Sunday, March 10, 2013

"பரதேசி "பாடல்களும் ..."எரியும் பனிக்காடு" நாவலும்

பாலாவின் "பரதேசி " இன்னும் சில தினங்களில் வெளியாக் இருக்கின்றது. படத்தின் 1st look  இல் ஆரம்பித்து முன்னோட்டம் மற்றும் மேக்கிங் காட்சிகள் என பாலாவின் தனித்துவ முத்திரை தெளிவாய் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் படத்தின் பாடல்களும் வெளியாகியது. எல்லோர் வாயிலும் முனுமுனுக்கும் அளவுக்கு பெரியளவு ஹிட் ஆனது என்று சொல்ல முடியாது இருந்தாலும் பாலா  படம் என்பதால் படத்தின் காட்சிகளோடு அவை வெளிவரும்போது தாக்கம் தரும் என்ற நம்பிக்கை இன்னமும் உண்டு ... பரதேசி படத்தின் கருவாக சொல்லப்படும் red  tea நாவல் (தமிழில் "எரியும் பனிக்காடு ") தந்த விம்மல்களை பரதேசி பாடல்கள் மீள அசைபோட வைத்தது. அந்த பாடல்களும் அது எரியும் பனிக்காடு நாவலில் நினைவு படுத்தும் பகுதிகளையும் இங்கு பதிவிடுகிறேன் .....

1) ஒ...செங்காடே ....

கயத்தாறு கிராமத்தின் பஞ்சத்தினால் வாரக்கணக்கில் நெல்லு உணவு கிடைக்காமல் வாடும் கருப்பன் மற்றும் அவனோடு சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களை அதிகம் கொண்ட கிராமம் . வாட்டும் வறுமையில் இருந்து விமோசனமாக கிடைக்கும் தேயிலை மலை தொழிலை நம்பி கருப்பன் தன மனைவியுடன் கிராமத்தை விட்டு வெளியேறுவான் அந்த காட்சியும் சொந்த மண்ணை விட்டு செல்லும்  போது   அவன் மனம்  வலித்ததையும்   இந்த பாடல் நினைவு படுத்துகின்றது // 

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது 

//கவிப்பேரரசு அவர்கள் 1920 கயத்தாறு வறண்ட பூமியில் வாழ்ந்து விடைபெற்றது போலவே வரிகளை இழைத்திருக்கின்றார் அருமை //

2..)யாத்தே -

கயத்தாறில் இருந்து தோட்ட  தொழிலுக்கு ஆசை வார்த்தை காட்டி கொண்டுவரப்பட்ட கருப்பனும் அவன் மனைவியும் அத்தனையும் பொய் என்பதை கண்டு துவல்கிரார்கள். நரக பசியில் இருந்து உயிர் பிழைக்க வந்த இடமும் கொடூர நரகம் என்பதை உணர்கிறார்கள் ,தினம் தினம் அடி  உதை  என டீ எஸ்டேட்டில் அவர்களும் சக தொழிளார்களும் சக்கையாக பிளியப்படுவர், ஏன் என்று கேட்க முடியாது .தப்பி ஓடவும் முடியாது .ஆடு மாடுகள் போல கொட்டிலுக்குள் சித்திர வதை அனுபவிப்பர் அந்த காட்சியை கண் முன் கொண்டு வரும் வரிகள் //

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை 

3...)அவத்த பையா - .....


பரதேசி பாடல்களில் சிறந்த முறையில் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் பாடல் இது, கயத்தாறு வரட்சியில் ஏழ்மையில், காதலை மற்றும் அது தரும் ஆறுதலை  சொல்லும் பாடலாக எடுக்கலாம் அதுதான் உண்மையும் கூட 

நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைந்திருக்கு... 

4..)தன்னை தானே -

தேயிலை தோட்டத்தில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகை இருக்கும் அந்த நாளில் மட்டும்தான் தொழிலாளர்கள் நிம்மதியாய் இருப்பார் விடிய விடிய கூத்தும் இடம்பெறும் , அந்த காட்சியை நினைவுபடுத்தும் வரிகள் கிருஸ்துவை துதிக்கும் பாடல்


//தன்னை தானே தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீரி பாயும் பேரலையை பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றேடுத்த ஆற்று மாதின் சாட்சியாக நீ //


மொத்தத்தில் எல்லா பாடல்களுமே எரியும் பனிக்காடு நாவலையும் அது தந்த விம்மல்களையும் அதிர்ச்சிகளையும் மீள நினைவு படுத்தி இன்னும் சில அதிர்ச்சிகளை தந்துவிட்டது எனலாம்.  இதுவரை யாருமே தொடாத தோட்ட தொழிலார்களின் வாழ்கையை சொல்ல துணிந்த பாலாவுக்கு நன்றிகள் ...

//ஆந்தைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்காணி செருப்புக்கு தோதா போச்சே // இது இன்னமும் தோட்டங்களில் மக்கள் படும் அவலம்தான் ....

Sunday, March 3, 2013

"பூரண மதுவிலக்கு- தலைமுறை கடமை"



பூரண மது விலக்கு சாத்தியப்படுமா? கற்பனையில்  கூட அப்படி நினைக்க முடியவில்லை காரணம் ஒரு நாட்டின் வருவாயில் மிகப்பெரிய வருவாய் அதில் தங்கி இருக்கின்றது , இன்னுமொரு பக்கம் பிரதான உணவுகளில் ஒன்றாகவே மது கலந்து போய்  இருக்கின்றது , நேற்று இரவு "சண் தொலைகாட்சி" இது தொடர்பாக ஒரு சிறப்பு விவாத நிகழ்ச்சியை செய்திருந்தது  விவாதத்தில் பங்கு கொண்டவர்களில் ஒரு முகம் என்னை நிகழ்ச்சி பால் ஈர்த்தது    அந்த முகம் எழுத்தாளர் சாருவினுடயது , மனிதன் கண்டிப்பாக விவகாரமாக எதையாவது சொல்வார்  என்ற நம்பிக்கையில் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தேன் .....

எதிர்பார்த்தது போல சில விவகாரமான கருத்தக்களை  சாறு நிவேதிதா  முன் வைக்க லாவகமாக முகத்தில் கறியை பூசிக்கொண்டார். குடிப்பதற்கும் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக சொல்லி, அதை நிருவப்போய் பலரிடம் மூக்குடைப்பட்டார்,  பதில் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சி பிரதிநிதி நல்ல ஆளுமையான கருத்துக்களை முன்வைத்தார், குடி என்பது ஒரு வியாதி எல்லா பாரதூரமான பிரச்சினைகளுக்கும் அடிப்படையில் போதைதான் அமைந்திருக்கின்றது. இது குடிக்கும் ஒவ்வொருத்தருக்கும் தெரியும் ( எனக்கும் தெரியும் ) நாம் செய்யும் காரியத்திற்கு நாமே பொறுப்பு சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைமையை குடி கொண்டு தருகிறது

..இது ஒரு பக்கம்.  ஒரு நாட்டிலோ அல்லது சுயமான ஆட்சியுடைய ஒரு மாநிலத்திலோ பூரண மது விலக்கு  சாத்தியப்படுமா என்றால் அது கண்டிப்பாக கனவுதான் அல்லது ரொம்ப கடினமான வேலை ,ஆனால் ஒன்று மட்டும் உண்மை பூரண மது விலக்கை  தமிழகத்தில் கோருபவர்கள் சொல்லும் "அமுல்படுத்தல் முறை" கண்டிப்பாக ஏற்புடையது. அதேதான் சாருவும் சொல்கிறார்.. ஒரு வழிப்படுத்தல் வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் அதனூடாக பூரணமான மது விலக்கை நோக்கி செல்ல வேண்டும் .

இது விடயத்தில் இலங்கை பல வகையில் முன்னணியில் இருக்கின்றது 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது மற்றும் புகையிலை சார்ந்த எந்த பொருளும்  விற்பனை  செய்வது
பூரணமாக தடை செய்யப்பட்டுள்ளது , பொது இடங்களில் குடித்தாலோ சாராயக்கடை முன்றலில்  குடிப்பதோ , சிகரட் அடிப்பதோ   , குடிக்கும் மற்றும் புகைக்கும் காட்சிகள் ஒளிபரப்பபடுவதோ தடை செய்யப்பட்டுள்ளது ... 9 மணிக்கு மேல் சாராயக்கடைகள் திறக்க முடியாது , பண்டிகை நாட்களில் சாராயக்கடைகள் கண்டிப்பாக மூடப்படும் ...

பூரண மதுவிலக்கு வேண்டுமா? இல்லையா? என்றால் கண்டிப்பாக வேண்டும். காரணம் அது தலைமுறை கடமை குடி என்பதே அந்நியமானதாக நம் அடுத்த தலைமுறை நினைக்க வேண்டும் அல்லது குடி என்று ஒன்றே அவர்களுக்கு தெரியாததாக ஆக்க வேண்டும் எனில் கண்டிப்பாக  மதுவை தடை செய்ய வேண்டும். ஒரு போதைப்பொருளை கண்டு அஞ்சுவது போல் மதுவை கண்டு அஞ்சுமாட்போல் செய்ய கண்டிப்பாக மதுவை தடை செய்ய வேண்டும் அது நம் அடுத்த தலைமுறைக்கு செய்யும் கடமை  .....குடிக்க யோசித்த காலம் போய் இப்போ குடிக்குறதுக்கு   யோசனையா? என்று கேட்கும் காலத்தை பார்க்க   பயமாக இருக்கின்றது
Copyright © 2014 நட்சத்திரவீதியில்