விஸ்வரூபம் "நியாயமும், நியாயமின்மையும்"
சினிமா என்பது ஒரு வலுவான ஊடகம் அதில் உயிரோட்டமாக சொல்லப்படும் எந்த விசயமும் ஏற்படுத்தும் தாக்கமும் பாய்ச்சலும் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை உண்டு பண்ணும். எனவே இப்படியான காட்சிகள் எல்லா முஸ்லிம் சகோதரர்களையும் அச்சத்துடன் அருவருப்பாக பார்க்க தூண்டுவதாக அமையும் என்பது உண்மை .எனவே முஸ்லிம் அமைப்புகள் தமிழகத்தில் இதை எதிர்த்து போராட வழுவான காரணம் உண்டு. அங்கு அந்த படம் தடை செய்யப்படாமல் காட்சிகள் அகற்ற சொல்லி வழியுருத்தவும் அவர்களுக்கு பூரண உரிமை உண்டு. தொடர்ந்து மணிரத்னத்தின் பாம்பே படத்தில் இருந்து ஒரு சமூகத்தை குறி வைப்பதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் அல்ல நிறையவே கஷ்டமானதுதான் . அப்படி செய்யப்பட காரணம் சிறுபான்மை இனம் என்ற பார்வைதான், அது ஒரு வகையான எகத்தாளம் இலங்கையிலும் அதே நிலைமைதான் ...
பாபர் மசூதியை காவி உடை உடுத்தி சென்று இடித்த அந்த காவியுடை இந்துத்துவ பயங்கரவாதிகளை பற்றி படம் எடுங்கள். அவர்கள் செய்த கொடூரங்களை, உயிரோடு இருந்த கர்பிணித்தாயின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த காட்சியை அப்படியே படமாக்குங்கள், எந்த எதிர்ப்பும் இல்லாமல் படத்தை வெளியிட்டுக்காட்டுங்கள் முடியுமா?? .... ஆனால் இலங்கையில் நிலைமை அதுவல்ல இலங்கையில் இந்த படத்திற்கு எதிராக சிலர் இடும் கருத்துக்கள் முழுக்க முழுக்க மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருப்பது வேதனை தருகின்றது.
அதற்கு கொடுக்கப்படும் எதிர் கருத்துக்களிலும் அதே மதவாத நெடிதான் வீசுகின்றது .. அதை தவிர்த்து இந்த படத்தை இங்கு எதிர்ப்பதற்கு வலுவான காரணம் எதுமே கிடையாது , ஒரு வாரமாக facebook , tweettaril இது தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் நிச்சயம் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அடி மனதில் இருந்த இனத்துவேசங்கள் இதை காரணமாக கொண்டு வெளியே வந்தது. காரணமே இல்லாமல் சிலர் சண்டை போட்டதை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாய் பயந்து போனேன் இது எங்கே கொண்டு போய் விடப்போகின்றது என்று, அப்படி கருத்து மோதலில் ஈடுபட்டவர்களில் 80 விழுக்காட்டினர் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து சண்டையிட்டது கவலைக்குரியதாக இருந்தது
இழிவான வார்த்தை பிரயோகங்கள் வேறு ... நான் பெரிதும் மதிக்கும் ஒரு எழுத்தாளர் விமர்சகர் முன்னாள் அறிவிப்பாளர் ஒருவர் கமல் அமெரிக்காவுக்கு கு ... கழுவி விடுகின்றார் என்று பகிரங்கமாக சொல்லியிருந்தார் இதில் தேவையே இல்லாமல் இலங்கையில் நடந்த போராட்டத்தை வேறு வம்புக்கிழுத்து மொட்டை தலையையும் முழங்காலையும் முடிச்சு போட்டு விட்டிருந்தார் ... அதற்கு எதிர் கருத்தாக சில இந்துத்துவ மதவாதிகள் இட்ட கருத்துக்களும் எரிச்சலாய் இருந்தது என்னை பொறுத்த வரை இலங்கையில் இந்த படத்தை எதிர்ப்பதில் நியாயம் என்பது குறைவான விழுக்காடுகள்தான் , காரணம் அதையும் விட இங்கு எதிர்க்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய உண்டு .
கமல் இஸ்லாமிய எதிராளியா?? என்ற கேள்வியே ரொம்ப மட்டமானது அவர் மத நம்பிக்கை அற்றவர் என்பது எல்லோருக்குமே தெரியும் .. "கிரகனாதி கிரகங்களுக்கும் அப்பால் ஒரு அசகாய சக்தி உளதாம்..." என்று இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக கவிதை சொன்னவர் , ஹே ராம் படத்தில் இஸ்லாமியர்களுக்கு அப்போது நடந்த கொடுமைகளை சொல்லி எதிர்ப்பை சம்பாதித்தவர் , தசாவதாரம் படத்தில் சைவர்களை கிட்டத்தட்ட இழிவு படுத்தி வைணவர்களை பற்றி சொன்னவர். அவருக்கு மதம் அல்ல முக்கியம் சொல்ல வரும் கதைதான் முக்கியம் இது வெளிப்படை ஆக விஸ்வரூபம் என்ற படமும் அப்படியானவற்றின் தொடர்ச்சிதான் ( அவருக்கு ஒஸ்கார் கனவு உண்டு அதற்காக அமெரிக்காவுக்கு சாதகமாக அவர் படம் எடுப்பார் என்று சொன்னாலும் அதற்கும் குறைவான விழுக்காடுகள்தான் நியாயம் அகாடமி விருதுகள் எல்லாமே அமெரிக்காவை தூக்கி பிடிப்பவர்களுக்கு மட்டுமா வழங்கப்படுகின்றது ??) ஒரு படைப்பாளியாக கமல் துறைக்கும் உழைப்புக்கும் நேர்மையானவர் அவரின் படைக்கும் திறனை ஆதரிப்பதில் தவறு இல்லை ...... அந்த வகையில் படத்திற்கான தடை நீக்கப்பட்டமை மகிழ்ச்சியே ஆனாலும் தமிழகத்தில் இதற்கான போராட்டங்களில் நியாயம் உண்டு என்பதால் போராடும் இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் .....