Wednesday, December 26, 2012

"வதன நூல் வதை நூல் ஆன கதை "

என் முகப்புத்த்கம் அடிக்கடி heck செய்யப்படுகின்றது பலருக்கு தவறான தகவல்கள் அனுப்பப்படுகின்றது, எனக்கே தெரியாமல் பலருக்கு request அனுப்பி un friend செய்யப்படுகின்றது , எல்லாமே சரி அதுக்காக என் சித்தப்பா பொண்ணு , பெரியப்பா பொன்னுக்கெல்லாமா  தப்பான தகவல் அனுப்புறது ? தகவல் அனுப்பப்பட்டுள்ள இரண்டாயிரம் பேரிடமும் மீள் தகவல் அனுப்பி நான் இல்லை என்று வாதிட பிடிக்கவில்லை , ஒரு பொறுப்புள்ள தொழிலில் இருப்பவன் என்ற வகையில் இப்போதைக்கு முகப்புத்தகத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் ..

Tuesday, December 18, 2012

"இரவு தேசம் " 1

       நெடுநாள் பழகியது  போன்ற உணர்வை ஏற்படுத்தும் முகங்கள், நன்கு தெரிந்த பழக்கப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடங்கள். என பல விடயங்கள் சில நிமிடங்கள்  அல்லது நொடிகளுக்குள் ஏற்படுபவைதான். எப்போதோ எங்கேயோ மனதுக்குள் ஒரு ஓரமாய் ஒழிந்து
 கிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் அந்த சமாச்சாரங்களை கிண்டிக்கிளறி எடுக்கும் மேற்படி விடயங்களுக்கு நன்றி சொல்லி மரியாதை செய்வது அதிகம் பொருந்தும். நிதானிக்க நேரமின்றி 
  ஒடுபவார்களுக்கு ஏறி வந்த ஏணியை நினைவுபடுத்தும் வல்லமை உள்ளவை இம்மாதிரியான நினைவுபடுத்தும் விடயங்கள்

நேற்று இரவு நாடு முழுவதும் கன மழை. கொழும்பில அல்லது நகர்ப்புறங்களில் இயற்கை கொடுக்கும் சந்தோசங்களை ஈடுபாட்டுடன் அனுபவிக்க ஒரு மகான் நிலை கண்டிப்பாய் வேண்டும். அவ்வளவு கஷ்டமானது. வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தும்மல் வராமல் போவது போன்ற  அசவ்கரியத்தை கொடுக்கும் சம்பவங்கள் நிறைய நடப்பது இங்குதான் ,  பல பொழுதுகள் கடற்கரை, காற்றையும் அலை சொல்லும் சேதிகளையும் கேட்டு ரசிக்க செல்லும் மன நிலையை  கூட அலை அலையாய் வரும் காதல் ஜோடிகள் மாற்றி விடுகின்றன என்பது  உதாரணம். இது வயது கோளாறு?

இருளை அனுபவிப்பது ஒரு அலாதியான இன்பம். அதிலும் அது செயற்கை தன்மை அல்லாத இருளாக இருப்பது இன்பத்தை கூட்டும், கலப்படம் இல்லாத இருள் என்பது முக்கியம் ,  இங்கும் நகர்புற இருளை குறை சொல்ல வேண்டிவருகின்றது, உண்மை இருள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு மோன நிலை...  அது கனவில்லாத தெளிந்த உறக்கம் போன்றது , நினைவில்லாத நிம்மதி போன்றது , இயற்கைக்கே உரிய அழகான ஓசைகளை தவிர்த்து அனைத்தும் வாய் மூடி மௌனித்திருக்கும் நிலை, பிறந்து 6 , 7 மாதம் ஆன  குழந்தை  விடிவதற்குள் எழுந்து தனக்குத்தானே சிரித்துக்கொள்லுமே  அப்படியான ஒளியும் இயற்கையின் அழகான சத்தங்களில் ஒன்றுதான்.   அவை ஒன்று கலந்த இருளை அனுபவிப்பதும் அள்ளி அள்ளி பருகுவதும் அளவில்லாத ஆனந்தத்தை தரவல்லது,இப்படியான இருள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் கிடைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று !...

Thursday, December 13, 2012

"சூப்பர் ஸ்டாரை பாதுகாத்த தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகனை முழுமையாக பாதுகாக்கவில்லை "



ரஜினி சாரை பார்க்கும் போதெல்லாம் வியப்பும், ஒரு சின்ன   கவலையும்  குடிகொள்ளும் வியப்பு என்பது ஒரு தனி மனிதன் அடைந்திருக்கும் இந்த எட்ட முடியாத எல்லையை நினைத்து, அந்த உயர்வை நினைத்து, உழைப்பை நினைத்து .  கவலைகொள்வது சினிமாவில் ரஜினி என்ற ஆளுமை பின்னாளில் சிக்கிப்போன குறுகிய வட்டம்தான். மிக சிறிய வட்டம் அது, ஆனால் அந்த குறுகிய வட்டத்தை உலகம் முழுவதும் திரும்பி பார்த்து வியக்கும் புள்ளியாக மாற்றியமைத்த ரஜினி சார் மீது மறுபடியும் வியப்பு ....


அண்ணாமலை வெற்றிக்கு பிறகு வந்த படங்களை பார்த்தால் அந்த வட்டம் என்ன என்பது நன்றாக தெரியும் வெளிப்படையாக் புரியும் ( எந்திரன்  , பாபா வை தவிர ). என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிகை நடிப்பு தெரியாத மிக சரியான நடிகர் ரஜினி சார்தான் சிவாஜி கணேசன் அவர்களின் பழைய படங்கள்; பார்த்தவர்களுக்கு புரியும் ஒரு பாடல் என்றால்கூட வாய் கிட்டத்தட்ட 190 பாகைகளை தாண்டும், நெஞ்சு  நரம்பெல்லாம் புடைத்து வெடிக்கும் இது அக்மார்க் நாடகத்தனம்  , கமல் சார் ஒரு புது வடிவத்தை கதாபாத்திரத்ற்கு கொடுப்பார். ஆனால் மிக சரியாக பாத்திரம் என்னவோ அதை அப்படியே உள்வாங்கி கொடுக்கும் ஒரு தனித்துவ நடிகர் என்றால் ரஜினி சார்தான். முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களுக்கு அது புரியும் இன்னொரு பக்கம் ராகவேந்தரா படத்தில் ரஜினி சாரின் முக அமைதி ஒரு ஞானியால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று , ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பரிணாமத்தை காட்டுவார் , மறக்க முடியாதது அவர் பண்ணிய தில்லுமுல்லு , தளபதி படத்தில் மௌனத்தில் ஒரு உணர்ச்சி பிரளயத்தையே முகத்தில் காட்டுவார் .



" உண்மை நடிப்பு என்பது நடிக்காமல் இருப்பது"என்ற வாசகத்தை  தாரக மந்திரமாக கொண்டு படம் எடுத்தவர் இயக்குனர் மகேந்திரன் அதை அப்படியே பின்பற்றுபவர் என்பதால்தானோ என்னவோ மகேந்திரனுக்கு மிக பிடித்த நடிகர் ரஜினி.  (இன்றளவும் தமிழின் முக்கிய இயக்குனர்களில் மகேந்திரன்  முதன்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என்று நம்புகின்றேன்  ) .அப்பேற்பட்ட நடிகனை வணிக சினிமா ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துவிட்டது என்பது கவலையைத்தான்  தருகிறது,  எது எப்படியோ விறு விறு வேகம். மந்திர புன்னகை, சின்ன சிரிப்பில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் லாவகம், எவனாலும் செய்ய முடியாத stayle  என்று ரஜினி சாருக்கு தமிழ் சினிமா வகுத்துக்கொடுத்த சின்ன வட்டத்தை கொண்டு உலகம் முழுவதும் உயர்ந்து நிற்க அவருக்கு துணை வந்த அவரின் உழைப்பு இருக்கின்றதே அது அவ்வளவு இலகுவானது   இல்லை " 63 வயதில் நம் எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டார் பத்திரமாக மிகப்பெரிய எவராளும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் ,ஆனால் ஒரு நல்ல  யதார்த்த நடிகனை நாம் எப்போதோ  தொலைத்துவிட்டோம் "....

Wednesday, November 21, 2012

கிளிநொச்சி


கிளிநொச்சி வயல் வெளிகளும் கண்ணீர் ததும்ப ததும்ப மூக்கிலிருந்து நீர் வழிய வழிய சாப்பிட்ட நாட்டு கோழியும்,காலை  இளம் வெயிலில்  தோகை  மயிலும் , யுத்தம் விட்டுசென்ற தடயங்களையும் அதை நம் மக்கள் மிக இயல்பான ஒன்றாக திரும்பி பார்பதையும் என்னவென்று சொல்ல? யாழ் சென்றது மூன்றாவது முறை அனால் கிளிநொச்சி மண்ணில் அதிக நேரம் செலவிட்டது இதுதான் முதல் முறை ( நன்றி கிருஷாந்தன் ) .

"செல்வந்த வீடாத்தான் இருந்துச்சுது தம்பி 
செல் வந்ததால இப்படி ஆயிட்டுது "  என்று ஒரு பெரியவர் சொல்லி  குமுறி குமுறி சிரித்தார் !!!
என்னால் சிரிக்க முடியவில்லை ...

யுத்த நேரத்தில் விழுந்த செல்களின் மிச்ச இரும்புகளில் பூக்களை வளர்த்து நீரூற்றுகிரார்கள். 
உயிர் பறிக்க வந்த இரும்பில்   ஒரு உயிரை "பூக்க வைக்க"  என் மக்களுக்கு  யாரும் கற்றுக்கொடுக்கவில்லை அது ரத்தத்தில் ஊறியிருக்கின்றது. 

யுத்தத்தையும் அது பல தலைமுறைகளுக்கு நினைவாக விட்டு சென்றுள்ள  ரணங்களை கூட நம் மக்கள் எவ்வளவு இயல்பாக நகைச்சுவை உணர்வோடு மீட்டு பார்கின்றார்கள் .....



( (கிளிநொச்சியில் நண்பர்களுடன் சுட்டது )

Sunday, October 21, 2012

உனக்குள் நான் எனக்குள் நீ .. ( அறிந்ததை உளறுகிறேன் ) - 3


ஞாயிறு மாலை நேரம் கடைசி நேர பரபரப்பை வேண்டுமென்றே உருவாக்கும் என் கோனாங்கி தனத்திற்கு அன்றைய நாளும் தப்பவில்லை , நான்கு மணிக்கு அலுவலகத்தில் நிற்க வேண்டும்... ( இப்போ யோசிச்சு என்ன பிரயோசனம் ஏகன் கிற மொக்க படத்த பதினாறாவது தடவையா கலைஞர் டி வீல   முடியிற வரைக்கும் பார்க்கும் போது யோசிச்சு இருக்கணும் )  என்னை நானே திட்டிக்கொண்டு ஓடினேன்... நடந்தேன்... ஓடினேன் , சும்மா சொல்லக்கூடாது அலுவலகம் இருக்கும் பண்ணிபிட்டியாவுக்கு தெகிவளை இல்  இருந்து பத்து நிமிடத்துக்கொரு தடவை பஸ் இருப்பதால் ஓகே ஓகே .... அரக்க பறக்க அவசரமாய் ஓடி வந்து ஏறுவதற்கும் வண்டி  கிளம்புவதட்கும் சரியாய் இருந்தது, இரவு  நிகழ்ச்சில  என்ன என்ன பேசலாம் என்றெல்லாம்... " கிழிச்ச அவ்ளோ எல்லாம் சிந்திச்சா  நீ   ( மைன்ட் வாய்சு...)....

ஆ..... ஆகா ... அடடா  என்னா ஸ்பீடு  மனுஷன் யார்கூட என்ன கோவமோ " அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் யா இருக்கு " ஓகே நேரத்துக்கு அலுவலகம் போய்டலாம் "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே " ( மைன்ட் வாய்சு  இல்ல மைன்ட் சாங்கு ...) சடார்னு வண்டி நின்னாலும்  சாங்கு நிக்கல , முதல்ல ஒரு வயசான பாட்டி அவங்க பின்னால யம்ம்மா ..... கொழும்புல நமக்கு பிடிச்ச விசயங்கள்ல இந்த சகோதர மொழி பொண்ணுங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு " "என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் " ( இப்போ மைன்ட்  சாங்கு இல்ல வண்டி நிறுத்துன இடத்துல இருந்த கடைல ரேடியோ ...)... பொண்ணுக்கு பின்னால ச்சே சீ ... அப்டி இல்ல அவ பின்னால ஒரு மனிதர் அடடா ... பார்வை இல்ல, கண் பார்வை இல்லாத ஒருத்தர் தடுமாறி வண்டில ஏற , உதவியா கண்டக்டரும் உதவ எனக்கு முன் சீட்ல உட்கார்ந்துட்டார். அவருக்கு பக்கத்துல வயசான பாட்டி.... என் பக்கத்துல..... ( ஆஹா... கனவே தானா... மறுபடி மைன்ட் சாங்கு ) .... 

பக்கத்துலையே வந்து உட்கார்ந்த சமந்தாவ பார்க்கனும்னு மனசு போகுது ( நிஜமா நம்ம நடிகை சமந்தாவே தோற்று போய்டுவாங்க ) ஆனா நமக்கு இயல்பாவே கொஞ்சம் இல்ல நெறைய கூச்சம் நாள மனசு போற பக்கம் கண் போகல "ஹா .... பரவாலயே வர வர கௌரவத்த காப்பாத்திக்கிரா மாதிரி எழுதி  பழகிட்ட ( மைன்ட் வாய்சு )  .. இருந்தாலும் கரண்ட் அடிச்சவன் மாறி அப்டியே முன்னாலேயே பார்க்க ஆசை... முடியுமா????.... முடியுமா????? ஹீ ஹீ ..." நெருங்க விடுதில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்"....( மறுபடி மைன்ட்  சாங்கு ) 

எனக்கு முன்னால இருக்குறவர பாருங்க.. பார்வயில்லாதது எவ்ளோ நல்லது இல்ல ( ச்சே வர வர ரொம்ப கீழ்த்தரமா யோசிக்க ஆரம்பிச்சுட்ட ) ஆனாலும் உண்மைதான் வண்டி ஒவ்வொரு ஸ்டாப்பா நின்னு நின்னு போகுது அப்புறம் மனசுக்கும் கண்ணுக்கும் இடைல உள்ள சண்டைல கண்ணுதான் ஜெயிச்சுது நா அவள பார்க்க..... அவள நான் பார்க்க .....பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் பார்த்த பக்கமே பார்திட்டிருக்க ... எனக்கே கொஞ்சம் கூச்சமாயிடுச்சு "ச்சே நம்ம பார்வை எவ்ளோ மட்டமா இருக்கு கண்ட இடத்துலயும் கண்ணு போக முதல்ல பார்வைய திருப்பு ... திருப்பு ...திருப்பு ..."( மைன்ட் வாய்சு இப்போ எக்கோ உடன் )   எப்டி ???? "ஹா அதான் இரவு  நிகழ்ச்சி அதபத்தி யோசிக்கலாமே " நெனச்சு  முடிக்குறதுக்குள்ள சிட்டு பரந்துடும்னு நெனைக்கவே இல்ல .. ( பறந்ததடி ஒரு பெண் புறா )அட அட என்ன நடந்தாலும் ஒரே பக்கம் முகத்த வச்சுட்டு.... சுக வாசிப்பா நீ ( பார்வையில்லாதவர் பார்த்து மைன்ட் வாய்சு )

  அட நாம இறங்க வேண்டிய இடத்துக்கும் வந்தாச்சே எல்லாரும் இறங்கியாச்சு நானும் இறங்கியாச்சு பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் அப்டியே உட்கார்ந்திருக்கிறார் பாவம் இறங்க வேண்டிய இடம் வந்தாச்சுன்னு தெரியல போல ... போய் சொல்லுவோமா ??? ஐயோ... மழை... குடையும் இல்ல அடுத்த வண்டிய பிடிக்கணும் ஓடு ... ஓடு .... 

அடுத்த வண்டியையும் பிடிச்சாச்சு வேலைக்கும் வந்தாச்சு ....பயங்கர குற்ற உணர்வு " ஒரு பொண்ண பார்த்து வழிய தெரியுது " ஒரு மனுஷனுக்கு உதவ தெரியலையே ... ச்சே அந்த மனுஷன் யாருமே இல்லாத வண்டில எல்லாரும் இருக்காங்கனு நெனச்சுட்டு இன்னமும் இருக்குமோ? இல்ல ஒருத்தரும் இல்லாத வண்டில யாராவது சண்டி புகுந்து மனுஷனோட பணத்த கிணத்த பரிச்சுடுமோ... அந்த பொண்ணு  ... ஆ ..அவள விடு அடுத்த நாள் அடுத்த வண்டி இன்னொரு பொண்ணு ஆனா அந்த பார்வை இல்லாத மனிதர் ( ச்சே என்ன   மனசு வண்டில இருந்து இன்னமும் இறங்கல ......)

 வண்டில கண்ட இடத்துல மேஞ்சி கண்டதையும் கற்பனை பண்ண வச்சு இறங்கினதுக்கு பிறகும் பல மணி நேரம் ஆகியும்  என் பார்வை இன்னமும் வண்டில ,  நான் போன அடுத்த நிமிஷம் யாரோ ஒருத்தன் உதவில அந்த பார்வை இல்லாதவர் இறங்கி போயிருப்பார் அடுத்த நிமிஷமே அந்த வண்டியின் சத்தங்களையும் மறந்திருப்பார் இல்ல ??? இதுல உண்மையிலேயே பார்வை பற்றி வருத்தப்பட வேண்டியது நானா??? இல்ல பார்வை இல்லாத அவரா??? .....

கொசுறு - "யாவும் கற்பனையே " (நம்புங்கோல் )

Sunday, October 7, 2012

உனக்குள் நான் எனக்குள் நீ ( அறிந்ததை உளறுகிறேன் )-1


(இந்த பதிவு ஒரு தொடர் பதிவு... சைக்கோ   என்று ரொம்ப சாதாரணமாக அடையாளப்படுத்தப்படும் பலர் பற்றியது வார்த்தை கோர்வைகள் சில நேரம் புரியாமல் இருக்கலாம் இரண்டொரு தடவை பொறுமையாய் வாசித்து பாருங்கள் .. நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும்  சைக்கோ   தனத்தை அல்லது மன நிலை மாற்றத்தை பதிவிடும் ஒரு முயற்சி ..)

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது மிகவும்  சிக்கலான வார்த்தைதான். அதில் பொதிந்து போயிருக்கும் அர்த்தமும் மிக  ஆழமானது. ஆழமாய் போக போக என்ன ஏது என்ற முடிவு பெறுவதும் அவ்வளவு சுலபம் அல்ல. இந்த வார்த்தைக்குள் நாம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை அடக்கி வைத்தியசாலை என்ற பெயரில் அடைத்து வைத்துவிட்டிருக்கின்றோம் என்றால், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்குள் அடங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் என்பதும் உண்மை அல்ல.

 கடைசி வரியில் எழுதியிருப்பது பலருக்கு பரீட்சயமானது. நம் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்க்குமொவ்வொருவரும் விதம் விதமான மனோபாவம் கொண்டவர்கள்.  பல விடயங்களில் இந்த மனோபாவங்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருக்கும் அதில் இருந்து யாரேனும் ஒரு சின்ன வித்தியாசத்தை காட்டினாலும் அவனை வித்தியாசமாக பார்க்க வைப்பதும் இந்த மன நலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தைதான் .மிக சராசரியான வாழ்க்கை அமைந்தவர்களுக்காக இருக்கட்டும் , அந்தந்த வயதில் கிடைப்பதெல்லாமே கிடைத்தவனாக இருக்கட்டும் சராசரியான வாழ்க்கை அமையாதவனாக இருக்கட்டும் , அல்லது அதை தேடுபவனாக இருக்கட்டும்  ( வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் இந்த நான்கு பிரிவுக்குள் அடக்கிவிடலாம ) எல்லோருக்குமே இந்த வார்த்தை மிக பொதுவானது. 

ஆனால் பைத்தியம் என்ற பெயரில் நாம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் பைத்தியமா? பெரும்பான்மைக்கு பிடிக்காத ஒன்றை ஒருவன் செய்தால் அவன் பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டால் அவனை அந்த வார்த்தைக்குள் அடக்கியவர்கள் எல்லோருமே மன நலத்தில் நூறு வீதம் உயர்ந்தவர்களா? பைத்தியம் என்றவனும் சிரிக்கிறான், அழுகிறான், கோபப்படுகிறான் அவனை பைத்தியம் என்று அடையாளம் கொடுத்தவனும் இந்த சராசரி உணர்வுகளை அசாமான்யமாய் வெளிக்காட்டும் பல சந்தர்ப்பங்களை நினைக்க முடிகின்றது  , மன நலம் பாதிக்கப்பட்டவன் தனியாய் சிரிக்கின்றான் என்றால், ஒருவன் சிரிப்பதை பார்த்து காரணமே இல்லாமல் சிரிப்பவனையும் அடுத்தவனை காயப்படுத்தி சிரிப்பவனையும் , விரக்தியில் சிரிப்பவனையும் வெறியில் சிரிப்பவனையும் எந்த வார்த்தையில் அடக்குவது நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்ற எண்ணம் வந்தவனும், இல்லை நான் தெளிவு என்ற எண்ணம் கொண்டவனும் என்று எவனுமே மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தையில் இருந்த இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் தப்பவே முடியாது .... (இரண்டாம் தொடுப்பு வரும் )

Thursday, September 27, 2012

"நீதானே என் பொன் வசந்தம்"-isayin 100



சிறிது காலம் அல்லது   நிரந்தரமாகவே  எழுதுவதை நிறுத்தி விடலாமா என்றளவுக்கு மிகப்பெரிய சலசலப்பை கடந்த பதிவு  ஏற்படுத்திவிட்டது.
 ( தனிப்பட்ட ரீதியில் ) அதனால் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டு இனி எழுதுற பொழப்பே வேணாம்னு இருந்தாலும், இதை எழுதாமல் இருப்பது என்பது நான் இந்த வலைப்பதிவையே ஆரம்பித்தமைக்கே அர்த்தம் இல்லாது செய்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருந்ததாலும். சில பதிவுகளில் பார்த்த விசயங்களினாலும் சரி என்று கணனிக்கு முன் அமர்ந்துவிட்டேன் ... "நீதானே என் பொன் வசந்தம்" கெளதம் படம் என்ற அடையாளமே இசைக்கு எதிர்பார்ப்பை எகிறவைக்க, கூடவே வந்த அந்த மந்திரப்பெயர் தமிழ் ,தெலுங்கு ஆகிய இரண்டு டீசர்களிலும் அந்த பெயரை உச்சரிக்கும் போது அந்த நாயகர்களின் சிலிர்ப்பு என்பன இந்த இசை தொகுப்புக்காக ஏங்கி காக்க வைத்தது .....

முதலாம் திகதி பாடல்களை வெளியிட்டாலும் அதற்கு முதல் வெளியிடப்பட்ட இரண்டு பாடல் பிட்டுக்கள் ஏமாற்றமாகவே இருந்தது , யுவன் குரலில் வரும் சாய்ந்து சாய்ந்து பாடலை ரேடியோ மிர்ச்சியில் கேட்டேன் உதட்டை பிதுக்கவேண்டி ஆயிற்று கூடவே ஒரு கவலையும் வந்தது பாடல்கள் அவ்வளவாக இருக்காதோ என்று. ஆனாலும் ராஜா என்ற மந்திர வார்த்தையின் மீது இருந்த நம்பிக்கையினால் காத்திருந்தேன் , என்னோடு வா வா பாடலை கேட்கும்போதும் அப்படித்தான் " நீ கோபப்பட்டால் நானும் " என்ற தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஒரு மெலடியை நினைவுபடுத்த கடுப்பாகிவிட்டேன்.  நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள்  மீது எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் முதலாம் திகதிக்காக எதிர்பார்ப்புடன் காக்க வைத்தது ராஜா என்ற அதே மந்திர வார்த்தை   .....


பாடல்களும் வெளியாகின. பித்து பிடித்ததை போல மீண்டும் மீண்டும் கேட்டேன் இதுவரை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது கண்டிப்பாக காதுகள் கேட்கிறது.  எல்லா நண்பர்களிடமும் விவாதித்தேன் யாரை கண்டாலும் குறித்த பாடல்கள் எப்படி என்ற கேள்வி என் வார்த்தை கொத்தில் கண்டிப்பாய் இருந்தது ....எனக்கு நூறு வீதம் திருப்தி " இனி அந்த எட்டு பாடல்களை பற்றியும் எனக்கு ஏன் அவை பிடித்தது என்பதை பற்றியும் எழுதுகிறேன் ஆனால் கண்டிப்பாக இது விமர்சனம் அல்ல எனக்கு பிடித்தமைக்கான காரணம்  அல்லது பிடிக்காததட்கான காரணம் அவ்வளவுதான் " ஏறு வரிசையில் ......

8 ) பெண்கள் என்றால் -

யுவன் பாடும் பாடல் என்னவோ எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கவில்லை. பின்னணி இசையில் மந்திரம் செய்த இளையராஜாவை தவிர வேறு எதுமே இந்த பாடலில் இல்லை. வரிகளும் ஏஸ் யூஷுவல் ,   எந்த தரப்படுத்தலிலும் பாடல் இப்போதைக்கு இடம்பிடிக்காது படம் வந்தால் பார்க்கலாம் ...


7) சற்று முன்பு பார்த்த -

காதலனை  நினைத்து உருகி உருகி பாடும் பாடல். மிக மெதுவாக நகரும் பாடல் ரம்யாவின் குரலுக்கே பாடல் அழகுதான் இங்குதான் நம்ம மொட்ட பாஸ் விளையாட்டை ஆரம்பிக்கிறார்........ திடீரென ஆரம்பிக்கும் சடார் இசை போக போக பாடல் அமைதியை தழுவுகிறது சிம்போனி ஆர்கெஸ்ட்ரா திடீரென் தாக்குவதும் பின் ரம்யாவின் குரல் நம்மை தூக்குவதும் என்று ஒரு இசை பிரளயமே நடக்கிறது இந்த பாடலில் .....வரிகள் ரசிக்கலாம்


6) புடிக்கல மாமு -


டியூன்  செல்லும் விதமே அருமை ... கண்டிப்பாக யூத்துக்கு பிடிக்கும். அனால் படம் காட்சியுடன்  பார்க்கும் வரைக்கும் பிடிக்க வாய்ப்பில்லை.  பல முறை கேட்டால் இந்த பாடலின் சுவையே தனி "ராக் ஸ்டைலில்" ஆரம்பிக்கும் பாடல் குத்தில் முடிகிறது. இங்கு மறுபடியும் ராஜாவின் மந்திரங்கள் அழகாய் தெரியும் பாடலின் டியூன் எப்படி போய் எங்கு முடியும், எங்கு அறுபடும் என்று அனுமானிக்கவே முடியவில்லை. ஹங்கேரி கலைஞர்கள் கருவிகளில் கொண்டுவரும் ஜீவனும் அழகு .... ஆனால் ஒரு பெரிய குறை பாடலில் இன்னைக்கு யூத்கிட்ட இருக்குற வசனங்கள்  வார்த்தைகள் மிஸ்ஸிங் ...

5) வானம் மெல்ல -

ராஜாவின் மந்திர குரல் இந்த படத்தில் ஒலிக்கும் ஒரே இடம் இந்த  பாடலில் ஆகத்தான் இருக்கும். " தென்றல் வந்து தீண்டும் போது " பாடல் ஆரம்பிக்கும் போது அந்த கோரஸ் நம்மை வந்து தாக்கும் .அந்த அடியிலேயே பாடல் முடியும் வரை நாம் பாடலுக்குள் இருந்து வெளியே வர முடியாது ... அப்படியான மேஜிக் இந்த பாடலிலும் இருக்கின்றது ... மிக அருமையான அரேஞ்ச்மேன்ட்ஸ்... மீண்டும் மீண்டும் கேட்கலாம் கேட்டு கேட்டு கிரங்கலாம் ..

4) முதல் முறை -

சுனித்தி சௌகான் பாடும் பாடல். முதல் தடவை கேட்கும் போது அவ்வளவாக ஈர்க்கவில்லை சாதாரணமாக போகும் பாடலில் காதுகளை ஈர்க்க ஆரம்பிக்கின்றது "நீதானே என் பொன் வசந்தம்" என்று சுனித்தி சௌகான் உச்சஸ்தாயியில் பாடும் இடம். அங்கிருந்து பாடல் என்னெல்லாமோ வித்தைகள் செய்து பாடலுக்குள் கட்டிபோடுகின்றது !,..... மிக அருமையான அரேஞ்ச்மேன்ட்ஸ்.

3) சாய்ந்து சாய்ந்து -

ஆரம்பம் யுவனின் குரல் மட்டும். அழகான மெலடிதான் ஆனால் ஈர்ப்பு இல்லை. பல்லவி முடிய இண்டர்லூட்டில் ராஜாவின் மந்திரம் அரை செக்கண்  அமைதிக்கு பிறகு ஆரம்பிக்கும். அங்கிருந்து பாடலில் இருந்து காதுகளை மீட்டெடுக்கவே முடியாது ரொம்ப அருமையான பாடல். யுவன் சரியான தெரிவு " என் தாயை போல ... என்று நீளும் பாடலின் கணங்கள் மறக்கவே முடியாத போதை ......"

2)காற்றை கொஞ்சம் -

கார்த்திக் பாடும் பாடல். உத்தியோகபூர்வ வெளியீட்டுக்கு முதல் நாள் வெளிவந்த பாடல் ... இந்த இசையை என்னவென்று சொல்லுவதென்று எனக்கு புரியவில்லை. ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான ஒலியை கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. சாதாரண டீயுன்தான் ஆனால் இந்த பின்னணி இசை என்னவோ செய்கிறது... மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் தந்திரம் என்னவென்று ராஜா வுக்குதான் தெரியும் " சரணத்தில்" வரும் ஒவ்வொரு வரிக்கு பிறகும் அதை அப்படியே மீண்டும் வாசிக்கும் அரேஞ்ச்மென்ட் ராஜாவின் புது அவதாரம் அந்த ஓசைக்காகவே பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ...

1)என்னோடு வா வா -

ஆரம்பத்தில் நான் சொன்ன குற்றச்சாட்டு இந்த மெட்டை ஏற்கனவே  கேட்டது என்று . பாடலை முழுதும் கேட்டபோதுதான் என்னை நானே காயப்படுத்தலாம் என்று இருந்தாது அவ்வளவு புது இசை இதுவரை கேட்டதே இல்லாத அரேஞ்ச்மேன்ட்ஸ் ... நீண்ட காலத்துக்கு பின்னர் ராஜாவின் ராஜாங்கம் இந்த பாடலில் கொடி ஏற்றுகின்றது    அனைத்து வானொலிகளிலும் இந்த பாடல்தான் நம்பர் one ...

மொத்தத்தில் ராஜா சார் இந்த படத்துக்காக தந்திருக்கும் இசை மிக புதுமையானது ( என அறிவுக்கு எட்டிய வகையில் ) ... படம் வந்த பின்னர் மீண்டும் ஒரு ரௌண்ட் அடிக்க ஆரம்பிக்கும் என்பதும் நம்பிக்கை ....

Friday, July 27, 2012

வழக்கு எண் 18/9

படம் வந்து பல காலம் ஆகிய பிறகு அண்மையில்தான் இந்த படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. ஒரு நாள் இந்த படத்தை பற்றி என் நண்பன் ஒருவன் சொன்னான் படத்தை பார்த்த இயக்குனர் பாலுமகேந்த்ரா இந்த படத்தை பார்க்கத்தான் இவ்வளவு நாள் உயிருடன் இருந்தேனா ? என்று ரொம்ப உருகி சொன்னாராம். அவர் கருத்து தப்பே இல்லை அவ்வளவு நேர்த்தியான படம்தான் . பார்க்கும்போதே தெரிகிறது குறுகியகாலத்தில் படமாக்கப்பட்டாலும் நீண்டகால உழைப்பை படத்தின் உருவாக்கத்திற்கு செலவிட்டு நிறைய உழைத்திருக்கிறார் இயக்குனர் காதலில் கிடைத்த நல்ல இயக்குனர் என்ற பெயரை "கல்லூரி படத்திலும் தக்க வைத்தாலும் வர்த்தக ரீதியில் கல்லூரி தோல்விப்படம் அதை இந்த படத்தில் ஈடுகட்டியிருக்கின்றார் பாலாஜி சக்திவேல் ( நல்ல திறமைசாலிகள் இக்காலத்தில் தோற்கக்கூடாது என மனப்பூர்வமாய் விரும்புவதால் அவரின் இந்த பட வெற்றி ஏதோ என் வெற்றி போலவே மனம் சொல்கின்றது ) விளிம்பு நிலை மனிதர்களின் வாழக்கை மாற்றங்களை அனுமானிக்கவே முடியாது "நடைபாதை உறக்கம்" , 'பல நாள் பட்டினி" என அனைத்தையும் அப்படியே சொல்லியிருப்பது அருமை அதை கனா காணும் காலங்கள் புகழ் ஸ்ரீ அப்படியே கொண்டு வந்திருக்கிறார் ( சில நாட்களுக்கு முன் கொழும்புக்கு வெறும் கனவோடு வந்து நான் பார்த்த பல விடயங்கள் ) . அவரின் நண்பனாக வரும் அந்த சின்ன பையன் கதாபாத்திரம் மிக அருமை. இந்த சின்ன வயசில் பையன் அமோகமா நடித்திருக்கிறான். சினிமா கனவை ஸ்ரீ தூண்டிவிட அதனை மறுத்து பேசி தன் கருத்தின் நியாயத்தை சொல்ல பேசும் வசனங்களும் அருமை. படம் முடியும் வரை கூட வரும் கதாபாத்திரம் அவனுடையது. கலக்கமே இல்லாமல் கொஞ்சமும் நடிப்பு பயம் இல்லாமலே அசால்ட்டாக பின்னியிருக்கும் அந்த பையனை உச்சி முகரலாம். கதை ஓட்டத்தில் சில விசயங்களை பாதியிலேயே அனுமானித்துவிட்டேன். முக்கியமாக அப்பாவி ஸ்ரீயை போலீஸ் பிடித்து, திருப்பமாக உண்மை குற்றவாளியும் பிடிபட , பிடிபட்ட குற்றவாளி பெரிய இடம் என்று வரும்போது அடுத்த கட்டம் தெரிந்துவிட்டது. ஆனால் முடிவில்தான் இயக்குனர் தான் யார் என்பதை காட்டியிருக்கின்றார் ..சபாஷ் ....... ஹீரோயின்கள் ரெண்டு பேருமே ரொம்ப அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு பெண் கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் படம் இதுதான். ( என் நினைவு சரி என்றால் பருத்தி வீரனுக்கு பிறகு நடிகைகள் நடிச்ச ஒரே படம் இதுதான் ) , பல நல்ல கதைகள் பாத்திரப்படைப்புகளினால் தோல்வி அடைந்திருக்கின்றன, இந்த படம் ஒரு போதும் தோல்வி அடைந்திராமல் இருக்க ஒரு நூல் அளவு தவறு கூட வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குனரும் அவரோடு பணி புரிந்த அணைவருமே கவனமாய் இருந்திருக்கின்றனர் அது நிறைவேறியும் இருக்கின்றது ......

Wednesday, July 25, 2012

சிரட்டை

 எங்க ஊரை சுற்றிலும் பல ஊர்கள் மத்தியில்தான் நாங்கள் அதுவும் ஒரு பள்ளத்தாக்கு , ஒரு நேரம் வந்தால் எல்லா ஊர்கள்லயும் திருவிழா கலைகட்டும் ஒரு ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பதால அநேகமா  பள்ளிக்கூடத்துல அந்த ஊர் பசங்கதான் அதிகமா படிப்பாங்க. திருவிழான்னு வந்துட்டா வெறும் மேசைக்குதான் வாத்தி பாடம் நடத்த வேண்டி வரும். ஊரை சுற்றி நாலு ஊர் என்பதால நாலு ஊர்லயும் திருவிழாவுக்கு குழாய் ( ஸ்பீக்கர் )  கட்டி பாட்ட கத்த விட்டுருவாங்க. நாலு பக்கம் இருந்து பாட்டு வந்து நடுவில இருக்க நமக்கு எல்லாம் கலந்து ஒண்ணுமே புரியாமல் ஒரு சத்தம் மட்டும் விடிய விடிய கேட்கும் ,அநேகமாக அந்த பாட்டுகள விரல் விட்டு எண்ணிடலாம் ( செல்லாத்தா செல்ல மாரியாத்தா , கற்பூர நாயகியே , பாட்டுகள் இல்லாமல் திருவிழாவே கெடயாது )

திருவிழாவில கடைசி நாள் ரதம் வரும். விடிய விடிய ரத பவனி அப்படி பல ஊர்கள கடந்து ரதம் எங்க ஊருக்கு வரும் போது எப்டியும் ராத்திரி பத்து மணி ஆகிடும். ரதத்துக்கு முன்னால பல களியாட்டங்கள், கரகாட்டம்தான் சிறப்பு ...எனக்கு அப்போ ஒரு பன்னிரண்டு வயசு, ராத்திரி  ரதத்தின் பின்னால கொஞ்ச தூரம் போக வீட்டுல அனுமதி வாங்கியாச்சு அடம்புடிச்சுதான். என் வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல ஸ்ரீதர் வீடு ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஒரே பள்ளிக்கூடம் அப்புறம் பெரிய பள்ளிக்கூடம் ஒன்னுக்கு போய்ட்டான்... சரி அவனும் திருவிழாக்கு வந்ததால அவன்கூட நானும் சேர்ந்துட்டு பைக்கட் ஐஸ்க்ரீம் இரண்டு வாங்கி சாப்டுட்டே ரதத்துக்கு பின்னால  போயடிருந்தோம்.

ரதத்துக்கு பின்னால  ஒரே பொண்ணுங்க கூட்டம் எவ்ளவோ தேடி பார்த்துட்டேன் என் ஆள் வரல!.... ரதத்துக்கு முன்னால மேல வாத்தியத்துக்கு முன்னால கரகாட்டம். அங்க ஒரே கூட்டம் விசில் சத்தம் பறக்க ஒரு பொண்ணு சும்மா சுழன்று சுழன்று ஆடுறா .... சுத்திவர ஒரே கூட்டம் ஒவ்வொரு தடவை சுழர்ரபோவும் கூட்டத்துல ஏகப்பட்ட கைதட்டல். நானும் ஸ்ரீதரும் அந்த ஜோதியில கலந்துட்டோம் எல்லார் பார்வையும் அந்த பொண்ணு மேல என்ன ஒரு பதினாறு வயசு இருக்கும். பலபேர் அவ மார்பையே வைத்த கண்ணு  வாங்காம பார்திட்டிருக்காங்க  ஆட்டம் நம்ம சங்கிலி அண்ணனுக்கு புடிச்சு போச்சு (ஆட்டம் புடிச்சத விட அய்ட்டம்தான் ரொம்ப பிடிச்சிருக்கனும் ) பத்து ரூபா நோட்டுக்களால ஒரு மாலைய செஞ்சு தள்ளாடி தள்ளாடி போய்  அந்த பொண்ணு கழுத்துல  போட்டுட்டு கூடவே மார்பையும் உரசிட்டு வந்துட்டார்.  அண்ணன் ஊர்ல பெரிய பணக்காரர் சொந்தமா ஒரு பஸ் வச்சிருக்காரு, கூடவே சின்னதா ஒரு மளிகை கடை மாச வருமானம் பத்தாயிரத்தையும் தாண்டும்னு அப்போ எங்க ஊர்ல ஆச்சர்யமா பேசுவாங்க . என் வயசு பையன் ஒருத்தனும், கரகம் ஆடுற பொண்ணு வயசுல ஒரு பொண்ணும் இருக்காங்க மனுஷன் பலான விசயங்கள்ல செம கில்லாடின்னு கேள்விபட்டிருக்கேன் .நல்ல வாட்ட சாட்டமான தோற்றம்தான் இரண்டு வாரம் சவரம் செய்யாத தாடி அந்த பொண்ணும் இவர் உரசினத ரசிச்சா மாதிரிதான் இருந்துச்சு.

அண்ணன் கண்ணு வச்சுடாண்டா .... ஸ்ரீதர் சொன்னான் சும்மா இருடா கேட்டுறபோவுதுன்னு நான் மழுப்ப..... நேரம் பதினொரு மணி இருக்கும்  நாங்க இரண்டு பேரும் அங்க இருந்து அடுத்த பக்கம் போய் பலூன் வாங்கிட்டு ஓடி பிடிச்சு விளையாடிட்டு வந்துட்டம்.  பௌர்ணமிதானே நல்ல வெளிச்சம் ரதம் அதை சூழ வந்த கூட்டம் எல்லாமே தூரத்துக்கு போற சத்தம் கேட்டுச்சு. நானும் ஸ்ரீதரும் வீட்டுக்கு போற வழில சங்கிலி அண்ணன் வீட்ட தாண்டிதான் போகணும் சரியாய் அவர் வீட்ட தாண்டும் போது உள்ள யாரோ அழுற சத்தம் கூடவே சங்கிலி கதைக்கும் சத்தமும் ....மூக்க முட்ட குடிசிருந்தது பேச முடியாம தள்ளாடுனத பார்க்கவே புரிஞ்சுது. அண்ணன் குழைவது பேசுற தொனியிலேயே கேட்டுச்சு டேய் வாடா பார்க்கலாம்னு கூட சொல்லாம ஸ்ரீதர் அந்த வீட்டு கதவு கிட்ட போய் இருந்த   சந்து வழிய பார்க்க ஆரம்பிச்சான். அப்போதான் தெரிஞ்சது கதவு சரியா பூட்டுப்படல

டேய் என்னடா பண்ற ? வீட்டுக்கு போவனும்டானு சொன்னது அவன் காதுல கேக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஆர்வமா உள்ள நடக்குறதுகள பார்த்துட்டு என் பக்கம் திரும்பாமலேயே கையாள என்ன வர சொல்லி சைகை காட்டுறான்.  உள்ள சங்கிலி அண்ணன் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கரகாட்டம் ஆடின அதே பொண்ணு அழுதுட்டு நிக்குறா. சங்கிலி அண்ணன் ஏதேதோ பேசி தொட முயற்சி பண்ண ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்  அந்த பொண்ணு அழுறதா நிறுத்தவே இல்லை. அண்ணன் தள்ளாடி தள்ளாடி எதையோ பேசுறார் அந்த பொண்ணு மசியிரா மாதிரி தெரியல. எங்களுக்கு பின்னால யாரோ வருவது போல இருந்தது அதை பார்க்க திரும்பி இந்த பக்கம் திறும்புறதுக்குள்ள அண்ணன் அந்த பொண்ண கட்டி பிடிசுட்டாறு அவ அந்த பிடில இருந்து விலக திணறுரா... நான் வாய எப்போ திறந்தேன் தெரியல திறந்த வாய் மூடாமலே இருக்கு. ஸ்ரீதர் சிரிக்குறான் கொஞ்ச நேரத்துல அண்ணன் அந்த பொண்ணோட சேலைய எல்லாம் இழுக்க ஆரம்பிச்சுட்டார் அவ கஷ்டப்பட்டு மார்ப மறச்சுக்க முயற்சி பண்றா அப்போவும் சங்கிலி விடுறா மாதிரி தெரியல ஒரு கட்டத்துல இனி தப்ப முடியாதுன்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும் மார்புல இருந்த கைய எடுத்துட்டா அலுகுரதையும் நிறுத்திட்டா திடீர்னு ஒருபக்க   மார்பு கழண்டு கீழ விழுந்துடுசுச்சு ஆஆஆஆ அதெப்புடி அத என்ன ஒட்டியா வச்சுருக்காங்க இந்த பொண்ணுங்க கழண்டு விழுது ???????? நானும் ஸ்ரீதரும் ஒருத்தர ஒருத்தர் கேள்வியோட பார்க்குறம் பின்னால யாரோ வர்றது தெளிவா கேட்டுச்சு நானும் அவனும் வீட்ட தாண்டி இந்த பக்கம் வந்துட்டம் நல்ல வேளை பின்னால வந்தது சங்கிலி அண்ணனோட பொண்டாட்டி ரதத்துக்கு பின்னால போய் இப்போதான் வர்றாங்க

வந்தவங்க அப்டியே வீட்டுக்குள்ள போனத நாங்களும் பார்த்தோம் அவ்வளவுதான் வீட்டுக்குள்ள ஏதேதோ உடையுற சத்தம் எல்லாம் கேக்குது நானும் ஸ்ரீதரும் அந்த வீட்டு ஜன்னல் பக்கமா போயிட்டம் சங்கிலி அண்ணனுக்கு தர்ம அடி .... எனக்கு சிரிப்பு தாங்க முடியல அந்த பொண்ணு ஓட ஆரம்பிக்க சங்கில அண்ணனோட பொண்டாட்டி அவள் தலை முடிய பிடிச்சு இழுக்க அதுவும் கழண்டு அவங்க கையோட வந்துடுச்சு .... மயிர் போனாலும் பரவாயில்ல உயிர் தப்பிச்சத பெருசா எடுத்தது மாதிரி  அந்த பொண்ணு  ச்சே ச்சே பொண்ணு வேஷம் போட்டிருந்த பையன் விட்டான் பாருங்க ஓட்டம் ஓடுறப்போ இன்னுமொரு பக்க மார்பும் கழண்டு விழுந்துடுச்சு நானும் ஸ்ரீதரும் அந்த இடத்துக்கு போய் பார்த்தோம் ""சிரட்டை""
சிரிச்சு சிரிச்சு வீடு வரைக்கும் போனதே தெரியல அப்பாவும் சங்கில் அடி வாங்குற சத்தம் நிக்கவே இல்லை அடப்பாவி மனுஷா இரண்டு  தேங்காய் சிரட்டைக்காகவா இந்த அடி வாங்குற'???????? ஹி ஹெஈ

Monday, July 23, 2012

நட்சத்திர வீதியில் என் மனதின் பிரதிபலிப்பு



சினிமாவில் நான் அதிக ஆர்வம் கொண்டு பேசுவதாகவும் அதிகம் அதை பற்றி எழுதுவதாகவும் பலர் என்னிடம் குறைபட்டிருக்கின்றார்கள். சில நண்பர்கள் திட்டியும் இருக்கின்றார்கள்.  என்னை பொறுத்த மட்டில் சினிமா என்பது மட்டும்தான் என் பொழுது போக்கு அதை நான் ஆழமாய் நேசிக்கின்றேன், வலுவாய் காதலிக்கிறேன். அஜித் பற்றி நான் அதிகம் அலட்டுவதாகவும் பலர் திடியிருக்கின்றார்கள் அஜித் என்ற மனிதனையும் நடிகனையும் நான் நேசிக்கிறேன் அவரவர் தம்மை வளர்த்துக்கொள்ள முன்னுதாரணமாய் பலரை எடுக்கின்றார்கள், நான் அஜித்தின் உழைப்பை நேசிக்கிறேன், அந்த அடங்காமையை விரும்புகின்றேன். இதில் என்ன தவறு இருக்கின்றது என எனக்கு புரியவில்லை. சாப்பிட கோட காசு இல்லாமல் இருக்க படத்துக்காக பணத்தை செலவழிக்கும் கோமாளி அல்ல நான். என்னை அடுத்த வேலைக்காக தயார்படுத்தும் ஒரு இடமாகவே படங்களை பார்க்கின்றேன் .  "குடித்து கும்மாளம் அடிப்பதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை செலவழிப்பதும், குட்டி உஷார் பண்ணி ஊர் சுத்துவதும் தப்பில்லை என்றானபோது" ஒரு நடிகனுக்காக நான் எழுதுவதில் என்ன தவறு இருக்கின்றது? புரியவில்லை , இன்னுமொன்று நான் ஒரு நடிகனுக்காக எப்போதும் பிற நடிகர்களையோ அல்லது மனிதர்களையோ தாழ்த்தியதும் இல்லை, தேவை இல்லாமல் உயர்த்தியதும் இல்லை இந்த வலைப்பூவை நான் என் மன உணர்வை பிரதி பலிக்கும் ஒரு இடமாகவே கருதுகின்றேன். கிட்டத்தட்ட நட்சத்திர வீதியில் என்பது என் நாட் குறிப்பு போன்றதே என்ன ஒன்று அந்த நாட்குறிப்பை பொதுவாக யாரும் படிக்கக்கூடியதாய் வைத்திருக்கின்றேன்  எந்த ஒழிவு மறைவும் இல்லாமல்  அஜித் படத்தை பார்த்து என்னை நான் ஒய்வாக்கிக்கொள்கிறேன். மூன்று மணித்தியாலங்கள் சந்தோசப்படுகின்றேன் இதில் என்ன தவறு இருக்கின்றது ?
Copyright © 2014 நட்சத்திரவீதியில்