மனம் திண்ணிக்கழுகு
தமிழில் இதுவரை தொடாத ஒரு கதை தான் என்று ஓரளவுக்கு சொல்லலாம் ஆனால் தொடாத மையக்கரு என்று தைரியமாக சொல்லலாம் தீண்டத்தகாதவர்கள் போல கணக்கெடுக்கப்படும் விளிம்பு நிலை மனிதன் ஒருவனுக்கு இருக்கும் சராசரி உணர்வுகளை அற்புதமாக சுட்டிருக்கின்றார்கள்,பிணம் தின்னும் கழுகு கூட பசிக்காகத்தானே தின்கின்றது ? இங்கு பிணம் தேடி அதில் இருந்து வயிற்றை நிரப்புபவர்களின் கதை என்பதால் படத்தின் பெயர் " கழுகு" சபாஷ் இயக்குனர் அவர்களே. கிருஷ்ணாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு, தேசிய விருது பெற்ற கலைஞன் ஆச்சே தம்பி ராமையா வழக்கம் போல பின்னி பெடலெடுத்திருக்கு மனுஷன். கருணாசுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க நல்ல வாய்ப்பு ", பிந்து மாதவி பொருத்தமான தேர்வு , ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் " இப்போதும் காதுகளுக்குள். நல்ல படம் . வெளிச்சம் இல்லாமல் திரைக்கதை காட்சிகள் அமைத்தது என்ன லாஜிக் என்று மட்டும் புரியல ....
0 comments:
Post a Comment