தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே "



ஆவணப்படம் பார்த்து அதிர்ந்த பலரில் நானும் ஒருவன் , பாதிக்கு மேல் உடல் நடுக்கம் எடுக்கவே நிறுத்திவிட்டேன் (நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல்தான் ) மறுநாள் வெற்றியின் லோஷன் அண்ணாவின் பதிவில் ஆவணப்படம் பார்த்த அவரின் உணர்வை கவிதையாக தீட்டியிருந்தார் , அதுவும் அதன் பங்குக்கு என் சட்டையை பிடித்து கேள்வி கேட்க எல்லாமே நாம் வாழும் காலத்தில் தானே நடந்திருக்கிறது என்றால் நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல் தானே ?, கையாலாகாத பேடிப்பயல்தானே ? அனால் ஒன்று மட்டும் உண்மை இரண்டாயிரம் வருடங்கள் மூத்தகுடியின் அடக்கப்பட்ட ஓசையை பறை ஓசை சாற்றுவது போல் இனி என் தமிழனுக்கு இப்பேற்பட்ட அவலம் எந்த யுகத்திலும் வராது என்றளவுக்கு அந்த காட்சிகள் எங்கள் அழு ஓலங்களை உலகம் முழுக்க சத்தமிட்டிருக்கிறது !

இதற்கு மேல் இதை பற்றி பேசும் எழுதும் தைரியம் இருந்தால் நான் ஏன் காட்சிகளை பாதியிலேயே நிறுத்த போகிறேன் ?

Monday, July 4, 2011

ஹி ஹீ ஹி ஹீ .....



எங்கள் அலுவலக வளாகத்தில் எப்போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தோசங்களுக்கும் பரபரப்பிற்கும் கொஞ்சமும் குறைவிருக்காது விளையாட்டாக பேசும் பல விடயங்கள் வானொலியில் நிகழ்சிகளாக படைத்து மக்களிடம் வரவேற்பும் பெரும் அனுபவங்களும் அலாதியானவை
சம காலத்தில் நடக்கும் கடுமையான விடயங்களைக்கூட வெகு நகைச்சுவையாக சமைத்து கொடுப்பதில்
எங்கள் ராஜ் அண்ணாவுக்கு நிகர் அவர்தான் எனக்கு அவர் குரு என்பதால் பல விடயங்களை கற்றுக்கொடுப்பார் அப்படி ஒருநாள் நடந்த ஒரு சுவாரஷ்யமான உரையாடல்

நான் - அண்ணா அது என்ன சாகசத்தொடர்?
ராஜ் - க்ரிஷ் கவனிச்சுக்கோ யானை நடக்கிறது தொடர் ,
யானை ஓடுகிறது வீரத்தொடர்
அதே யானை பறக்கிறது சாகசத்தொடர்

( எனக்கு புரியிரா மாதிரி சொல்லுராராமாம் நான் தலையாட்டிக்கொண்டிருக்கிறேன் எங்கிருந்தோ வந்த சக அறிவிப்பாளர் பிரசாந்த் விட்டாரே ஒரு கமெண்ட் ...)

பிரசாந்த் - ராஜ் அப்ப யானை அழுகிறது மெகா சீரியலாடா ??????????

தாலாட்டு பாடவா



எங்கள் வானொலியில் என்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பல நிகழ்சிகளை நான் அனுபவித்து ரசித்து வழங்குவதுண்டு . நேற்றைய கவிராத்திரி தாலாட்டு பாடவா என்ற தலைப்பில் நகர்ந்தது .வழக்கம் போல சக்தி கவிஞர்கள் தங்கள் பங்குக்கு அசத்த என் பங்குக்கு திடீரென நிணைவுக்கு வந்த சில வரிகளை சிந்திக்க முன் என் மைப்பேனா கிறுக்கியது ....

வலிக்கிறது .....
என்ன என்ன வலிக்கிறது .....
நினைக்க் நினைக்க நெஞ்சு விம்மி வெடிக்கிறது ....
என்ன அவசரம் உனக்கு ...

வெட்டிப்பயளிவன்
வெறும் பயலிவன்
கடைசிவரை அப்படித்தான் என்று நீயாய் முடிவேடுத்தாயோ

இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ

தகப்பன் மட்டுமா நீ எனக்கு
தங்கத்தின் தங்கம் அல்லவே
அப்பன் அல்ல நீ எனக்கு அதையும் தாண்டி..
பொன்னல்லவே நீ ?
தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய்
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?

உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மருஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ....

Saturday, June 11, 2011

ரஜினி ரஜினிதான்

"ரஜினிகாந்த அவர்கள் நலம் பெற உலகம் முழுவது நடந்த பிரார்த்தனைகள் கைகொடுத்துள்ளது விரைவில் தமிழகம் திரும்ப உள்ளார் ரஜினி நான் அதிகம் படிக்கும் ஒரு இணையதளமான என் வழி இணையத்தில் எனக்கு ரொம்ப பிடித்த ஒரு ஆக்கத்தை இங்கு உங்களுக்காய் தருகிறேன் வெளி உலகத்திற்கு நல்லவர்களாய் காட்டிக்கொள்ளும் பலர் யோசிக்காமல் பட்டென சொல்லும் பதில்கள் அவர்களின் உண்மையை காட்டிவிடும் இந்த செவ்வியில் ரஜினி அவர்கள் சட்டென சொல்லும் பதில்களிலும் அவரின் நிதானத்தை பாருங்கள் உண்மையிலேயே ரஜினியை பலர் வழிகாட்டியாக ஏற்றுகொண்டதில் தவறேதும் சொல்வதற்கில்லை"


இதுவும் ஒரு ஃப்ளாஷ்பேக்தான்… 1981- பிப்ரவரி மாதம், திருமணமான புதிதில், கணவர் ரஜினியை மனைவி லதா பேட்டி எடுப்பதுபோல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி அது.

ஒருபேட்டி எடுக்கப் போய்தான், ரஜினியின் மனதைக் கவர்ந்து மனைவியானார் லதா என்பதால், திருமணத்துக்குப் பின் இன்னொரு பேட்டி எடுக்க வைத்தார்கள் போலிருக்கிறது.

ரஜினி, லதா இருவருமே இதற்கு உற்சாகமாக சம்மதித்தனர்.

அப்போது, லதா கேட்ட கேள்விகளும் ரஜினி அளித்த பதில்களும் இதோ:

லதா: நீங்கள் எனக்குப் பதிலாக ஒரு சினிமா நடிகையை மணந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும்?

ரஜினி: சினிமா நடிகையும் ஒரு பெண்தானே!

லதா: படப்பிடிப்புக்குப் போய்விட்டு வீடு திரும்பும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

ரஜினி: எனக்கு என்ன தோன்றும் என்று உனக்குத்தான் தெரியுமே! எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?” (‘வேண்டாம்’ என்றார், லதா வெட்கத்தோடு)

லதா: ‘ஏன் கல்யாணம் செய்து கொண்டோம். பிரம்மச்சாரியாக இருந்திருக்கக்கூடாதா’ என்று எண்ணியதுண்டா?

ரஜினி: உன்னோடு வாழும் வாழ்க்கையை நினைக்கும்போது, கல்யாணத்தை எவ்வளவு தாமதமாகச் செய்து கொண்டோம் என்று வருத்தப்படத்தான் தோன்றுகிறது.

லதா: வசதியான வீடு, மனத்திற்கேற்ற மனைவி, சினிமாப்புகழ் இந்த மூன்றையும் தவிர வேறு எதை விரும்புகிறீர்கள்?

ரஜினி: என் தனித்தன்மையை.

லதா: என்னிடம் இதுவரை சொல்லாத ரகசியமோ, மறைத்து வைத்த விஷயமோ உண்டா? இருந்தால் ஏன் சொல்லவில்லை?

ரஜினி: என்னிடம் எந்த ரகசியமும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நீயே இப்படி ஒரு கேள்வி கேட்கிறாயே, நியாயமா?

லதா: ஒரு மனைவியின் முதல் குழந்தை கணவன் என்கிறார்களே, அதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

ரஜினி: என்னைப் பொறுத்தவரை ஒப்புக்கொள்கிறேன்.

லதா: குடும்ப வாழ்க்கையில் என்னை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு எது அடையாளம்?

ரஜினி: நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதுதான் அடையாளம்.

லதா: ஒரு பிரபல நடிகரின் மனைவியாகிய எனக்கு, உண்மையான மகிழ்ச்சி எதில் அடங்கியிருக்கிறது?

ரஜினி: என்னுடைய மகிழ்ச்சியில்.

லதா: என்னைப் போலவே யாராவது டெலிபோனில், ‘நான்தான் லதா பேசுகிறேன்’ என்று சொன்னால் நீங்கள் நம்பிவிடுவீர்களா?

ரஜினி: என் ஜில்லுவின் குரல் எனக்குத் தெரியாதா என்ன?

லதா: மனம் விட்டுச் சொல்லுங்கள். என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எது?

ரஜினி: முன்பின் தெரியாமல் எல்லோரிடமும் கருணை காட்டுவது!


-நன்றி என் வழி குழுவினர் மற்றும் திரு. வினோ -

"தமிழக முதல்வரும் நம்மவர் தீர்மானங்களும் "



அடுத்தடுத்து அதிரடியாய் அடிதடியாய் நகர்கிறார் அம்மையார் முதுகெளும்புடைந்துபோன கருணாநிதியின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது! அதே சமயம் கடந்த கருணாநிதி ஆட்சியின் தடங்களை அழிப்பதில் மும்முரமாகவும் ஈடுபட்டிருப்பதனால் தற்போது தமிழக சட்டமன்றத்தில் நம்மவர்கள் தொடர்பாக முதல்வர் அவர்கள் நிறைவேற்றியிருக்கும் தைரியமான ஆச்சர்யமான தீர்மானங்களின் நீடிப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பாக எனக்குள் சில கேள்விகளை எழுப்புகின்றன நான் இப்படி சொல்வதில் அர்த்தம் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் கடந்த வரலாறு முழுக்க பார்த்தால் தெரியும் கருணாநிதி எதை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதை அவருக்கு நேரெதிர் செய்பவர்தான் தமிழகத்தின் தற்போதய முதலவர் எனவே கருணாநிதி நம்மவர்கள் தொடர்பாக நடந்துகொண்ட விதத்தின் மறுபக்கத்தை அம்மையார் செய்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை அம்மையாரின் இந்த அடி தமிழரின் மூத்த தலைவன் என்று கொக்கரிக்கும் கருணாநிதியின் வாழ்கையில் வாங்கிய மரண அடி நல்ல பாடம்



ஆனால் ஜெயலலிதா அவர்களின் அவதாரத்தினால் இந்திய மத்தி கூட ஆடிப்போய்விட்டத்தை மட்டும் புறக்கணிக்கமுடியாது மறுபக்கம் இந்திய காங்கிரஸ் கட்சியினர் அடுத்த தேர்தலில் ஜெயலிதாவுடன் இணையவேண்டும் என்ற அழுத்தங்களை காங்கிரஸ் கட்சியின் உள்ளுக்குள்ளேயே உள்ளவர்கள் கொடுத்துவருவதாக சில நாளிதழ்களில் நான் படித்தேன் எனவே தமிழகமுதல்வரின் காங்கிரஸ் எதிர்ப்பு போக்கு எவ்வளவு காலம் என்பதை இப்போதைக்கு ஊகிக்கமுடியாதுள்ளது எது எப்படியோ தற்போதைக்கு ஜெயலலிதா அவர்களின் போக்கு தமிழரின் நம்பிக்கை !

மீண்டும் சனத் ஜெயசூரிய



இலங்கை அணியில் மீண்டும் சனத் இணைக்கப்பட்டமை குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது ... பல்வேறுபட்ட இணைய தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் இது தொடர்பான நிறைய சாதக பாதக கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ள இந்த நேரத்தில் நானும் சில கருத்துக்கள் பகிர நினைத்தேன் சாதாரண ஒரு ரசிகனாக சனத்தின் மீள் வருகை நான் மிக நீண்ட காலம் எதிர்பார்த்தது ஒன்று அந்த வகையில் மீண்டும் களத்தில் துடுப்போடு அவரை பார்க்க கிடைத்தது எனக்கு சந்தோசம் ( அடித்தாலும் அடிக்காவிட்டாலும் )"பாதம் தலை என்று எல்லாவற்றையும் சரி செய்துகொண்டு . பந்தை எதிர்கொள்ள சனத் களத்தில் நிற்கும் போது மனதுக்குள் எழும் அச்சம் கலந்த ஆர்வம்" எனக்கு இன்றுவரை வேறு எந்த துடுப்பாட்ட வீரர் ஆடும்போதும் எழுந்ததில்லை



பார்த்துட்டே இருந்தா எப்டி பாஸ் ?... சீக்கிரம் கிளம்புங்க

சனத்தின் தீவிர ரசிகனான எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒரு கவலை சனத் சரியான முறையில் அணியில் இருந்து உரிய மரியாதைகளுடன் வெளியேறவில்லை "ஒரு விளையாட்டு வீரன் புகழின் உச்சியில் இருக்கும் போதே (போதும் என்றளவு சாதித்து விட்டால் ) இளையவர்களுக்கு இடம் கொடுத்து கௌரவமாய் விலக வேண்டும்" என்று பிரபல கிரிக்கட் விமர்சகரான வெற்றியின் லோஷன் அண்ணா சொல்வது சனத்துக்கு சாலப்பொருந்தும்...



தவிரவும் களத்தில் துடுப்போடு பார்த்த இவரை கையில் மைக்குடன் அரசியல் மேடைகளில் ஐயோ சகிக்கல! சிறந்த அணியாக தன்னை மெருகேற்றிக்கொண்டிருந்த சிம்பாப்வே அணியின் தற்போதைய நிலை இலங்கைக்கும் வந்துவிடுமோ என்று எனக்கு கொஞ்சம் விபரீதமான பயம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறது பாமரத்தனமான பயமாகவும் இருக்கலாம் ஆனால் இலங்கை அணி சமகாலத்தில் இங்கிலாந்தில் விளையாடும் விதம் அந்த பயத்தை எனக்குள் தோற்றுவித்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை எது எப்படியோ இங்கிலாந்து தொடரில் கௌரவ பாராளமன்ற உறுப்பினர் சனத் அவர்கள் நல்ல இனிங்க்ஸ் ஒன்றுடன் சர்வதேச கிரிக்கட்டுக்கு விடை கொடுத்தால் நல்லது ஒரு வேலை இந்த போட்டியிலும் நல்ல இனிங்க்ஸ் இல்லை என்றால் மறுபடி இன்னுமொரு போட்டியில் விளையாடினாலும் ஆச்சர்யப்படுவதட்கில்லை!!!

Friday, June 10, 2011

"இசைகேட்டு வளர்ந்தேன் "



‎"இவரின் பாடல்கள்தான் சிறந்தது அவரின் பாடல்கள்தான் சிறந்தது என்று என் காதுபட பலர் சண்டைப்பிடிக்கிறார்கள் என்னால் 1950 களில் இருந்து இன்று வரை உள்ள எத்தனையோ பாடல்களை ரசிக்கமுடிகிறது .... நல்ல இசை என்பதை இசையமைப்பாளர் நிர்ணயிப்பதில்லை அது கேட்பவனின் காதினாலும் மனதினாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது "

Wednesday, June 8, 2011

"விருப்பமில்லா இரவுகளின் நீளம் கொடுமையானது "

"என் வாழ்நாளில் நான் போக கூடாத உயிரே போனாலும் போகவே கூடாத ஒரு இடமாய் எப்போதும் கருதுவது வைத்தியசாலைதான் மருந்து வாடை .நோயாளர்களின் முனகல் ., நர்சுகளின் அலட்டல் , டாக்டர்களின் முகம் , கொடூர முதுமை அல்லது முதுமையை கொடூரமாக்கிக்கொண்டவர்கள் , மரணத்துக்காய் காத்திருக்கும் மனிதர்களின் விரக்தி புன்னகை, , ஊசி வலிக்காய் அண்டம் சிதற கத்தும் குழந்தைகளின் அழுகை என்று வைத்தியசாலை அநியாயத்துக்கு மிரட்டுகிறது என்னை (இவை எனக்கு எப்போதும் ஒட்டாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்ததலோ என்னவோ அப்பாவின் ஆசைப்படி வைத்தியர் ஆக எனக்கு ஒரு பொறி அளவு எண்ணம் கூட வரவில்லை)



பல முறை அப்பாவுக்கு துணையாய் கொழும்பு ஆதார வைத்தியசாலையில் என் இரவுகளை நான் கழித்திருக்கிறேன் ... வாழ்நாள் முழுதும் மருந்தே உணவாகிப்போன அவருக்கு வைத்தியசாலை ஒன்றும் புதிதல்ல ஆனால் அங்கிருந்த ஒவ்வொரு நொடியையும் பல்லை கடித்துக்கொண்டு (அப்பாவுக்காக ) நான் சகித்துக்கொண்ட நாட்கள் இனிதிரும்பவே கூடாது என்றும் யாருக்கும் வரக்கூடாது என்றும் தினம் இரவுகளில் நினைப்பதுண்டு

உண்மையில் இப்போதெல்லாம் நேரம் நகரும் வேகம் கற்பனைக்கும் எட்டுதில்லை .... எப்படி நேரமானது என்றுகூட ஸ்தம்பிக்கிறேன் ஆனால் வைத்தியசாலைகளில் நான் கழித்த நொடிகள் மட்டும் ஏன் அவ்வளவு நீளமாய் இருந்தது ????
இன்றளவு வாழ்க்கையில் குறைந்த வேகத்தில் நேரத்தின் பயணம் அந்த வைத்தியசாலைகளில் தான் நான் உணர்ந்திருக்கிறேன் "

Tuesday, June 7, 2011

போங்கையா நீங்களும் உங்க பேச்சுவார்த்தையும் "



என்ன அண்ணாச்சி நீங்க? மறுபடியும் இப்டி பண்ணிட்டீங்களே ...அண்ணாச்சி இந்த முறை உங்கள எப்டியும் மந்திரி ஆக்கி அனுப்பியே தீரணும்னு நம்ம படிச்ச பயபுள்ளைக சொன்னதால தான் அனுப்பினோ ...எனக்கு படிக்க வராது பாருங்க அதக்காக எத்தன வாட்டி இப்டி எங்கள காட்டிக்கொடுப்பீங்க மூணு பேரா மொத்தமா அள்ளிக்கிட்டு பார்லிமென்ட் போகும்போதே நெனச்சேன் இந்த வாட்டி நம்மாளுகளுக்காக ஏதோ பெருசா கிழிச்சி கோர்துடுவீங்கனு

அதே மாதிரி பிரிச்சு மேஞ்சிடீங்க போங்க நாலு புள்ளைகளோட நானும் மனுசியும் விழுந்து விழுந்து வேலை செஞ்சும் ரொட்டிக்கு மாவு வாங்க பெட்டிக்கடைல கால்கடுக்க நிக்கிற வேதனை உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லீங்க
மூனாவது பொண்ணு படிக்கிறதுக்கு புஸ்தகம் கேட்டு நிக்கிறப்போ பயலுக்கு வகுப்பு பீசு கொடுக்க இருந்த காசுல பாதிய குடுத்துட்டு திரும்புரப்போ வயசுக்கு வந்த ரெண்டாவது புள்ளைக்கு சடங்கு சுத்த காசு இல்லாம பொண்டாட்டி தாளித்துண்ட எடுத்துகுட்டு வட்டிக்காரன்கிட்ட போறப்போ மனசுக்குள்ள நான் அழுகுறது என் பொண்டாட்டிக்கே தெரியாது உங்களுக்கு எங்க தெரியப்போவுது

காய்ச்சல் தும்மல் வந்தா கூட சாய்த்தன்னிய குடிச்சுபுட்டு மலைய உட்டு எறங்காம வேல பாக்குற அவளுக்கு நா எப்டி ஆறுதல் சொல்லறது ? ... நா என்ன தொன்நூராயிரமா சம்பளம் கேட்டே ? ... ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா வாங்கி தர முடியாதா ? உண்மைல மோதலாளிமாரோட மாசக்கணக்க அப்டி என்னதான் பேசுறீங்க ...இந்த நூறு ர்ரோவா வாங்கத்தான் ஆயிரக்கணக்குல செலவு பண்ணிட்டு மீட்டிங் போடீங்கலாகும்

முன்னூத்தி என்பது ரூபா எனக்கு போதும்னு நீங்க எப்டி முடிவு பண்ணுவீங்க ...நீங்க என்ன எனக்கு சகலையா இல்ல சம்மந்தியா ...... இல்ல மாசத்துல பதினஞ்சு நாள் என்கூட மலைல ஏறி கூட சொமக்குறீங்களா தேர்தல தவிர எப்பவாவது உங்கள நேர்ல நான் பார்த்தா நெனவே இல்லையே ...நீங்க எவ்ளோதான் எங்க வயித்துல அடிச்சாலு வலிக்குமா எங்களுக்குன்னு ? வடிவேலு சொல்றமாதிரி நாங்களும் ஒவ்வொரு தேர்தளுளையும் அனுப்பிட்டுதான் irukkom நம்ம புள்ளைகளோட புள்ளைங்க என்னைக்காவது இந்த பாவத்துக்காக எங்களை காரித்துப்புமேயா ?

அது சரி எனக்கு பிரச்சன இருந்தா தானே உங்களுக்கு பதவி ...இந்த பயளுகலாவது உருப்படியா நாலு எழுத்து படிச்சு இங்கயே ஒரு வேலைய செஞ்சி எங்கள வேலைய விட்டு நிப்பாடுவானுங்கனு பார்த்தா அவனுங்களும் கொழும்புக்கு பொய் ரொட்டி அடிக்கிறேனுதான் இருக்கானுங்க அவனுங்க பயலுகலாவது படிச்சு எங்க ஆத்மாவயாவது சந்தோசப்படுத்தட்டும் .... அப்பயாவது ஐநூறு ரூபா வாங்கி தருவீங்களா அண்ணாச்சி!!! ?? ..

Sunday, June 5, 2011

விருது



கொழும்பு பல்கலைக்கழகத்தின் தமிழ்சங்கம் நடாத்திய முத்தமிழ் விழாவில் ... சக்தி வானொலியின் சமகால நிகழ்ச்சி தயாரிப்பாளரும் ,

வானொலி நாடக இயக்குனருமான .திரு ஆ .ராஜ்மோகன் அவர்களுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது .... இலங்கையில் வானொலி துறையில் ஒருவருக்கு இவ்வாறான விருதுகள் கிடைப்பது என்பது மிக அபூர்வமான விடயம்

உண்மையில் இந்த விருது இவருக்கு கிடைத்தமை விருதுக்கு மட்டுமல்ல விருதை அளித்தவர்களுக்கும் கிடைத்த பெருமையாகவே நான் சொல்வேன் அப்படி நான் சொல்வதற்கு சில உதாரணங்களை சொல்கிறேன் .... அதற்கு முன்னாள்

யார் இந்த ராஜ்மோகன் ?

எதற்காக இவருக்கு இப்படி விருது வழங்கப்படவேண்டும் ?

அப்படி என்ன மற்றவர்கள் செய்யாததை ( இலங்கையின் வானொலி அறிவிப்பாளர்கள் ) இவர் செய்து விட்டார் ?

விரைவில் ,.நட்சத்திரவீதியில்..............

Thursday, May 19, 2011

"படிக்காதீங்க அடிக்காதீங்க "

கொஞ்சம் ஒரு மாதிரியான ஜோக்
படிக்கிரீங்கலா? திட்டமாட்டீங்களே?

இடம் - முதலிரவு அரை பாத்திரங்கள் - கணவன் மனைவி
காட்சி - பாலுடன் மனைவி உள்ளே வருகிறாள் , கணவன் அருகில் அமர்கிறாள் இருவரும் ஒருவரை ஒருவர்..................... ஒருவரை ஒருவர்............................ ஒருவரை ஒருவர் ........பார்த்துக்கொள்கின்றனர் ..(ஹீ ஹெஈ )



அப்போது ...

கணவன் - அன்பே உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?

மனைவி - ஹ்ம்ம்ம்

கணவன் - அது அது........ கல்யாணத்துக்கு முன்னால உன் இதயத்தை யாராவது தொட்டு இருக்காங்களா?

மனைவி - அது .... வந்து ...சீ போங்க....

கணவன் - என்கிட்டதானே சொல்லு ....

மனைவி - நீங்க வேர அத மட்டும்தான் இன்னும் எவனுமே தொடல ஏங்க அப்டி?

ஓடினான் ஓடினான் .....விடியும் வரை ஓடினான் .....

Saturday, April 30, 2011

அம்மி மித்தித்து !

உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க ... வேல்சின் இளவரசர் திருமணம் நடந்து முடிந்தது ... இந்த வேல்சின் பட்டத்திற்குரிய இளவரசர் ... மன்னர் ... மகாராணி இதெல்லாம் ரொம்ப பழைய விஷயம் ... ஆனால் ஒரு சின்னமாக இன்னமும் இந்த பதவிகளை வைத்திருக்கும் பிரித்தானியன் பிரித்தாநியன்தான் ....
இந்த மேற்கத்திய சமாச்சாரங்களில் எனக்கு எப்போதும் துழியளவும் இஷ்டம் கிடையாது ஆனால் யதார்த்தவாதி வெகுசன விரோதி என்பதுபோல என் நிலைமையும் ஆகிவிடும் என்று பயந்து ஊரோடு ஓடுகிறேன் .... அனால் பழமை போற்றுவதில் எப்போது பிரித்தானியர்கள் முதலிடம்தான் ... ஒட்டு மொத்த பிரித்தானியாவிலும் அன்றைய தினம் விடுமுறை ... அத்தனை மக்கள் சேவைகளும் இலவசமாக ... இப்படி ஒட்டு மொத்த பிரித்தானியாவின் ஆசிகளுடன் இந்த திருமணம் நடந்தது இத்தனைக்கும் இந்த வேல்ஸ் அரச வம்சத்திற்கு அங்கு எந்த அதிகாரமும் ஆட்சியில் கிடையாது !



கல்யாண வீட்டுக்கு போய் இருக்கீங்களா ? போய் எத்தனை நாள் இருந்து இருக்கீங்க? ... நான் பிறப்பிலேயே சுத்த கிராமத்தான் என்பதால் உண்மை திருமண வைபவம் என்பது என் கண்களுக்குள் எப்போதும் நிழலாடும் ... பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து ... அழைப்பிதல் அடித்து ...ஒரு சொந்தம் விடாமல் ஒரு நண்பன் விடாமல் ,,, பார்த்து பார்த்து அத்தனை பேருக்கும் கையிலேயே கொண்டுபோய் வைத்து "ஒரு வாரம் முன்னாடியே வந்துடுங்கப்பா " என்று அன்பாக கட்டளை இட்டு விட்டு ... மீண்டும்

வந்து திருமணத்துக்கு தேவையான அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு வந்து நிற்பவர்களையும் குறைவின்றி கவனித்துக்கொண்டு திருமண நாள் நெருங்கும் சந்தோசமான நேரத்தில் ஒரு பிரச்சினை வரும் " தாய் மாமன் நான் நான்... உயிரோட இருக்கேன் எவண்டி உன் கழுத்துல தாலி கட்டுவான் நானும் பார்துடுறேன் ...சுத்தி தேடி பார்த்தா குரல் கொடுத்தவர் சொந்தத்தின் சொந்தத்துக்கு தெரிந்த வகையில் தெரிந்த சொந்தமாக இருக்கும் அவனையும் சமாதானப்படுத்தி சிரிக்க வைத்து முறைத்தால் அவனுக்கும் பயந்து ....

முன்கூட்டியே ஒரு வாரம் முன்னாள் அத்தனை நெருங்கிய சொந்தங்களும் பந்தங்களும் ஒரே இடத்தில் கூடி செம ரகளையா இருக்கும் எப்போதாவது ஒரு தடவை இந்த மாதிரி விசேசங்களில் மட்டுமே காணக்கூடிய உறவுகள் தங்கள் பழைய நினைவுகளை மீட்டுப்பார்ப்பதும் கூடவே புதிதாய் அறிமுகமாகும் சின்ன குழந்தைகளின் ஆட்டம் பாட்டம் வீட்டையே அதிர வைக்க உறக்கம் வந்தால் தானே தூக்கம் திருமண நாளுக்கு முன்னாடியே மண்டபத்தை அலங்காரம் செய்து விட்டு .. இரவிரவாக வேலை செய்து .... ( முன்னாடியே ஒரு வாரம் தூக்கம் இருக்காது ......)



மணவறையில் உட்காரவைக்க மணமகளை தயார் படுத்த ஒரு தோழிமார் கூட்டம் .... மாப்பிள்ளையை தயார் படுத்த ஒரு நண்பர் கூட்டம் கூட்டம் ...( சில நேரங்களில் இந்த இரு தரப்பிலும் யாருக்காவது காதல் பத்திக்கொண்டு அது அடுத்த திருமணமாகவும் அமையும் அது வேறு கதை ) அத்தனை சடங்குகளும் முடியும் மட்டும் பொறுமையாக இருந்து ... அத்தனை உறவுகள் கண்பார்க்க தன் வாழ்க்கைத்துணையை பரஸ்பரம் கைபிடிப்பர்

இது எல்லாவற்றுக்கும் மேல் திருமண மண்டபத்திற்கு வரும் உறவுகள் அத்தனை போரையும் சரி விகிதத்தில் கவனிக்க வேண்டும் யாரையாவது கொஞ்சம் முறைத்தாலும் போதும் ..( டேய் என்ன எவேண்டா மதிக்கிறீங்க ? ... டேய் வாடி இனி ஒரு நிமிசமும் இங்க இருக்க வேணாம் என்று ஒரு பட்டாலத்தியே கூட்டிக்கொண்டு கிளப்பிடுவாங்க ... அட நான் சொல்லறத கேளுங்க மச்சான் இங்க வாங்க என்று அவனை சமாதானப்படுத்த முன் போதும் போதும் என்றாகிடும் ...

சாப்பிடும் போது வருமே அதுதான் உச்சகட்டம் சமைத்த சாம்பாரை கூட சரி அளவில் போடணும் இல்லனா "டேய் எனக்கு அதிகமா சாம்பார் போடலடா டேய் எனக்கு இங்க மரியாத இல்லடா என்று அங்கும் ஒரு பிரச்சினை" ..... சாந்தி முகூர்த்தத்துக்கு அன்றே நாள் சிறந்தது என்றால் பரவாயில்லை கொஞ்சம் தள்ளிப்போனாலும் நாள் குறிக்கும் வரை புது ஜோடி படும் பாடு இருக்குமே ஹையோ ......


இப்படி பல இன்பமான தொல்லைகளுடன் ஒரு திருமண வைபவம் முடிய ஒரு மாதம் ஆகிவிடும் .....இப்போ அப்டி எல்லாம் இருக்கா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை கல்யாணத்துக்கே பொண்ணு மாப்ள அரை நாள் லீவு போட்டுட்டுதான் வர்றாங்க...... உண்மையில் இப்படி நாள் போக போக கட்டிக்காக்க வேண்டிய பழமையோடு மனிதத்துக்கு தேவையான மனித நெருக்கங்களும் கரைவதில் எனக்கு உடன்பாடு இல்லை .... காரணமாக உலகத்தின் வேகம் சொல்லப்படுகிறது பொருளாதாரம் சொல்லப்படுகிறது ..நாகரிகமும் சொல்லப்படுகிறது .. இவை அனைத்துமே சப்பைக்கட்டுத்தான் திருமண வைபவம் என்பது ஒரு சமூகத்தின் அடயாளம் .... அடயாளத்தை தொலைத்து விட்டு ஒரு சமூகம் இருந்தென்ன இல்லாமல் என்ன? ராயல் திருமணத்தை உலகம் முழுதும் ரசித்ததே ஒழிய அந்த வைபவத்தில் அச்சு அசலாக பேணப்பட்ட பழமையை மட்டும் கவனித்ததாக தெரியவில்லை

எங்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரமும் நா நுனியில் ஆங்கிலமும் இருக்கின்றதே ஒழிய மேலைதேசத்தவர்கள் இப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள் சிந்திக்க வேண்டும் ( இப்படி ஒரு திருமணம்தான் எனக்கும் தேவை ... நடந்தால் நான் அதிஷ்டசாலி )

Monday, April 18, 2011

எனக்கு ஏன் அஜித் (தல ) பிடிக்கும் ?

எனக்கு எப்போதும் அஜித்குமாரை ரொம்ப பிடிக்கும்  மிக இயல்பான இவரின் நடவடிக்கைகள் வெளியுலகிற்கு இவர் தோன்றும் விதம் போராடும் குணம் , வெளிப்படையான பேச்சு ... எல்லாவற்றையும் தாண்டி தனித்துவமான இவர் நடிப்பு எல்லாவற்றையும் ரொம்ப ரசிப்பேன்



இப்படியெல்லாம் நான் ரசிக்கும் நம்ம தல கடைசியாக நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் நடந்துகொண்ட விதம் உண்மையிலேயே ஆச்சர்யத்தை தருகிறது ... பல திரை நட்சத்திரங்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேட்ற வந்த இடத்தில் நடந்துகொண்ட விதம் பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையில் அனைவரின் பார்வையும் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டார் நம்ம தல வாக்களிக்க வந்த இடத்தில் எந்த சலனமும் அவசரமும் இல்லாமல் சிரித்த முகத்துடன் மக்களோடு மக்களாக வரிசையில் நின்றிருந்து எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்து விட்டார்



மேக்கப் இல்லாமல் கழிவறைக்கு கூட போக அடம்பிடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் அஜித் அஜித்தான்



என்னதான் இருந்தாலும் இந்த வேகாத வெயிலில எப்டிதான் இந்த கோர்ட் போடுறாரோ



கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரம் மக்களோடு மக்களாக !





இப்படிப்பட்ட ஒரு இயல்பான மனிதனை ரசிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
(படங்கள்- நன்றி indiaglitzz )

Saturday, April 16, 2011

நடு நிசி நாய்கள் (மனிதர்களுக்கு அல்ல)



அழுக்கில் கிடக்கும் நெல்மணியை பொருக்கி திண்ண முடியுமா?

தின்னச்சொல்கிறார் நம்ம கெளதம் மேனன் ... ஒன்னும் இல்ல நடு நிசிநாய்கள் படம் பார்த்தேன் ( தவறிகூட பார்திடாதிங்கப்பா ) ஒட்டுமொத்த வக்குரத்தையும் ஒன்னா சேர்த்து நல்லதா எடுத்துகோங்கனு சொல்லியிருக்கார் ... ( எப்டிங்க முடியும் ) இந்த படத்தை கவர்ச்சியானது , மோசமானது , குழந்தைகளுக்கு ஒவ்வாது , அட மோசமானது ஆபாசமானது என்றுகூட அடக்கிவிடமுடியாது ... இது ஒரு முழுநீள வக்கிரம் கொடூரம் .....

அப்பாவால் பாலியல் ரீதியில் சீரழிக்கப்படும் மகன் , மகனால் சீரழிக்கப்படும் வளர்ப்புத்தாய் , மன நிலை பாதிக்கப்படும் ஒருவனால் கிராமமாக சீரழிக்கப்படும் பெண்கள் ...இப்படி ஒரு கதையில் நல்லதை எப்படி பொருக்கி கொள்வது ( இப்படியானா சமூக சீர்கேடுகள் நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் நம் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு இதை கண்டிப்பாக காட்டவேண்டிய தேவை இல்லை ).சினிமா என்பது பொழுதுபோக்குக்கானது எல்லாவற்றையும் மறந்து ஒரு 3 மணித்தியாலம் ரசிக்கிறோம் அதிலிருந்து நல்லது கிடைக்கிறதோ இல்லையோ கெட்டது கிடைத்துவிடக்கூடாது



காட்சிக்கு காட்சி குமட்டல் வருகிறது .. வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர்கள் கதை இருக்கிறதே அந்த கதையை கமல் பார்வையில் இல்லாமல் , கொலைகாரர்களின் பார்வையில் யோசித்து இருக்கிறார் கெளதம் .... என்னதான் கதையை குறை கூறினாலும் இசையால் சொல்லவேண்டிய காட்சிகளை கூட கமராவால் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார் ... இசையே இல்லாமல் வெறும் கமரா சூப்பர் ...அதிலும் புதுமுகம் வீரா நடிப்பிலும் பாஸ் ... ( மச்சக்கார நடிகர் ! )



கடைசியில் படத்தில் ஒரு message ... மன நோயாளிகளை ஒதுக்கிவிடக்கூடாது ( ஏம்ப்பா இத சொல்ல வந்துதான் அவ்ளோ குப்பய காட்டிநீங்கலாக்கும் ) என் தயவான கருத்து தயவு செய்து இந்த படத்தை பார்துவிடவேண்டாம் மீறி பார்த்தால் பத்தே நிமிடத்தில் குமட்டும் நான் உத்தரவாதம் .....

Thursday, April 14, 2011

பயணம் (break down)



ராதா மோகன்
என்ற இயக்குனர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு ... அழகிய தீயே ..மொழி.. அபியும் நானும் என்று அவர் படங்கள் நானும் அப்பாவும் விரும்பி பார்ப்போம்( அப்பா மகன் சேர்ந்து பார்க்குற படம் ரொம்ப குறைவு இல்ல அதனால சொன்னேன் ) ... அந்த வரிசையில் பயணத்தை ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன் ... எதிர்பார்த்தது போலவே நல்ல படம்தான் ஆனால் அபாரமான படைப்பு கிடையாது ... மொழி , அழகியதீயே , அபியும் நானும் .. வரிசையில் இந்த படம் நான்காவது இடம்தான்

தெரிந்தெடுத்த களம் சிறப்பு ஹாலிவுட் தரத்தை தொட்டிருக்கிறது .. ஆனால் நம் இயக்குனர்கள் (ஷங்கர் உட்பட ) வழி வழியாக விடும் பெரிய தவறை இந்த படத்திலும் காணலாம் ( தயவுடன் அதிக பிர்சங்கிதனாமாக எடுக்க வேண்டாம் ) களத்தை ஹாலிவுட் தரத்துக்கு தெரிவு செய்துவிட்டு நம் ஊர் கார சார மசாலாக்களை கலந்தால் எப்படி? .. கிழவிக்கு குமரி உடை அணிவித்தது போலாகிவிடாதா ?

ராதாமோகனும் அதைத்தான் முயற்சி செய்திருக்கிறார் கதை பக்கா திரில்லர் ...ஓட்டம் விறுவிறுப்பானது என்பதெல்லாம் உண்மையே .. ஆனால் விமானத்துக்குள் நடக்கும் சில கூத்துகள் படத்துடன் ஒட்டவில்லை என்பதே வருத்தம் தருகிறது , மொழி மாதிரியான அற்புத சினிமாவை தந்த ராதாமோகன் , பிரகாஷராஜ் ஜோடிக்கு இந்த படத்தின் ஓட்டைகளை அடைக்க தெரியாமல் போனது புதினம்



5 தீவிரவாதிகளால் கடத்தப்படும் விமானத்தையும் , கடத்தலையும் , மீட்க போராடும் படலமுமே கதை ..... சில இடங்கள் பெரிய விறுவிறுப்பு , நகம் கடிக்கும் அளவிற்கு போகிறது ... அதே சில காட்சிகள் படு மொக்கை .. குறிப்பாக கடத்தப்பட்ட விமானத்துக்குள் இருக்கும் பாத்திரங்களை நகர்த்தியதில் சாமர்த்தியம் இல்லை கடத்தப்பட்ட விமானத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு சில பாத்திரப்படைப்புகளில் இல்லவே இல்லை படத்திற்கு பிரவீன் மணி இசையாம் சொன்னால்தான் தெரிகிறது சிறப்பு என்று இசையில் எதுவுமே இல்லை


த்ரில்லர் கதையில் நகைச்சுவையை சேர்த்துவிட்டிருப்பது புதுமை குறிப்பாக ... இரும்பு கோட்டை முரட்டுசிங்கத்தில் வருவாரே பாலாஜி அவர் ... ப்ருதுவிராஜ்ஜுடன் செய்யும் ரகளைகளை ... என்னை மறந்து ரசித்தேன் ..... அதே படத்தின் உச்சகட்ட விறுவிறுப்பு இருக்கும் காட்சியில் விமானத்துக்குள் ஒருவர் மிமிக்ரி செய்து சிரிக்க வைப்பது உச்சகட்ட மொக்கை



படங்களில் நடிகர்கள் செய்வது போன்று நிஜ வாழ்க்கையில் இல்லை என்ற தெரிந்த அதே தத்துவத்தை பிருதிவிராஜ் போன்ற நல்ல நடிகரை வைத்து மீண்டும் காட்டியிருப்பதில் புதுமை இல்லை ... மெலிதான புன்னகை மட்டுமே வருகிறது ... எம் எஸ் பாஸ்கர் பாதிரியாராக வருகிறார் சரியான தேர்வுதான் ஆனால் அதிலும் அநியாய சென்டிமன்ட் ,... ஜோசியராக வரும் மனோபாலாவும் .. அவரருகில் இருப்பவரும் ( பேர் தெரியலைங்க )அடுத்த சென்டிமன்ட் ..

ஹோலிவூட் கதைகளை யதார்த்தம் மீரமால் எடுக்கும் ஆற்றல் தமிழில் சிலருக்குதான் உண்டு அதில் மிஷ்கின் முதன்மையானவர் ... நந்தலாலா ஒரு ஜப்பானிய திரைப்படமாக இருந்தாலும் அழகாக எடுத்திருப்பார் .. ராதாமோகனுக்கு அது கொஞ்சம் வரவில்லை ஆனால் ராதாமோகன் வழக்கம் போல தன் அடையாளத்தை விட்டுக்கொடுக்கவில்லை டப்பாங் குத்து , ஐட்டம் டான்சு , ஆபாச வார்த்தைகள் ... படுக்கையறை ஆபாசம் ,, கவர்ச்சி பெயரில் காட்டப்படும் ஆபாசம் ... எதிலுமே மனுஷன் இன்னமும் சிக்காமல் இருப்பது புதுமை ... அவரிடம் இருந்து ஆரோக்யமான தமிழ் சினிமா இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது ,, அந்த எதிர்பார்ப்பை அவரால் கண்டிப்பாக நிறைவேற்ற முடியும் என்பதற்கு இந்த கதை களம் நல்ல உதாரணம் ,

ஆனால் ராதாமோகனால் இந்த கதையை இன்னும் நன்றாக சொல்லியிருக்க முடியும்

Tuesday, April 12, 2011

படிச்சு பாருங்க என் மொழிகள் -பகுதி 1

பழமொழிகள் , முது மொழிகள் , புதுமொழிகள் என்று நிறைய இவை என் மொழிகள் முழுக்க முழுக்க என்னால் உருவாக்கப்பட்டவை




ஓடும் நதிக்கு தேக்கம் கிடையாது ஊக்கம்தான் உண்டு

வெற்றி என்பது இமயத்தில் அல்ல உன் இமைப்புள்ளியில் இருக்கிறது வெற்றி

வேகம் எடுப்பது உடலுக்கு நல்லது
விவேகம் எடுப்பது உள்ளத்துக்கு நல்லது

எல்லா கலைகளும் பயிற்ச்சியினால் வரும்
வெற்றிக்கலை மட்டும் முயற்சியினால் வரும்..


ஏட்டுக்கல்வி உயரத்தை தரும்
அனுபவக்கல்வி உரத்தை தரும்

Monday, April 11, 2011

குமார் சங்ககாரவுடன் சில நிமிடங்கள்

உலகக்கிண்ணம் ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கு முன்னாள் நடந்தது அந்த சந்திப்பு பார்த்த உடனேயே மனிதர் அடையாளம் கண்டு கொண்டுவிட்டார் அட பரவாயில்லையே இவருக்கு என்னையம் தெரிந்திருக்கின்றதே எண்டு பெருமைபொங்க hello sir என்றேன் பதிலுக்கு அவரோ ஹல்லோ mr. கிருஷ்ணா how r u என்றார் ..... அட பேர் கூட தெரிந்திருக்கிறதே இவருக்கு என்று மனதுக்குள்ளேயே பெருமைபட்டுக்கொண்டு ... தொடர்ந்து பேசினேன் .. ( சிங்களத்தில்..) அப்புறம் சொல்லுங்க சார் வீட்ல எல்லாரும் சௌக்கியமா ?

ம்ம்ம் எல்லாரும் நலம் அவங்களுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ..உங்க தில்லு முள்ளு விடாம கேப்பாங்க சார் ஒவ்வொரு நாளும் பகல் 3pm ஆகிட்ட தொல்ல தாங்க முடியாது... சொன்னா நம்ப மாட்டிங்க கிரீஸ் ..தில்லு முள்ளு கேட்ட பிறகுதான் வீட்ல சாப்பாடே போடுறாங்க என்று செல்லமாக கோபித்துகொண்டார் சங்கா ஆ அ அது என்ன நிகழ்ச்சி ஹா இதயம் என்ன சார் உங்க vice la அப்டி ஒரு லவ் chaance ஏ இல்ல ...என் phone ring tone ஏ உங்க இதயம் நிகழ்ச்சிதான் சார் என்று வேற சொல்லிட்டார் ...எனக்கு உற்சாகம் தாழ முடியவில்லை ...அவரோ விட மாட்டேன் என்கிறார் எனக்கு நிகழ்ச்சிக்கு தாமதம் ஆகிறது என்றேன் அவர் ..விடுவதாக இல்லை ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் mr. கிருஷ்ணா ... என்றார் சரி சரி உலகமே போற்றும் ஒரு கிரிக்கட் தலைவர் கேட்கிறாரே என்பதட்காக தலையை மட்டும் ஆட்டினேன் ... அப்படி எடுத்த படம் தான் இது........




ஹயி ஜாலி ... ரொம்ப நாளுக்கு பிறகு மொக்கை போட்டுட்டேன்...

இப்போ உண்மைக்கு வருவோம் ... எங்கள் கலையகத்துக்கு வந்திருந்தார் சங்கா பார்த்த கணத்தில் நான் என்னையே மறந்துவிட்டேன் என் கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை gentleman இன்றுதான் நேரில் பார்க்கிறேன்.. உடனே hello sir என்றேன் ..அவரும் பதிலுக்கு ஹலோ என்றார் ..இப்போ நினைத்தாலும் பூரிக்கிறது உடலெங்கும் சிலிர்க்கிறது ... ஒரு நிமிடம் என் ஆச்சர்யத்தை அவர் புரிந்துகொண்டார் போலும் cool man ......என்று என் தோலில் தட்டிவிட்டு கிளம்பிவிட்டார் போகும்போது சொன்னேன்.. world cup ekka apitama genna .... என்று ( உலகக்கிண்ணத்தை எங்களுக்கே கொண்டுவாங்க சார் என்று சிங்களத்தில் ) sure ... endru simple ஆக சொல்லி விட்டு போய்விட்டார் ...அப்புறம் இந்த படத்திற்காக அரை மணித்தியாலம் காத்திருந்ததெல்லாம் பெரிய கதை ஆனால் அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் பரவசம் உலகம் வியக்கும் ஒரு உச்ச கிரிக்கட் நட்சத்திரம் என் அருகில் ... நின்ற கணங்கள் அல்லவா அவை ... தவிர நான் சங்காவின் பெரிய ரசிகன் ...

உலகக்கிண்ணம் 2011



மூச்சுவிட முடியாத பரபரப்போடு முடிந்தது 2011 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் இந்த உலகக்கிண்ண இறுதி போட்டியில் பலரின் கனவுகளில் ஓட்டை விழுந்திருக்கலாம் ஆனால் எனக்கு பதவி உயர்வு கிடைத்தது போன்று பெரிய வெற்றி.. காரணம் சக்தி வானொலியில் உலகக்கிண்ண இறுதிப்போட்டியின் சிறப்பு ஒலிபரப்பின் முழுப்பொறுப்பும் என்னிடமே வழங்கப்பட்டிருந்தது நினைக்க நினைக்க .... நெஞ்சுக்குள் தேன் ஊறுகிறது ...இருக்காதா எத்தனை வருடகால கனவு நேரத்திற்கு மயூரன் அண்ணாவின் மட்டக்களப்பு பயணத்திற்கும் நன்றிகள்...ஹீ ஹீ .......


இனி விடயத்திற்கு வருவோம் ...என் இந்த வயது வரை ...கிட்டத்தட்ட 5 உலகக்கிண்ண இறுதி போட்டிகளை பார்த்துவிட்டேன் ...1996 உலகக்கிண இறுதிப்போட்டியில் , அதே சமயம் கடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் கூட இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு இந்தமுறை எகிறியது என்றே சொல்லலாம் ... கொழும்பின் சகல வீடுகளிலும் தொலைக்காட்சிகள் வேலை செய்து கொண்டிருந்தது ... மிக சிறிய அளவிலான மைதானங்களில் கூட பெரிய திரைகளில் போட்டியை பார்க்க மக்கள் முன்டியடித்துகொண்டிருந்தனர் .... சில வீடுகளில் பொது நலம் கருதி வீட்டுக்கு வெளியே தொலைக்காட்சி பாதையில் செல்பவர்களுக்காக ஒளிஎற்றப்பட்டிருந்தது.... ஒரு veel park குக்கு ஒரு தொலைகாட்சி ... குளிர்பானம் ...அன்னதானம் என்று கொழும்பு நகரமே அமர்க்களப்பட்டிருந்தது .... மட்டக்களப்பில் நான் சார்ந்த சக்தி fm வானொலி நடத்திய உலகக்கிண்ண சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிபரப்பை காண கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை வந்திருந்தனர் .... இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் ...அத்தனையும் ஒரே எதிர்பார்புக்காக ..ஒரே இலட்சியத்திற்காக ...அது சங்கா கையில் உலகக்கிண்ணத்தை சுமக்கவேண்டும் என்பதற்காக



அத்தனையும் தகர்ந்து போனதை இப்போ வரைக்கும் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை .... என்ன நடந்தது இலங்கை அணிக்கு ..( இந்த வினா உலகக்கிண்ணத்தை இலங்கை தவறவிட்ட நேரத்தை விட அதன் பிறகு நடந்த சம்பவங்களின்போதுதான் அதிகம் எதிரொலித்தது அது பற்றி பிறகு பாப்போம் ) ...இறுதியாட்டத்தில் இலங்கை அணியின் போராட்டகுணம் எங்கு போனது என்று கொஞ்சமும் புரியவில்லை மிக முக்கியமாக களத்தடுப்பில் விட்ட தவறுகள் நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது பலரின் பார்வைக்கு இலங்கை உலகக்கிண்ணத்தை திறமையின்மை அல்லது இந்திய அணியை விட திறமை குறைவினால் தவறவிட்டது என்று சிந்திக்க சொல்லவில்லை அவர்களில் நானும் ஒருவன் அதற்கு சில காரணங்களை சொல்லலாம்

உண்மையில் போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணியின் வேகம் எப்போதும் போல வெறித்தனமாகத்தான் இருந்தது ஆரம்ப விக்கட்டுகள் இழக்கப்பட்டாலும் இணைப்பாட்டங்கள் சராசரியாக நன்றாகத்தான் இருந்தது .....மகேலவின் அதிரடி சதத்துடன் நுவான் குலசேகர , திசர பெரேராவின் தேவயரிந்த வேகமான துடுப்பெடுத்தாடளினால் இலங்கை அணி அடைந்த 270 என்ற ஓட்டப்பெருமானம் மும்பை வேங்கட மைதானத்தில் இரவில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு அவ்வளவு இலகுவான பெறுமானம் அல்ல ... இருந்தும் இலங்கை அணியினால் போதிய அழுத்தம் கொடுக்கமுடியாமல் போனது உண்மையில் ஆச்சர்யம்தான் .... போட்டியை கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் போட்டி நிறைவடைய 8 or 9 ஓவர்கள் இருக்கும் போதே சங்ககார போட்டியை கைவிட்டுவிட்டார் .... இப்படி சொல்ல சில காரணிகளை நான் முன்வைக்கிறேன் மலிங்க வழமையாக இரண்டு sesion கள் பந்து வீச அழைக்கப்படுவார் ...ஆனால் இறுதி போட்டியின் பொது மலிங்கவை சங்ககாரா உடைத்து உடைத்தே பயன்படுத்தினார் ( இறுதிப்போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மலிங்கவை சிறப்பாக கையாண்டனர் என்பதும் உண்மை ....) இணைப்பாட்டத்தை முறியடிக்க இருக்கலாம் என்று கருதுவதில் எந்த உண்மையும் இல்லை .... சங்கா போன்ற மிக சிறந்த தலைவருக்கு அது நன்கு தெரியும் ...அதே சமயம் .. திசர பெரேராவை முழுமையாக பயன்படுத்தவேண்டிய எந்த தேவையும் இருந்ததாக தெரியவில்லை அடி விழுகிறது என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவரே அழைக்கப்பட்டார் ஏன்? டில்சானுக்கு 5 overs மீதம் இருந்தது ... முரளிக்கு 3 overs மீதம் இருந்தது பயன்படுத்தியிருக்கலாமே ?...



இப்படி நிறைய காரணிகளை அடுக்கலாம் .... போட்டி இருகும் சூழ்நிலையில் இலங்கை அணி மூர்க்கமாக போராடும் ஆனால் அந்த குணத்தை அன்று காணவில்லை .....இப்போ இந்த பதிவை இடும் நேரத்தில் இலங்கை கிரிக்கட்டில் பல்வேறுபட்ட மாற்றங்களை காண முடிகிறது ( எதுவும் ஆரோக்கியமாக இல்லை )... சங்கா உலக கிரிக்கட் பதினொருவர் அணிக்கு தலைமையேற்றவர் ... அவரின் ராஜினாமாவை ஏற்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ....



இது இவ்வாறிருக்க தனது இருபத்தெட்டு வருடகால ஏக்கத்தை தீர்த்து வைத்த டோனி தலைமையிலான இந்திய அணியை இந்திய ரசிகர்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது இவர்களா இந்திய அணி தோல்வியடையும் போது கல்லடிக்கிரார்கள் என்ற கேள்வியை நானே கேட்டுக்கொள்ளவேண்டியுள்ளது ( வெளிய சொன்னா கல் எனக்கு வந்துடும் இல்ல) ... இனி இலங்கை அணிக்கு இப்படியான ஒரு வாய்ப்பு எப்போ அமயும் என்பது கேள்வியே .....விடு மச்சி cup 32 km மட்டும்தான் அந்தபக்கம் என்று சொன்ன என் நண்பனை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்


தோனி கடைசியாக வெற்றிக்காக அடித்த அந்த சிக்ஸர் இப்போதும் மனதில் நிழலாடுகிறது
Copyright © 2014 நட்சத்திரவீதியில்