Thursday, April 11, 2013

எழுதி கிழித்த நூறு


 நட்சத்திர வீதியில் பயணிப்பவர்களுக்கு எதை கொடுப்பது என்பதில் இருக்கும் கவனம். கூடவே மிதமிஞ்சிய சோம்பேறித்தனம், கொஞ்சமாய் அதிகம் இருக்கும் தொழில், வார்த்தை வரட்சி  கூடவே கற்பனை வரட்சி    என்று 3 வருடங்களில் 100 தான் எழுதி கிழிக்க முடிந்தது. உண்மையில்  இது வெட்கப்பட வேண்டிய ஒன்று பெருமையடிக்க இதில் ஒன்றும் இல்லை , ஆனால் நூறு என்பதை எதற்காக கொண்டாட வேண்டும் என்பதை அறியாமலேயே கொண்டாடும் ஒருவனாக  அதையும் போகிற போக்கில் நினைவுபடுத்த ஒரு முயற்சி அவ்வளவே.

  எழுத்து   என்பது படிக்க படிக்க கொடுக்கும் சுவை என்ன என்பதை அறிந்திருந்தேன். ஆனால் நாமே எழுதவேண்டும் என்ற எண்ணமே எவ்வளவு பெரிய விபரீதமான எண்ணம் என்பதை உணர நட்சத்திரவீதியில் எனக்கு   கைகொடுத்திருக்கின்றது என்பதை ஆணவம் இல்லாமல் சொல்லலாம்.  இன்னும் நிறைய எழுத எழுத்தில் மூத்தவர்கள் அறிவில்  பெற்றிருக்கும் அனுபவத்தின் சில துளிகளாவது ஆயுளுக்குள்  எனக்கும் கொடு என்று இறைவனிடம் இந்த நூறாவது பதிவில் யாசிக்கிறேன்.

சில  வருடங்களுக்கு முதல் வலையுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திவைத்த அருமை நண்பன் பஹத் a . மஜீத்துக்கு (fahath a  majeeth ) முதல் நன்றி ,  எழுத்துக்களை அறிமுகப்படுத்தி    வைத்த அண்ணன் ராஜ் மோகன் (சென்னை )அவர்களுக்கும் , blog  சம்பந்தமாக பல விடயங்களை அறிமுகப்படுத்தி தந்த சகோதரி ஹோஷியா ( சக்தி fm ) அவர்களுக்கும் நன்றி. பிற்பட்ட காலத்தில் அடிக்கடி  பதிவுகளை பார்த்துவிட்டு பல்வேறுபட்ட  விமர்சனங்களையும் கருத்துக்களையும் சொல்லிவரும் வலையுலக நண்பர்களுக்கும் facebook நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் இனியாவது உருப்படியாக எழுதி கிழிக்க முயல்கின்றேன் !!!!



 

Wednesday, April 3, 2013

"பரதேசி "... பாலா சொன்னது சரி - 2

 கடந்த பதிவுடன் இதையும் இணைத்துக்கொள்கிறேன் "பரதேசி" படத்திலும்  சரி அதன் மூலமான "எரியும் பணிக்காட்டிலும்" சரி ஒரு பூசாரி கதாபாத்திரம் உலவிக்கொண்டிருக்கும் கொடுமைகளாலும் ,    குளிராலும், மலேரியாவினாலும் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கும் மனிதர்களை கடவுள் பெயரால் அரித்து தின்றுக்கொண்டிருக்கும் , அது எப்படி எல்லாம் மனிதர்களின் பயத்தை வைத்து தன பிழைப்பை தேடியது என்பது பற்றி ph .டேனியல்  தெளிவாக சொல்லியிருப்பார் விளக்கியிருப்பார்.

 தாயத்துக்கு நாலு அனா , ஆத்தாளுக்கு பூஜை என்று எட்டணா இப்படி அந்த சனத்தின் ரத்தத்தில் பாதியை தன பங்குக்கு உறிஞ்சுக்கொள்ளும், ஏற்கனவே கடனில் இருக்கும் அந்த மனிதர்களின் கடனை இன்னுமின்னும் உயர்த்தும்.   கடைசியில் வள்ளி என்ற அந்த முதல் கதாபாத்திரம் தாயத்தும் பிரயோசனமின்றி நம்பிய  கடவுளும் பிரயோசனம் இன்றி பரிதாபமாய் இறந்து போவாள்   நான் கேட்கிறேன் "ph .டேனியல் என்ற வேற்று மதக்காரர் ஒருவர் இந்துத்துவ கடவுளை அவமானப்படுத்துகிறார் என்று சொல்ல முடியுமா???  "

அப்படி சொல்வது எவ்வளவு அடி மட்டமான புத்தி ? அப்படித்தான் பாலாவை விமர்சிப்பதும் ,   பாலா கிறிஸ்தவர்களை சாடுகிறார் என்றால் அந்த பூசாரி கதாபாத்திரத்தை எதற்கு காட்ட வேண்டும் ?    பாலா அந்த மக்கள் பட்ட ஒட்டுமொத்த வலியையும்    2 மணிகளுக்குள் சொல்ல முற்பட்டிருக்கின்றார் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் .....

Tuesday, April 2, 2013

"பரதேசி "... பாலா சொன்னது சரி - 1


எரியும் பனிக்காடு நாவலில் இருக்கும் ஒரே ஆறுதல் அந்த வைத்தியரின் வருகைதான் ( p .h .டேனியல் ).உண்மைதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை அதை பாலா கொச்சைப்படுத்தியதாக அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு மீதான் என் பார்வை இது .

ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் "வறுமையை" காரணம் காட்டி மத மாற்றம்  செயல்கள் இன்னமும் நடப்பதுதான் 

தமிழகத்தில் இருந்து அடிமைகளாக உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களில் பலர் இப்படி மூளை சலவை செய்யப்பட்டும், வறுமையை காரணம் காட்டியும் ஏன் பலவந்தப்படுத்தியும்   மதம் மாற்றம் செய்யப்பட்டது உண்மையா? பொய்யா ? ...பர்மாவுக்கு, மொரீசியசுக்கு, இலங்கைக்கு, தென் ஆபிரிக்காவுக்கு , பிஜி தீவுகளுக்கு மலேசியாவுக்கு என்று உலகம் முழுவதும் கூட்டி செல்லப்பட்ட பலர் இப்படி மதமாற்றம் செய்யப்பட்டார்களா இல்லையா? 

வெள்ளைக்காரன் உச்சரிக்க முடியாத பெயர்களை தமக்கு உச்சரிக்க  முடிந்தவகையில் மாற்றி வைத்து ( eg -  மாரியம்மா   - மரியம் ) ஒரு மத அடையாளத்தையே அழித்து  வைத்த வரலாறு ஆதார பூர்வமானது யாராவது மறுக்க முடியுமா ?

இன்றும் இலங்கையில் நான் பார்த்திருக்கிறேன். இந்த நிமிடம் கூட தேயிலை தோட்டங்களில் வறுமையை நீக்குவதாக சொல்லியும் , கல்வி தருவதாக சொல்லியும் "கர்த்தர்" என்ற பெயரை பயன்படுத்தி மத மாற்றம் செய்யப்படுகின்றது , உணவுக்கு வழி இல்லாதவனுக்கு அதை தருவதாக சொல்லி மதத்தை விலையாக கேட்பது  சரி தவறு என்பதல்ல என் வாதம்  ஆனால் அது மாறுபவர்களின் சுய விருப்பில் நடக்க வேண்டும் அதை தருவோம் இதை தருவோம் என்ற ஆசை வார்த்தைகளை காட்டி மத வியாபாரம் செய்வது அற்பத்தனமானது ."தூய்மையான உண்மை கத்தோலிக்கர்கள் இப்படி யாரையும் மதம் மாற்றி நான் கண்டதில்லை "ஆனால் "பரதேசி படத்தில்" வரும்  ( எரியும் தணலில் அல்ல ) அந்த டாக்டர் கதாபாத்திரம் ஒரு அடையாளம் அதன் எச்சங்கள் இன்னமும் வீரியமாக செயட்படுகின்றது பசியை தீர்த்து வைப்பதாக கூறி மதத்தை விலையாகவோ பிச்சையாகவோ கேட்கின்றது ,இத்தனைக்கும் இப்படி மதமாற்றம் செய்யப்படுபவர்கள் " உண்மையான கத்தோலிக்கர்களாக" அங்கீகரிக்கப்படுவதும் இல்லை 

இப்படி எதுவும் தெரியாமல் பாலா red tea  நாவல் ஆசிரியரான வைத்தியரை கொச்சைப்படுத்தியதாக பேசுவது எவ்வளவு மடமை " சாறு நிவேதிதா மாதிரி " மனிதர்கள் புகழுக்காக எதையும் நிறுவ முயற்சிப்பது அவர் பாணியிலேயே சொல்வதானால் "குடிகாரன் எடுத்து வைத்த வாந்தியை நக்குவதற்கு ஒப்பானது" ( படிப்பவர்கள் மேற்படி வார்த்தைக்கு மன்னிக்கவும் )

எரியும் பனிக்காடு நாவல் சொல்லும் காலத்தில் அந்த குறித்த பகுதியில் அந்த டாக்டர் கதாபாத்திரம் பல நன்மைகளை செய்தும் தொழிலார் உரிமைகளையும் பெற்று கொடுத்தது உண்மை என்றால் .அவரை போன்ற உண்மையானவர்கள் தூய்மையானவர்கள் இருந்த சம நேரத்தில் வலியை  மதத்திற்கு விலையாக பேசியவர்களும் இருந்தார்கள் அதை பாலா காட்டியது தவறாகுமா?  இன்று இலங்கையில் தோட்டப்புற மக்களில் 80 வீதமானவர்கள் பரதேசி படத்தில்  காட்டப்படுவது  போன்று    மதமாற்றம் செய்யப்பட்டவர்கள்தான் .  

பரதேசி என்ற 2 மணித்தியால படத்தின் மூலம் செல்போன் இல்லாத காலத்தில் எந்த வீடியோ ஆதாரமும் இல்லாமல் தடம் தெரியாமல் அழிக்கப்பட்ட ஒரு தமிழர் சமூகத்தின் அவலம் வெளி வந்திருக்கின்றது, சொல்லப்பட்டிருக்கின்றது. , 48 நாள் நடை பயணம் என்பது  தலை மன்னாரில் இருந்து இலங்கையின் மத்திய பகுதிக்கு நடந்தே சென்ற அவலத்தின் அடையாளம் , சொல்லப்படாத கதை , வரும் வழியில் கொடூர மிருகங்களுக்கும் , மனித மிருகங்களுக்கும் உணவாகிப்போன நம் தமிழனின் உண்மை , எரியும் பனிக்காடு நாவலில் கதை நடக்கும்  பகுதி மற்றைய பகுதிகளில் நடந்த கொடூரங்களை விடவும் "பரவாயில்லை" என்று சொல்லக்கூடிய கொடுமைகள் நடந்த இடம் , ஆனால் அதை தாண்டிய கொடூரங்கள் நடந்த மலைகள் உள்ளன அங்கு கொன்று புதைக்கப்பட்ட உயிர்களின் ஆத்மாக்களைத்தான் நாம் அழகு அழகு என்று ரசிக்கிறோம்.    அவை அத்தனையையும் சொல்ல பாலா முயன்றிருக்கின்றார்.  பரதேசி ஒரு அழுத்தமான பதிப்பு , ஆதாரமில்லாமல் அழிந்துபோன உனதும் எனதும் முப்பாட்டனின் வலி .......

கடைசியாக ஒன்றை  சொல்லிவிடுகின்றேன் "மதம் மாறுவதோ அல்லது மாற்றுவதோ இதெல்லாமே நியாயமாக கொள்ளலாம்" தவறு இல்லை, ஆயிரமே இருந்தாலும் அது தனி  உரிமை  ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் ஒரு அபாரமான படைப்பாளியை கீழ்த்தரமாக கொச்சைப்படுத்துவதும் மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது , மேற்படி அத்தனையும் பாலா என்ற படைப்பாளியின் மீது கொண்ட அளவற்ற அன்பில் எழுதியது .. ..

Copyright © 2014 நட்சத்திரவீதியில்