Thursday, April 19, 2012

மூன்றில் உள்ள நான்கு

1-தனுஷ் மீண்டும்  சய்க்கோவாக  நடித்திருக்கும் படம்
2-ஸ்ருதி ஹாசனுக்கு  நடிப்பு வராது  என்று மீண்டும்   காட்டிய படம்
3-இயக்குனராக ஐஸ்வர்யா எந்த இடத்திலும் தனித்துவமாக தெரியாத படம்

4-அனிருத்தின் பின்னணி இசைக்காகவும் பாடல்களுக்க்காகவுமே பார்க்கலாம்   என்று பேசவைத்த படம்

ஓகே........ ஓகே........ நல்லாத்தான் இருக்கு ஓகே........ ஓகே........

புதுசா காதல் வயப்படுறவங்க சொல்வாங்களே" அவளை  ஏன் பார்க்குறேன்னு புரியல ஆனா புடிச்சு இருக்கு பார்த்தா என்னையே மறக்குறேனு" அந்த மாதிரி   ஏன் பார்க்கிறோம் எதற்காக பார்க்கிறோம் என்று தெரியாமலேயே விரும்பி பார்க்க வைத்திருக்கின்றார்கள். உதயநிதிக்கு இயல்பாகவே  நடிப்பு வந்திருக்கு சந்தானம் இந்த வருஷம் இனி படம் பண்ணவே தேவையில்ல என்றளவுக்கு தீனி போட்டிருக்கின்றார். வேணாம் மச்சான் வேணாம் திரையரங்கிலும் அப்ளாஸ், ஹரிஷின் வழக்கமான மெட்டுக்கள் அனால் வழக்கம் போல ரசிக்க வைத்துவிட்டார். ஐயோ என ஏங்கவைக்கும் ஹன்சிகா என்று படம் முழுக்க சந்தோசம் சந்தோசமாக பொழுதை கழிக்க செம படம் , குறைகள் நிறைய ஆனால் சொல்ல மனசே வரல காரணம் படம் முடியும் வரை அப்படி ஒரு சிரிப்பு மழை  ( சிரிக்க வச்சு சந்தோஷ பட வைக்குரவங்கள எப்டிங்க குறை சொல்றது ?)

பி கு -     சிவா மனசுல சக்திக்காக இயக்குனர் ராஜேஷ் ஜீவாவை தேர்வு செய்திருப்பார் அந்த படத்தில் சிவா கதாபாத்திரத்தை ராஜேஷ் என்ன விதத்தில் உருவாக்கினாரோ அதே முறையில்  உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவும் , இப்போ ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்திருக்கும்  உதய நிதியும். ஆனால் இருவராலும் ஜீவா அளவுக்கு  அந்த கதாபாத்திரத்திட்கு உயிர் கொடுக்க முடியவில்லை

மனம் திண்ணிக்கழுகு


தமிழில் இதுவரை தொடாத ஒரு கதை தான் என்று ஓரளவுக்கு சொல்லலாம் ஆனால் தொடாத மையக்கரு என்று தைரியமாக சொல்லலாம் தீண்டத்தகாதவர்கள் போல கணக்கெடுக்கப்படும் விளிம்பு நிலை மனிதன் ஒருவனுக்கு இருக்கும் சராசரி உணர்வுகளை அற்புதமாக சுட்டிருக்கின்றார்கள்,பிணம் தின்னும் கழுகு கூட பசிக்காகத்தானே தின்கின்றது ? இங்கு பிணம் தேடி அதில் இருந்து வயிற்றை நிரப்புபவர்களின் கதை என்பதால் படத்தின் பெயர் "  கழுகு" சபாஷ் இயக்குனர் அவர்களே. கிருஷ்ணாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு, தேசிய விருது பெற்ற கலைஞன் ஆச்சே தம்பி ராமையா வழக்கம் போல பின்னி பெடலெடுத்திருக்கு மனுஷன். கருணாசுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க நல்ல வாய்ப்பு ", பிந்து மாதவி பொருத்தமான தேர்வு ,  ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் " இப்போதும் காதுகளுக்குள். நல்ல படம் .  வெளிச்சம் இல்லாமல் திரைக்கதை காட்சிகள் அமைத்தது என்ன லாஜிக் என்று மட்டும் புரியல ....

Tuesday, April 10, 2012

"தமிழ் தொலைகாட்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகர ஆளுமை "


பொண்ணுங்கள பொருத்தவரைக்கும் டி வீ க்கு முன்னால அழகா இருந்தாலே போதும் மண்டைல எதுமே இல்லாததுகள் கூட சீக்கிரமே மக்கள் ரசிக்குறாங்க ஆனா இந்த பசங்க நிலைமை எப்பவுமே திண்டாட்டம் தான். எதையாவது வித்தியாசமா செய்தே ஆகணும் . நம்ம நாட பொறுத்த வரைக்கும் நல்ல துல்லியமான தமிழுக்கும் , உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் ஆனா இப்போ நம்ம நாட்லயும் இந்திய தொலைக்காட்சி மோகம் வந்ததால அவசர அவசரமா எல்லா டி வீ களும் தங்களையும் தொகுப்பாளர்களையும் மாத்த வேண்டிய நிலைமை அதுலயும் இந்திய நிகழ்ச்சிகளை வச்சு இப்போ எல்லாம் டி வீ நடத்தவே முடியாது ஏன்னா அதுக்கு செய்மதில சன் டி வீ இல்லனா விஜய் டி வீ பார்த்துடலாம் .

இந்த இந்திய தொலைகாட்சிகளின் இலங்கை மீதான ஊடுருவல் பற்றி நிறைய பேர் அக்கறை படுறாங்களே இல்ல. இன்னமும் ழைய பஞ்சாங்கங்கல்லேயே அக்கறையா இருக்காங்க அடையாளம் அடையாளம்னு , அடையாளம் இல்லாம போறாங்க . ஆனா இலங்கை தொலைகாட்சிகள் இப்படியே போனா கண்டிப்பா இலங்கை முழுக்க சன் டி வியும் விஜய் டி வீ யும் கொடி கட்டி பறக்கத்தான் போகுது.



இப்போ மேற்படி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் மேட்டருக்கு வருவோம் நல்ல தமிழ் பேசணும் துல்லியமா பேசணும் அப்டினா அது இயல்பா வந்தாதான் அழகு. ஆனா பலர் அப்படி ஒரு தமிழை கஷ்டப்படுத்தி வரவச்சு பேசினா எரிச்சல் தான் மிஞ்சும் , இன்னுமொரு பக்கம் இந்திய தமிழ் பேசுகிறோம் அப்டினா அதுவும் இயல்பாவே வரணுமா இல்லையா ? இங்க நம்ம தொலைகாட்சிகள்ள ஏதோ பிறந்து வளர்ந்ததே தமிழ் நாடு அப்டின்ற மாதிரி இந்திய தமிழ் பேச போய் அதுவும் கொச்சைபடுத்தப்பட்டு மறுபடி எரிச்சல். நமக்கு என்ன வருமோ அத செய்தாதான் அழகு மக்களும் ரசிப்பாங்க (எனக்கு பூர்வீகம் தமிழ் நாடு அதால எனக்குள்ள இந்திய தமிழ் வாடை இயல்பாவே ஒட்டியிருக்கு அதுனால நான் தைரியமா அந்த தமிழ் பேசுறேன் )

விஜய் டிவீ அறிமுகப்படுத்திய புரட்சிகர மாற்றங்கள் தொகுப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை எல்லா நிகழ்சிகளிலும் ஒரு பொண்ணு வந்து கையையும் தலையையும் ஆட்டி , அர்த்தமே இல்லாம காரணமே இல்லாமல் சிரித்துகொண்டிருந்த சம நேரத்துல விஜய் டி வீ பல புதுமையான தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ் வசந்தன் ( தற்போது இசையமைப்பாளர் ) தொகுப்பாளராக புகழ் பெற்றார். தொடர்ந்து அவரை விஜய் டி வீ பயன்படுத்தியது விஜய் என்றாலே ஜேம்ஸ் வசந்தன் தான் என்று அவரை அடையாளப்படுத்தியது அதன் தொடர்ச்சியாக அந்த இடம் வெறுமையாய் இருக்க ந்த இடத்தை நிரப்பினார் டீ டீ எனப்படும் திவ்ய தர்சினி. விஜய் டி வீயை பொருத்தமட்டில் ஒருவரை மிக அழகாக அடையாளப்படுத்தும். அதன் தொடர்ச்சியாக திடீரென தன்னை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நேயர்களையும் தன் பக்கம் ஈர்த்துகொண்டார் "நீயா நானா கோபிநாத்" மீசை இல்லாமல் இருபத்தைந்து வயதுக்குள் தான் தொகுப்பாளர்கள் என்ற வரை முறையை மாற்றி கோபி அசத்தினார் எல்லா டி வீ களும் கோபி மாதிரி ஆளுமை உள்ள தொகுப்பாளர்களை தேட ஆரம்பித்தது. குறைந்தது அந்த உருவம் உள்ளவர்களையாவது தேடி போட ஆரம்பித்தது . ( இதுல நல்ல உதாரணம் கலைஞர் டிவி யின் சங்கர் ) அப்புறமா விஜய் டி வி யின் வழக்கமான பார்முலாதான் கோபி எல்லா நிகழ்ச்சிகள்ளையும் பயன்படுத்தப்பட்டார் ( இப்பவும் அப்டிதான் )

எல்லாம் தாண்டி விஜய் தொலைகாட்சியின் ஒரு சிரிப்பு நிகழ்ச்சி " கலக்க போவது யாரு " மூலமா ஒரு போட்டியாளரா அறிமுகமான அந்த இளைஞன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பையே மாத்தி போடுவான் என்று அப்போது டி வீ பார்த்த யாருமே நினைக்க வாய்ப்பில்லை . ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் அந்த இளைஞன் அபாரமாய் தன்னை வளர்த்துக்கொண்ட விதம் ஆச்சர்யமாய் இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை , மிமிக்ரிளையும் அண்ணன் வெளுத்து வாங்கவே விஜய் டி வீ யின் தேடலில் அடுத்த வித்தியாசாமான ஆளுமையாய் சிக்கினார் "சிவகார்த்திகேயன் ". மற்றைய எல்லா தொகுப்பாளர்களையும் தன் பக்கம் ஈர்த்த விதம் மிக வித்தியாசம் நாம பார்க்கும் போது எந்த நிமிசமும் நம்ம பார்வைக்குள்லையே நிரம்பும் ஆளுமை சிவகார்த்திகேயனுக்கு உண்டு ,எவ்வளவு பெரிய ஆர்டிஸ்டாக இருந்தாலும் சிவா விடம் அலாதி பிரியம் காட்ட ஆரம்பித்தனர். எல்லோரிடமும் தனித்து தெரிந்தார் சிவா , மீண்டும் விஜய் டி வியின் வழக்கமான பார்முலா இப்போது விஜய் டி வி யின் எல்லா நிகழ்ச்சிகளிளும் சிவகார்த்திகேயனின் முகம்தான் , பார்க்க பக்கத்து வீட்டு பையனின் முகம் செயற்கை இல்லாத தமிழ் எல்லா விஷயத்துலயும் நகைச்சுவையை கொண்டு வந்து சேர்த்தல் , ன்று இந்திய தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நடையையே மாற்றி போட்ட பெருமை சிவாவுக்கு உண்டு . இப்போது அதன் தொடர்ச்சியாக சினிமாவுலயும் அண்ணன் கலக்க ஆரம்பிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு !


நிற்க சிவகார்த்திகேயனிடம் இருந்து நம்ம கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு அதெல்லாம் சொல்ல போனால் எழுத போனா நான் ஏதோ சொல்லகூடாத எதையோ சொன்ன மாதிரி தூற்றப்படுவேன். ஆனால் எனக்கு தெரிய இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தமக்கு இயல்பாக வருவதை செய்ய வேண்டும் ( இது எனக்கும் சேர்த்துதான் ) . அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு இடமளிக்க வேண்டும் இல்லையெனில் மாறும் ரசனையில் இந்திய டி வீ விகளின் அபார வளர்ச்சியில் நம்ம ரசிகர்கள் ஊரிப்போவதை தடுக்க முடியாது ( இப்பவே இலங்கை நாளேடுகள்ள நேத்ரா டி வி , சக்தி டிவி , வசந்தம் டி வி களின் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போய் ஜெயா டிவி, சண் டிவியில் என்ன நிகழச்சிகள் என்று நிரல் போட ஆரம்பிச்சுடாங்க ).

Friday, January 6, 2012

முடிந்த வருடமும் தொடரும் நிணைவுகளும்

முதலில் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கால மாற்றம் அளவிட முடியாத வேகத்தை தொட்டிருப்பதை என்னால் கடந்த மூன்று வருடங்களாக துல்லியமாய் உணர முடிகின்றது ஊரும் ஊர்காற்றும் சூழ்ந்திருந்த வரை காலம் இவ்வளவு வேகமாய் இருக்கவில்லை வாழ்க்கையை தேடி கொழும்பு வந்த பிறகுதான் காலமாற்றத்தின் வேகம் எவ்வளவு என்பதை உணர முடிகின்றது

கடந்து போன வருடம் எனக்கு எந்த காலத்திலும் மறக்க முடியாத மாறாத ரணங்களை அள்ளி கொடுத்துவிட்டு சென்றுள்ளது , வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் தாங்க வேண்டிய சுமையை நான் கடந்த ஆண்டில் தாங்கிவிட்டேன் அதே வேளை மரணம் எவ்வளவு இயல்பானது என்பதையும் கடந்த ஆண்டு எனக்கு உணர்த்தியிருந்தது , மரண ஊர்வலங்கள் , மரண பெட்டி ,இவற்ற்றை பார்த்தாலே எனக்கு உடல் நடுக்கம் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை வரும் ஆனால் கடந்த ஆண்டு அப்பாவின் இழப்புக்கு பின்னர் அத்தனயும் இயல்பாக என்னால் பார்க்க முடிகின்றது கடந்த வருடத்தின் இரண்டு மாதங்கள் வரையிலும் என்னை சூழ இருந்த உறவுகள் நட்புகள் என்று இப்போது என்னுடன் யாருமே இல்லை இருக்கும் ஒரு சிலரோடும் பழகும் ஆர்வம் வெகுவாய் குறைந்து போக பொழுதுகள் பல நேரங்களில் தனிமையை மட்டுமே விரும்புகின்றது . தனித்து விடப்பட்ட பின்னர் எனக்குள் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது (மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி )

சில நேரங்களில் எனக்குள் நல்ல பக்குவம் வந்துவிட்டதோ என்றும் நினைக்க தோன்றுகின்றது. பெரும்பாலும் வள வளா என்று பேசும் என் பேச்சு இப்போது தாராளமாய் குறைந்துள்ளது ஆனால் எப்போது நான் சக மனிதர்களுடன் " வெட்டி " பேச்சை குறைத்தேனோ அப்போதே திமிர் தலைக்கேறியவன் என்ற பட்டத்தை அழகாக சூடிவிட்டு விட்டார்கள் அது கொஞ்சம் வேதனையாய் இருந்தாலும் அதையும் சகித்து கொள்ளும் ஒரு கடுமையான வேலையை பழக வேண்டிய கட்டாயத்தையும் கடந்த ஆண்டு எனக்கு தந்திருந்தது , கோபமும் கொஞ்சம் குறைந்துள்ளது ஆனால் காலுக்கு கீழேயே குழி பறிப்புகளும் நடப்பதால் தவிர்க்க முடியாமல் வெடிக்க வேண்டியுள்ளது ஆனால் இப்போதெல்லாம் அதுவும் ரொம்ப பழக்கமாகி விட்டது சின்னதான ஒரு சிரிப்புடன் நகரும் பக்குவத்தையும் கடந்த வருடம் தந்ததாய் உணர்கிறேன்

வானொலியும் ஊடகமும்தான் இனி என்று நான் எப்போது தீர்மானித்தேனோ அப்போதே ஒரு விடயத்துக்கு நான் முகம் கொடுக்க தயாராய் இருந்தேன் அது இப்போது எனக்கு பலமாய் இருக்கின்றது ( எதிர் பார்க்காமல் நடந்தால் அது கஷ்டமாக இருக்கும் என்பது உண்மை ) அப்போதிருந்து பல்வேறு தடைகளையும் மீறி வானொலிக்குள் வந்த பிறகு ஊடகம் என்ற வார்த்தையின் உண்மை ஆழத்தை நான் உணர இந்த மூன்று வருடம் போதும் என்று அதிக பிரசங்கியாக என்னால் பேச முடியாது . ஆனால் அந்த ஆழத்தின் விசாலத்தை என்னால் உணர முடிகின்றது வானொலி அறிவிப்பாளனாக ஆரம்பித்த எனது ஊடக பயணம் , குறுகிய இடைவெளிக்குள் தொலைக்காட்சிக்குள் செல்ல அதன் சீரிய தொடர்ச்சியாக பத்திரிகை துறைக்குள்ளும் சென்றது கடந்த ஆண்டில்.
சக்தி தொலைக்காட்சியில் காலை நேர நிகழ்ச்சியை வாரத்தின் இரு நாட்கள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன் ,மற்றும் லண்டனில் வெளியாகும் சுடர் ஒளி என்ற பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியராக
செயற்படும் வாய்ப்பு கிடைத்தது கடந்த ஆண்டில் வாய் ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற பட படப்பிலேயே பல தடவை சொதப்பிய நினைவுகலும்
கடந்த ஆண்டில் தாராளமாய் உள்ளது

பலமான ஒரு அடித்தளத்தை உருவாக்கும் மிகப்பெரிய வேளை இவ்வாண்டில் கம்பீரமாய் என் முன் நிற்கின்றது லேசான பயமும் இல்லாமல் இல்லை வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு வருடத்தில் நிற்கிறேன் இப்போதெல்லாம் மனம் அடிக்கடி ஒரு வாசகத்தை நினைத்துக்கொள்கின்றது
அது "செய் அல்லது செத்து மடி "

Friday, November 11, 2011

அஜீத் என்னும் ”மனிதன்” - ஒரு மேக்கப்மேனின் பார்வையிலிருந்து ..





நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.
கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.
இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.
அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.
‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.
‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.


‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.


‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.
‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.


‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’


‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’
‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’



இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’
‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’


‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’
‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

ஹெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’


‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’


‘அது பெரிய விஷயமாப்பா?’
‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’


‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’
‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’
‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’


‘அப்புறம்?’
‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’


‘சாப்பாடு மட்டும்தானா?’
‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு…’ இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.
செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.
மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.



பத்ரி சேசாத்ரி கிழக்கு பதிப்பக உரிமையாளர் ( நன்றி -அஜித் ரசிகர் இணையம் )

Sunday, October 30, 2011

விசித்திரமாகிப்போன சரித்திரம்



'சரித்திரம் விசித்திரங்களால் ஆனது அல்லது விசித்திரங்கள் நிறைந்தது தான் சரித்திரம் வெற்றியாளணினால் சரித்திரம் எழுதப்படுவதும் தோல்வியடைந்தவனின் விம்பம் அதில் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவதும் சரித்திரத்தின் விசித்திரம்தான். நாளை நிகழ்கால நல்லவர்களை அது கெட்டவர்களாக காட்டும் நிகழ்கால கெட்டவர்களை வீர தீர சாகசம் புரிந்தவனாக சரித்திர விம்பம் காட்டலாம் எல்லாமே வெற்றியின் கைகளில் உள்ளது. அல்லது சரித்திரத்தின் விம்பத்தை நிர்ணயிக்கும் சக்தி வெற்றிதான் '

கடாபி .......

கடந்த ஒரு வாரம் முழுவதும் உலகின் மூலைமுடுக்கெங்கும் உச்சரிக்கப்பட்ட அழுத்தமான பெயர் ஒரு சிலருக்கு கடாபி ஒரு கடுமையான புரட்சியாளன் ஒரு போராளி மேற்கின் நவகாலனித்துவ சக்திகளுக்கு எதிராக உரத்த தொனியில் எதிர்ப்பை காட்டியவர் லிபியாவை செல்வந்தனாக்கியவர் லிபிய தேசத்தை சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியவர் ஆரம்பத்தில் லிபியாவின் 'ச்சே குவேரா' என்று அழைக்கப்பட்டவர் உலக முஸ்லிம் இளைஞர்களின் 'ஹீரோவாக' போற்றப்பட்டவர் ஒரு சமயம் மத்தி
ய கிழக்கையும் மறு சமயம் ஆப்பிரிக்காவையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர முயன்ற 'மண்ணை தான் சார்ந்த இனத்தை'நேசித்த ஒரு தலைவன்

ஒரு சிலருக்கு அவர் ஒரு மோசமான சர்வாதிகாரி தானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு பிடிவாதக்காரன் தன்னை பற்றி அதீத நம்பிக்கை கொண்ட ஒரு கற்பனா வாதி வெகு சிலருக்கு அவர் ஒரு பயங்கர வாதி சர்வ அதிகாரங்களையும் கொண்டதனால் அத்து மீறல்களை தாராளமாய் செய்த ஒரு சுயநல வாதி

இப்படி கடாபி நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் நாயகன் பாணியில் 'தெரியலம்மா' என்றுதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது நாற்பது வருடங்கள் பின்னோக்கி சென்றால் லிபியாவின் ஒரு ஆட்சியாளனை எதிர்த்து ரத்தம் சிந்தா இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை தன் கைக்குள் கொண்டு வந்த அந்த இளைஞன் ஒரு சாதாரண 'பழங்குடி இனத்தை சேந்தவன்'

வசீகரிக்கும் தோற்றம் கொண்ட அவனுக்கு வயது வெறும் இருபத்தேளே ஆனபோது உலகின் அனைத்து மூலையின் பார்வையையும் தன் வசப்படுத்தி ஆச்சர்ய படுத்தினான் தன்னை கேர்ணலாக தானே பதவி உயர்த்திக்கொண்டு ஆட்சியில் அமர்ந்த போது லிபிய மக்கள் அவனைஒரு மாவீரனாகவே பார்த்தனர் லிபியாவின் விடுதலைக்கான சரியான வழிகாட்டி அவன்தான் என பரி பூரணமாய் நம்பினர் மேற்குலகம் லிபிய என்னை வளங்களை சூறையாடுகிறது அவை லிபிய மக்களின் சொத்து என முழங்கிய பொது அவன் லிபிய மக்களின் 'ச்சே குவேராவாக' போற்றப்படுகிறான்

முழங்கியதோடு நின்றுவிடாமல் மேற்கு சூறையாடும் என்னை வள வருமானங்களை லிபியாவிட்குள்ளேயே முடக்கி லிபிய மக்களுக்கான பல நல திட்டங்களையும் உருவாக்கி வெற்றி கண்டான் என்னை வள வருமானங்கள் மக்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு லிபியாவின் தனி நபர் வருமானத்தையும் உயர்த்திய போது அவன் ஒரு சிறந்த தலைவனாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டான் கடாபியின் அடுத்தடுத்த செயற்பாடுகளும் மக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டன இந்த அங்கீகாரமே கடாபிக்கு தான் செய்வதனைத்தும் சரி என்ற மமதையை கொடுத்திருக்கலாம்



அடிப்படையில் ஆழமான கல்வியறிவு கடாபிக்கு இருந்ததாக தெரியவில்லை அதுவே தனக்கான ஒரு அரசியல் சித்தாந்தத்தை கடாபி உருவாக்க காரணமாய் அமைந்தது இந்த அரசியல் சித்தாந்தமே பல சுவாரஸ்யங்களை கொண்டது 'கிரீன் புக'; என்ற பெயர் கொண்ட நூல் வடிவில் அந்த சித்தாந்தத்தை கீறினார் கடாபி பல்வேறு பழங்குடி இனக்குழுக்களை கொண்ட லிபியா என்னும் அகண்ட தேசத்தை ஆழ அந்த சித்தாந்தம் கிட்டத்தட்ட சரியானதுதான் ஜனநாயகத்தையே சர்வாதிகாரமாக சித்தரிக்கும் கடாபி மக்கள் குழுக்கள் மூலம் மக்களை கட்டுப்படுத்துவதும் மத்திய குழு மூலம் நாடு ஆளப்படுவதும் கடாபியின் பச்சை புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் ஆனால் இது நடைமுறைக்கு வந்ததன்

பின்னர்தான் கடாபியின் சுய ரூபம் மக்களுக்கு புலப்பட்டது மத்திய மக்கள் குழுவை மக்கள் காங்கிரசாக சித்தரித்த கடாபி முழு ஆட்சி அதிகாரத்தையும் தனக்கே உரித்தாக்கினார் லிபியாவின் பல்வேறு பட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் கொண்ட தலமைப்பதவிகளுக்கு தமது உறவுகள் பிள்ளைகளை நியமித்தார் லிபிய மக்களிடம் இருந்து கடாபி விலகி செல்ல ஆரம்பித்தது இந்த சமயத்தில் தான் மட்டுமல்லாமல் என்னை வளங்கள் மூலம் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் பில்லியன் கணக்கான சொத்துக்களையும் சேர்க்க ஆரம்பித்தார்

அமெரிக்காவை நேரடியாக பகைத்துக்கொண்ட தலைவர்களில் கடாபிக்கு தனி பங்கு உண்டு எண்பதுகளில் அமெரிக்க ஜனாதிபதிகளுள் ஒருவர் கடாபியை 'மத்தியகிழக்கின் பைத்தியகார நாய்' என்று அநாகரீகமாக திட்டியதிளிருந்தே தெரியும் கடாபி மீது அமரிக்காவின் விரோதம் கடாபியும் அமெரிக்காவுக்கு எதிராக சும்மா இருந்து விடவில்லை எந்த மூலையில் அமெரிக்காவுக்கு எதிராக எந்த குழு போராடினாலும் அங்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்தார் அவர் மட்டுமல்லாமல் கடாபியின் ஆதரவு குழுக்களும் அமெரிக்காவுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு உதவி செய்தன

கடாபி பொது நலனுக்காக போராடுவது போன்று தம்மை சித்தரித்தாலும் ஆழத்தில் அதில் கடாபியின் சுய நலம் மிகுந்திருக்கிறது ஆப்பிரிக்காவை ஒன்றிணைத்து அதன் மூலம் உலகை வெல்ல அவர் கனவு கண்டார் ஆரம்பத்தில் லிபியாவை மத்திய கிழக்கு நாடாக கூறிக்கொண்டிருந்த கடாபி பின்னாளில் அதை ஆப்பிரிக்க நாடாக கூறிக்கொண்டார் இதன் மூலம் ஐக்கிய ஆபிரிக்க என்ற கோட்பாட்டை உருவாக்கி அதிலும் தலைமையை தமக்கு எதிர்பார்த்திருந்தார் கடாபி


என்னதான் தான் ஒரு போராளியாக மக்களிடம் தம்மை சித்தரிக்க கடாபி முயன்றாலும் அடிப்படையில் அவர் தம் பதவி புகழ் உயிர் பாதுகாப்பில் எப்போதும் கவனமாய் இருந்திருக்கிறார் சதாம் {ஹசைன் பிடிபட்ட பின் தம் மேற்குலக நகர்வுகளில் சில தளர்ச்சியான போக்குகளை காட்ட ஆரம்பித்ததை சொல்லலாம் இது முழுக்க முழுக்க தமது பாதுகாப்புக்காகவே கடாபியினால் மேட்கொள்ளப்பட்டது பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் இவரின் உற்ற நண்பன் ஆனார் அமெரிக்கவுடனும் நல்லிணக்கத்தை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திகொண்டார் இவையனைத்தும் தம் உயிர் மற்றும் பதவி மீது அவர் வைத்திருந்த பயத்தினாலேயே மேட்கொள்ளப்பட்டது

சுற்றியிருப்பவர்களின் பார்வை எப்போதும் தம்பக்கமே இருக்க வேண்டும் என்பது காடாபிக்கு அவசியமான ஒன்று இதற்காக தம் சொந்த பிள்ளைகளை கூட புகழின் உச்சிக்கு செல்ல விட மாட்டார் அதே சமயம் தம்மை சுற்றி நம்பிக்கையானவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே கன்னிப்பெண்களை மெய்ப்பாதுகாப்பிட்காய் அமர்த்தியிருந்தார் ( அவர்கள் கடாபியினாலும் அவர் பிள்ளைகளாலும் பாலியல் ரீதியில் பயன் படுத்தப்பட்டார்கள் என்று தற்போது கூறப்படுகிறது ) தன் உடல் சுகாதாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பார் கடாபி இதற்க்கும் உக்ரெயினில் இருந்த பெண் தாதியர்களை கொண்டு வந்து அருகில் வைத்திருந்தார் இவரை சூழ எப்போதும் அழகான பெண்கள் கூட்டம் இருக்கும் அது இவருக்கு ரொம்ப பிடித்த ஒன்று ஆனால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு கடாபியை சபலபுத்திகாரர் என்று எடை போட முடியாது , பழைய கேசட்டுக்களில் அரேபிய பாடல்களை கேட்பது கடாபிக்கு ரொம்ப பிடிக்கும் தம் மீது நோய்கள் அண்டி விடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருப்பார் இதற்காக கடாபி அருகில் செல்பவர்கள் கூட பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டனர்

அடிப்படயில் பழங்குடி நாடோடி இனத்தவர் என்பதால் தம் அரண்மனைக்கு வெளியே எப்போதும் இவர் தங்குவதற்கான கூடாரம் அமைக்கபட்டிருக்கும் அதிலும் வெளியிடங்களுக்கு சென்றால் கூடாரத்தில் தங்குவதை கட்டாய வழக்காக கொண்டிருந்தார் கடாபி

எல்லா வகையிலும் ராஜ சுகங்களை அனுபவித்த கடாபி தன்னை சுற்றி தன் தேசத்துக்குள் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மட்டும் கடைசி காலத்தில் சரியாக மதிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மை நாற்பதாண்டு கால ராஜ வாழ்க்கை என்பதால் தாம் செய்யும் அனைத்திலும் அவர் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வாய்ப்பிருக்கின்றது தம்மை ஒருபோதும் அழித்து விட முடியாது என்று பலமாக நம்பினார் அவர் அந்த நம்பிக்கையே அவரை ஒரு துர் மரணத்திற்கு சொந்த காரனாக்கியுள்ளது

மேற்;கு உலகத்திற்க்கு கடாபியை வீழ்த்த ஒரு சரியான தருணம் மட்டுமே தேவைப்பட்டது டுனீசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி அலை எகிப்தை தாக்கியது இதை லிபியாவை தாக்க வைத்தது மேற்கின் சூழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அந்த புரட்சி அலையின் சத்தம் கேட்க்க ஆரம்பித்த உடனேயே லிபியாவில் தமக்கான செல்வாக்கை பற்றியும் மாறிவந்துள்ள உலக ஒழுங்கியலை பற்றியும் கடாபி மதிப்பீடு செய்திருந்தால் இந்த நிலை இன்று அவருக்கு வந்திருக்காது தன் மீது கொண்ட அதீத நம்பிக்கை அவரை துரத்தி துரத்தி கொலை செய்திருக்கிறது

கடாபியின் வாழ்க்கை நல்லது கெட்டது இரண்டும் கலந்தது என்றாலும் அவர் மரணித்த விதம் மனித நேயத்தை கேவலத்துக்குல்லாகும் விதத்தில் அமைந்திருந்ததை மறுக்க முடியாது அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தமக்குரிய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள புரட்சி படைக்கு கிடைத்த வாய்ப்பை புரட்சிப்படை இழந்து விட்டது மட்டுமல்லாமல் கடாபி இல்லாத லிபியா எப்படி அமையபோகிறது என்ற கேள்வி இங்கு முக்கியம் பல்வேறு இஸ்லாமிய இன குழுமங்களை கொண்ட லிபிய தேசம் அதிகாரத்துக்கான போட்டியில் இப்போது முண்டியடிப்பது தெரிகிறது சில கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் ஆனால் மாறி வரும் உலகியல் ஒழுங்குகளுக்கு தம்மை உட்படுத்தி தளர்த்தி செல்லாத எந்த தனி மனிதனோ அல்லது தலைவனோ கடைசியில் இப்படித்தான் தனிமை படுத்தப்படுவான் என்ற அழுத்தமான செய்தியை கடாபி உலகத்திக்கு சொல்லியிருக்கிறார் இனி பல சந்ததிகளுக்கு கடாபி ஒரு கொடுங்கோலனாக மட்டுமே சித்தரிக்கப்படுவார் என்பது மட்டும் கொஞ்சம் வேதனைதான் காரணம் கடாபி சரித்திரத்தையும் வெற்றியாளர்கள் தான் எழுதப்போகிறார்கள்

Wednesday, October 26, 2011

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்




அளவா சிரிக்கிற அஞ்சலி.
பட படக்குற அனன்யா.,
எங்க ஊரு பையன் ஜெய்.,
கடைசி நிமிடம் கலங்க வைக்கும் சர்வானந்.,
நெஞ்சை அவ்வப்போது கீரிப்போடும் சத்யாவின் இசை.,
பழனி மலை , விதி ஓட்டிச்செல்லும் பஸ்.,
பஸ்சுடன் பயணிக்கும் இசைஞானி பாடல்.,
காதல் சிட்டுக்கள்.,
தொடங்க முதல் முடியும் காதல்.,
உடைந்த பஸ் இன் வெற்றி கோப்பை.,
கடைசி நிமிட அமைதி மரண படுக்கையில் சொல்லப்படும் காதல்.,
மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்.,
திரும்ப வருமா என ஏங்க வைக்கும் நொடிகள்.,
அறுந்து அறுந்து போகும் உயிர்கள்.,
இப்போதும் காலை கண் விழித்ததும் வெறுமை படுத்தும் அந்த முடிவு.,
டைரக்டர் சரவணன் (இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்).,

Thursday, September 15, 2011

மங்காத்தா (லாஜிக் இல்லா மேஜிக் )

மாப்பிள்ளை மாதிரி மொக்க படத்தையே மனசாட்சியில்லாமல் விளம்பரப்படுத்தி ஓட்டு ஓட்டு என்று ஓட்டும் சன் பிச்சர்ஸ் காரர்களின் கையில் மங்காத்தா மாதிரி மாஸ் படம் கிடைத்தால் சும்மாவா சென்னையில் மட்டும் படம் வந்து ஒரே வாரத்தில் முப்பது கோடி வசூல் ......


எல்லோருக்கும் தெரியும் அஜித்தின் ஐம்பதாவது படம் இது ஏற்கனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தல என்ற செல்ல பெயர் தமிழ் நாடு முழுவதும் இயங்கி வந்த முப்பத்தெட்டாயிரம் ரசிகர் மன்றங்கள் / நற்பணி மன்றங்கள் அத்தனையும் அஜித் கலைத்து கைவிட்ட பிறகு இந்த படம் என்ன கதியாகுமோ என்று பலரும் உச்சு கொட்ட , நரை முடியுடன் கொடூர வில்லத்தனத்துடன் படத்தை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக்கியிருக்கிறார் தல .. காட்சிக்கு காட்சி பார்வையிலேயே பேசும் வித்தை அஜித்துக்கே உரியது மனுஷன் அநியாயத்துக்கு அழகு கை தட்டல்களை ஏகத்துக்கு வாங்கி குவிக்கிறார் அஜித் வரலாறில் ஐம்பது படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள திரைப்படம் இது அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் தல தொடரட்டும் தல பயணம்


பி. கு - ஒரு சின்ன குறை ஐம்பதாவது படத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்

Wednesday, September 7, 2011

யாழ் பயணம் ......

யாழ்பாணத்தில் என்னை பார்க்க ஒரு மாற்று திறநாளி வந்திருந்தார் அவரையும் அவர் குரலையும் நான் கவிராத்திரி நிகழ்ச்சியில் பல முறை கேட்டிருக்கிறேன் உணர்வுகள் பொங்கும் அவர் வரிகளை என்னை மறந்து அனுபவிப்பேன் அவர் என்னை நேரில் பார்க்க வந்தபோதுதான் அவர் ஒரு மாற்று திறநாளி என்பதே எனக்கு தெரியும் ! அவர் என்னிடம் எத்தனையோ வானொலிகளில் நான் கவிதை சொல்லியிருக்கிறேன் ஆனால் நீங்கள் தந்த அங்கீகாரம் எனக்கு யாருமே தந்ததில்லை ,உங்க வார்த்தைகள இரவுல கேட்கும்போது என் அத்தனை கவலைகளும் எங்க போகுதுனே தெரியல நீ நல்ல இருக்கனும்பா என்று என் கையை இருகப்பிடித்துக்கொண்டார் இவ்வளவு தூரம் வந்ததே உங்களிடம் இதை சொல்லத்தான் என்று சொல்லிவிட்டு கையில் கொண்டுவந்திருந்த சில இனிப்புகளையும் கொடுத்துவிட்டு தன் வழியே போக ஆரம்பித்தார் அவர் அப்பாவித்தனமான அன்பு தெரிந்த அந்த கண்ணில் என் இரண்டு வருட உழைப்பின் உண்மை பெறுமதியை நான் அப்போதுதான் உணர்ந்தேன்
நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் அவமானங்களும்
அப்படியே கரைந்து போனது , இதற்காகத்தானே அத்தனை உழைப்பு ? உண்மையில் எனக்கான உண்மை அளவீடும் இப்படியான உண்மை மனிதர்களிடம்தான் இருக்கிறது என்பதை சரியாக உணர்ந்த பொழுது அவர் என் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்... !

நிற்க ......

யாழ் பயணம் வெகு சிறப்பாக இருந்தது நீண்ட நாட்கள் பார்க்க ஆசைப்பட்ட மண் அது உணர்வுக்கொப்பளிப்புகளுக்கு அளவே கிடையாது சக்தி கலையகம் நல்லூரில் இருந்தாலும் நான் நல்லூரிலும் கலையகத்திலும் இருந்தது என்னவோ ரொம்ப குறைவான நேரம் தான் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு வெளியிலேயே செலவு செய்தேன் அத்தனையும் ரசித்தேன் என்பதை விட ருசித்தேன் என்றால் தவறில்லை ( இனியொரு முறை யாழ் பயணம் சாத்தியப்படாது என்ற உணர்வு மேலோங்கி இருந்ததால் இந்த பயணத்தை அங்குலம் அங்குலமாக அனுபவித்தேன் ) எல்லாம் தவிர்த்து யாழ் பயணம் சிந்தனை ரீதியான பல மாற்றங்களை எனக்குள் ஏட்படுத்தியிருக்கிறது பழகும் பலரின் நிஜ முகங்களை
கூட என்னால் யாழ் பயணத்தில்தான் தெரிந்து கொள்ள முடிந்தது பல ஊர்களுக்கு சென்று வீடு வீடாக நாம் நம் துறை அது தொடர்பாக மக்கள் சம காலத்தில் என்ன பார்வையை செலுத்துகிறார்கள் என்று பலதும் தெரிந்து கொள்ளக்கூடியாதாக இருந்தது (மக்கள் ரசனையில் எத்தனை மாற்றங்கள் வந்துவிட்டது ?)


வவுனியா கிளிநொச்சியை தாண்டும் போது உணர்வில் ஏற்பட்ட விசித்திரங்கள் எனக்கு புதுமையானவை , இதற்கு முன் எங்கும் எப்போதும் அறிந்திராத உணர்வு அது கிளிநொச்சியில் சில நேரம் என்னை அறியாமலே கண்கள் காரணம் இல்லாமல் ? கலங்கியது அந்த மண்ணை கூட பத்திராமாக கொண்டு வந்து என் வீட்டில் வைத்திருக்கிறேன் யாழ்பாணத்தில் எங்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு இது வரை அல்லது இனிமேல் வேறு ஒரு வானொலிக்கு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது .. அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றிகள் தனிப்பட்ட என் வானொலி நிகழ்சிகளுக்கு விமர்சனங்களை சொன்ன , எனக்காக பரிசுகளை தந்த அனைவருக்கும் நன்றி
Copyright © 2014 நட்சத்திரவீதியில்