Monday, January 21, 2013

."பவரு பவருதான் இது சூப்பர் பவருதான் "

பவரு ஜெயிசிட்டாறு அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பவர காமடி பண்ணவே அணுகின எல்லாரும் தப்பிச்சுட்டாங்க காலர  தூக்கி விட்டுக்கலாம். ( அந்த பட்டியலில்  இந்தியாவின் எல்லா தமிழ்  தொலைக்காட்சிகளும் + மிர்ச்சி , ஹலோ fm  மாதிரி வானொலிகளும் அடங்கும் )  ஆனால் பாவம் ஒரே ஒரு மனுஷன் மேல மட்டும் அநியாயத்துக்கு பலர் பாயிறாங்க "நீயா நானா" ல அந்த "போலி கெளரவம்" எப்பிசோடு நானும் பார்த்திருக்கின்றேன். உண்மைல கேள்வி கேட்ட கோபி மேலயும்., நடுவராக வந்திருந்த "எழுத்தாளர் செல்வப்புவியரசு" மீதும் விமர்சனங்கள் எழுந்ததுக்கு அந்த ரெண்டு பேரும்  எப்டியும் காரணமாக அமையவே இல்லை. அங்கு ரெண்டு பேரையும் பெருமளவு விமர்சனங்களுக்குள்ள தள்ளினது "பவரின் வெகுளித்தனம்தான்றதும்" இங்கு உண்மை சம காலத்துக்கு தேவையான மிகப்பெரிய தத்துவத்த பவரு கத்து வச்சுருக்காரு "எது நடந்தாலும் வாய மூடி சும்மா இருடா ... பாட்டு வரிகள் பவர் ஸ்டாருக்கு ரொம்ப பொருத்தம் "

இதுல நான் தனிப்பட்ட ரீதியா முகம் சுழிச்சது ஒரே ஒரு இடத்துல, "கோபிநாத்" கேள்வி கேட்டு பவரை பற்றி எழுத்தாளர் செல்வப்புவியரசிடம் கேட்டபோது அதற்கு செல்வப்புவியரசு அவர்கள் ஒரு "தூசணத்தை"  உபயோகித்து ஆரம்பிப்பார் அது "மயிரு" என்ற டீசண்டான தூசணத்தில் ஆரம்பிச்சு எதுவாவும் இருக்கலாம் விஜய் tv  அத பீப் போட்டு மறைச்சுட்டாங்க .   அந்த இடம் எனக்கு ரொம்பவே நெருடிடுச்சு "போலியான கவுரவத்த  உருவாக்குரானு எல்லாருமே கிண்டல் பண்ற ஒருத்தன் அத கேட்டுட்டு அமைதியா சிரிச்ச முகத்தோட இருக்குறத பார்த்ததும் "எனக்கும் பவர் மீது ஈர்ப்பு வந்துடுச்சு ...

இன்னுமொரு முக்கியமான மேட்டர் பவர் உபயோகிச்சு பார்க்குற நூதனமான விளம்பர உத்தி , தன்னை எல்லாருமே கிண்டல் பண்றாங்கன்னு நன்றாக  தெரியும்  அதே நேரம் தன்ன கிண்டல் பண்றத  பலர் ரசிக்கிறாங்க என்றதும் பவர் நல்லா புரிஞ்சு வச்சுருக்காரு  அதை வச்சே ஒரு சக்சஸ கொடுத்து பவரு நம்பிக்கைக்கு உதாரணமா மாறி சகிப்புக்கு  முன்னுதாரனமாவே ஆகிட்டாருப்பா , ......

Friday, January 18, 2013

"சிவப்பு தேநீர்"

{1925காலப்பகுதியில் தென்னிந்தியாவின் தேயிலை தோட்டமொன்றில் ஒரு உரையாடல் }


" இப்போ பரவயில்ல டாக்டர் 10 வருசத்துக்கு முன்னால நெனச்சே பார்க்க முடியாதளவுக்கு நிலைமை படு மோசமா இருந்தது மொத்த ஜனங்கள்ல பாதிபேரு ஒவ்வொரு வருசமும் மலேரியா வந்து செத்துப்போவாக .அதவிட கொறச்சல் பேரு நிமோனியா வந்து வயிற்ரோட்டம் வந்து செத்து போவாக .அப்போ எல்லாம் கூலிக   ஓடாம இருக்க எல்லா இடத்துலயும் காவக்காரங்கள நிறுத்தி வைப்போம். வேல செய்யும்போது கூட ஓடாம இருக்க கூலிகள கண்கானிச்சிட்டே  இருப்போம். பெரும்பாலான மேஸ்திரிக ராவுல கூலிகள அடச்சு வச்சுருவாக சில நேரம் சங்கிலில கட்டி வச்சுருவாக இத்தன  ஜாக்கிரதையா  இருந்தாலும் கூலிக  ஓடிப்போயிடுவாக, போறவங்க பாதி வழிலேயே செத்துறுவானுங்க, சில பேர  திருப்பி புடிச்சுட்டு வந்து மத்த கூலிகளுக்கு முன்னால பீதி ஏட்படுரா மாதிரி அடிச்சே கொன்னுடுவானுங்க

,ஒ... எஸ்டேட்ல எவ்வளவு  பயங்கரமான விசயங்கள எல்லாம் பார்த்திருக்கேன் தெரியுமா டாக்டர் கூலிகளா வந்தவங்கள்ள 90 வீதம் பேரு ஏமாத்தி  எஸ்டேட்டுக்கு  கொண்டுவரப்பட்டவங்கதான்.  அவுகளுக்கும் கூலிகளுக்கும் சம்பந்தமே இல்லாத நால  மிருகங்கள  மாதிரிதான் நடத்துவானுங்க. ஆடு மாடுகள கூட இதவிட நல்லபடியா  நடத்துவானுங்கனு சொன்னா கூட தப்பே இல்ல. திருநெல்வேலி கூலிகள சேத்த பின்னலாதான் நிலைமை கொஞ்சம் நல்லாயிட்டு வருது , 

வெள்ளைக்கார தொரைகலும் ரௌடிக மாரிதான் , புடிச்சு  கூலி பொண்ணுங்கள  படுக்க கூப்டுவாக சம்மதிக்கலனா அடிச்சே கொன்னுடுவாக , வேற வழி  இல்லாம இணங்கி போற பொண்ணுங்க கர்ப்பமாகிட்டா   ரொம்ப கொடூரம் கருவ கலைக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க சில நேரம்    வயித்துக்குள கைய விட்டு கருவ இழுத்துருவாக இல்லனா கரு கலைரா வரைக்கும் வயித்துல ஏறி மிதிக்கவும் செய்வாக , வருசா வருஷம் எஸ்டேட்ல இருக்குற ஜனங்கள்ல பாதி பேருக்கு மேல உயிரை விடலனா அது அதிஷ்டம்தான் ..... ("RED  TEA  தொகுப்பிலிருந்து) 



"இப்படி பலரின் உயிர் கொடையினால்  உருவாக்கப்பட்டதுதான் உலகம் அழகு அழகு என்று கொண்டாடும் இந்த சொர்க்க பூமி 

"இன்று டீ எஸ்டேட்களை பற்றி உங்களிடம் இருந்து நிறைய தெரிந்துகொண்டேன்" என்று என்று கூறிய டாக்டர் ஏப்ரகாம் யோசனையுடன் தனக்குத்தானே கூறிக்கொள்வதுபோல தொடர்ந்தார் இன்று இந்த எஸ்டேட்களில் உற்பத்தி செய்யப்படும் தேநீரை "சிவப்பு தேநீர்" என்று சொன்னால் அது   மிகைப்படுத்தல் ஆகாது என்று நினைக்கிறேன்  கடந்த காலங்களில் தங்களை தாங்களே பலி கொடுத்துக்கொண்ட ஆயிரம் ஆயிரம் ஆண் பெண்களின் இரத்தத்தாலும் கண்ணீராலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்த   தேநீர். இந்த 
முகம் தெரியாத தேயிலை தொழிளாலர்கள் மற்றும் எழுத்துப்பணியாளர்கள் தென்னிந்தியாவில், சிலோனில் தேயிலை தொழிலை நிர்மாணிக்க செய்த தியாகங்கள் அரசாங்கத்தினாலும் நமது நாட்டு மக்களாலும் என்றாவது ஒருநாள் புரிந்துகொள்ளப்படும். அங்கீகரிக்கப்படும். என்று நாம் நம்புவோம்.  ("RED  TEA  தொகுப்பிலிருந்து) 
1925 இல் சொல்லப்பட்ட அந்த வார்த்தையை அச்சு பிசகாமல் அப்படியே 2013 இலும் சொல்லவேண்டி உள்ளது இன்னும் நூறு வருடம் போனாலும் அரசாங்கமோ நாட்டு மக்களோ அந்த  மாபெரும் தியாகங்களை நினைக்கப்போவதில்லை ........காரணம் அவை யாருக்கும் தேவை இல்லை 

Thursday, January 17, 2013

"இரவு தேசம் " 2


இரவை இருளை அனுபவிப்பது என்பது ஒரு அழகான, ஆழமான பயணம்.   அந்த பயணம் நமக்குள் மாற்றங்களை கொண்டுவரக்கூடியது, நம்மை நாம் அனுபவிக்கும் பயணமது.
எந்த நிலையில் இருந்தாலும் எதை அடைந்திருந்தாலும் அடிப்படை என்ன என்பதை சொல்லும் பயணமது , நமக்குள் நாம் உரையாடிக்கொள்ளும் பயணம். இன்னும் தயார்படுத்தலின் விதைகள் இருளுக்குள் விழும் போது  விருட்சம் பெரு  விருட்சம்!!! ,

கண் திறந்திருக்கும் போது நம்முடையது என்று நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட அடையாளங்களை பற்றி இருளுக்கு எந்த அக்கறையும் இல்லை, அங்கு எல்லாமே எங்களுடையது  எதுவுமே எங்களுடையது அல்ல , சாத்தப்படும் போது அதாவது மூடப்படும்போது எல்லை வந்துவிடும் இதுதான் யதார்த்தம், கதவு யன்னல், கேட் என்று எது மூடப்பட்டாலும் அது ஒரு எல்லையை உருவாக்கும் ஆனால் இமைகள் மூடப்படும்போது மட்டும் இமை என்னும் கதவை ஊடறத்து பயணப்பட முடிவது ஆச்சர்யம்!!! அங்கு எல்லைகளே  கிடையாது  இமைகளை தாண்டி "எல்லை இல்லாத ஒரு எல்லைக்கு நம்மை அழைத்து செல்லும்",

பல இமை மூடிய இருள்கள் நீதிமன்றத்தை போல நடந்துகொள்ளும் அங்கு நாம் உண்மை  மட்டுமே பேசுபவர்களாக மாறி விடுகிறோம் பொய் அங்கு இரண்டாம் பட்சமாய் உதவிக்கு மட்டுமே வரும். அல்லது ஆறுதலுக்காக வரும். அந்த நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு நியாயத்தை மட்டுமே தொடும்.,    சில நேரங்களில் பிரபஞ்ச ரகசியமே அந்த இருள்தானோ என்று நான்  இருளுடன் முட்டி மோதி தோற்றதுண்டு  ( சிறு பிள்ளைத்தனம் ) !ஆனால் .... உண்மை இருளுக்குள்  ஆத்மார்த்தமாய்  மூழ்கும் போது நம்மிடம் இருந்தும்,நாம் என்று அடையாளப்பட்டிருக்கும்   நம் தேவை உள்ள பலரிடம் இருந்தும்,  நமக்கு அவசியமானவர்களிடம் இருந்தும் நம்மை அறியாமலே விலகிச்செல்லும் சந்தோசமான அபாயமும் உண்டு.   இவை எல்லாம்  அலாதியான அனுபவங்கள் , அனுபவிக்க வேண்டிய   நிஜங்கள் கண்டுகொள்ளப்படாமல் வீணடிக்கப்படுகின்றது 

  

அவதூறு!.....( 1 )

நீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் தவிர்த்து வந்தேன், இரண்டு காரணம் சம்பந்தப்பட போகும் இருவருமே பெரிய புள்ளிகள் அவரவர் துறையில் பெயர் பதித்தவர்கள் , அடுத்தது வலையுலகில் இவர்கள் இருவருக்குமே இருக்கும் சார்பான ,எதிர்ப்பான   கூட்டம்(வாயை கொடுத்து எதுக்கு  புண்ணாக்கிக்கனும்னு ) ,அடுத்தது வலையுலகில் இந்த விவகாரம் அருகப்பழசானது . இருந்தாலும் பல பதிவர்கள் தைரியமாக இவர்களை பற்றி பதிவிட்டிருக்கவே என்னுடைய கருத்தையும் எழுதித்தான் பார்ப்போமே என்று எழுத வந்துவிட்டேன். 

சாறு நிவேதிதா - இவரை எனக்கு அறிமுகம் செய்தவர் அண்ணன் "ராஜ்மோகன்" , சாதாரணமாக இருந்த புத்தக நடையில் இருந்தும், எழுத்துக்களை கோர்த்து கதை சொல்லும் பாங்கில் இருந்தும்  இவர் முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்டவராக தெரிந்தார், உண்மையை சொல்ல வேண்டுமானால் அவரின் புத்தகங்களை படித்து தலையை பிய்த்துகொன்டு தூக்கமில்லாமல் கிடந்திருக்கிறேன் , பிறகு மீள மீள வாசிக்க வாசிக்கத்தான் ஓரளவுக்கு புரிந்தது அதையும் தாண்டி  அவர்  எழுத்துக்களில் சொல்ல வரும் விடயங்கள் பல்வேறு விதமான படிமங்களை உருவாக்குவதையும், ஒரே வார்த்தைக்குள்  பல முடிவுகளை நாமே சிந்திக்க வேண்டிய விசித்திரத்தையும் உணர்ந்தேன் .
தமிழில் வெளியான முதலாவது பின்நவீனத்துவ நூல் என்னும் அடையாளத்தோடு வந்த Existentialism-mum Fancy Banian-    um படிக்க நான் பட்ட பாடு................. பின்புதான் சில விடயங்கள் புரிந்தது சாதாரண வாசிப்பு 
முறையும் உள்வாங்கும் திறனையும் தாண்டி சாருவின் எழுத்துக்களுக்கு வேறு ஒரு முறை தேவைப்படுகின்றது , அதற்கு பல முறை மீள் வாசிப்பு தேவை அதை உள்வாங்கி மனதுக்குள் பலமுறை அசைபோடும் பக்குவமும்.வேண்டுமென்று  ,  ராசா லீலாவும் அப்படித்தான், ஜீரோ டிக்ரி புரியவே இல்லை  ஜீரோ டிக்ரீயை 
California State University இல் தனி பாடமாகவே கற்பிக்கப்படுவதை அறிந்தபோதுதான் அது ஏன் எனக்கு புரியவில்லை என்பது புரிந்தது   , excile  இன்னமும் படிக்க கிடைக்கவில்லை


 சாறு மீதான தூண்டுதல்தான் அவரை பற்றி நிறைய தேட வைத்தது.  அப்படி கொழும்பு தமிழ் சங்கத்தில் கண்ணில் தட்டுப்பட்ட ஒரு புத்தகமும், அதனை தொடர்ந்து அவர் தொடர்ச்சியாக அவரின் வலைதளத்தில் எழுதியிருக்கும் விடயங்களும் சாருவின் எழுத்துக்கள் சிலரை மோசமான வித்தத்தில் மட்டமாக  நடத்துகின்றன என்பது அப்பட்டமாக தெரிந்தது நாம் மிகவும் நேசிக்கும் மனிதர்களை பற்றி மோசமாக விமர்சிக்கப்பட்டாலோ சொல்லப்பட்டாலோ அதிர்ச்சி அடைவதும் அல்லது எதிர்ப்பதும் தான் இயல்பு, ஆனால் இவர் ஏன் இவரை இவ்வளவு மட்டமாக விமர்சிக்க வேண்டும் இதன் உள்  நோக்கம் என்னவாக இருக்கும் ? விமர்சனம் என்பது பட்டை தீட்டுவதாகவும் தவறுகளை சரி செய்துகொள்வதட்காகவும்  இருக்க வேண்டுமே ஒழிய இப்படிநார் நாராய் கிழிப்பதாக அமைய என்ன காரணம் ? இப்படி பல கேள்விகள் மனதுக்குள் எழவே இன்னும் இன்னும் புரட்ட சில விடயங்களில் சாறு எவ்வளவு சுயநலமாக அடிமட்ட மனநிலையில்  அரசியல் விளையாடுகிறார் என்பது புரிந்தது ...

Friday, January 11, 2013

25 வயது ( சுய தம்பட்டம் )

அத்தனை அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், என்று நான் சொன்னால் அந்த வாழ்த்துக்களுக்கு நான் கொடுத்த உச்ச மரியாதை அதுவாக இருக்காது என்று நினைக்கின்றேன். இருந்தாலும் தமிழில் அந்த வார்த்தை மட்டும்தான்  என்பதால் அதை அடி மனதில் இருந்து உண்மையாக சொல்கின்றேன் "எல்லா வாழ்துக்க்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்" நான் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அகந்தையை குறிக்கும் என்று நான் கருதவில்லை "நாதியற்றவன்" என்பதன் சுருக்கம் தான் நான் என்பது என் கருத்து .   
25 வயது என்பதை நினைக்கும் போதுதான் எனக்குள் வாழ்கையின் மூன்றில் ஒரு பங்கிலும் அதிகமான காலம்  வாழ்ந்துவிட்டேன் என்பதை சந்தோசமாக உணர முடிகின்றது. வயது அதிகமாக அதிகமாக பொறுப்பை விட திருப்தி  அதிகமாகின்றது என்பது சந்தோசமான விசயமா ?? வாழ்வின்  அடிமட்ட  நிலையில் இருந்து எனக்கான பாதையை தேட ஆரம்பித்து இன்னமும் தாகத்தோடு போராட ஆசைப்படும் ஒருவன் என்ற மமதை இல்லாத நம்பிக்கையும் உண்டு. இதுவரையில் தோல்விகள்தான் அதிகம் என்றாலும் மனம் எப்போதும் தளரேன் காரணம் "நான் தமிழன் பச்சை தமிழன்."

பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை கிடையாது என்பது எனது நண்பர்களுக்கு தெரியும். நேற்றுவரை எதை சாதித்தோம் என்று கொண்டாடுவது என்ற கேள்வி தான் அந்த உணர்வுக்கு காரணமாய் இருந்தது. இருந்தும் சில மனிதர்களுடன் வாழ்வதே எவ்வளவு கடினமான  காரியம் என்பதை நினைக்கும் போது அதுவும் ஒரு சாதனை தான் என்பது என் அகந்தயில்லாத நம்பிக்கை. எனக்கே தெரியாமல் எனக்கு   போடப்பட்ட முகமூடிகள் அதிகம் இன்னும் தெளிவாக சொல்வதானால் எனக்கு நல்ல பெயர் என்பது ரொம்ப குறைவு. எனக்கே தெரியாமல் அவை உருவாக்கப்படுகின்றன.  இந்த வருடம் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய மனப்போராட்டம் இதுதான் "நான்" என்பது பற்றி எனக்கே தெரியாதபோது எப்படி நம்மை சூழ இருப்பவர்கள் நம்மை எடை போடுகின்றார்கள் ???? இது கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று அல்லவா? ஆனால் அந்த மன போராட்டத்தில் இருந்து நான் மிக பத்திரமாக வெளிவந்துவிட்டேன், இது இந்த வருடத்தில் நான் அடைந்த மிகப்பெரிய வெற்றி .. 

யாருக்காகவும் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சித்தால் பார்க்கும் ஒவ்வொருவருக்காகவும் நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற உண்மை நிஜமாய் உரைப்பதால் "நான் எனப்படும் நாதியற்றவன் நானாகவே இருந்துவிட்டு செல்கின்றேன்" .....

Thursday, January 10, 2013

விஸ்வரூபம்



ஒரே மாதிரி சென்றுகொண்டிருக்கும் கூட்டத்தை, எப்போதோ நடக்கப்போகும் உண்மையை அறிந்து திசை மாற்ற முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக எதிர்ப்பு வரும். கமலுக்கு நடந்ததும் அதுதான் இன்னும் பத்து வருடங்களில் நடக்கப்போவதை ( தனது  துறையில் ) இப்போதே உணர்ந்து புது முயற்சிகளை எடுப்பவர்களில் கமலுக்கு தனி இடம் உண்டு. அவரின் பல முயற்சிகள் தோல்வி அடைவதும் அதனால்தான்  ஒரு  உதாரணத்திற்கு   குணா படம் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம் அப்போதைய சூழழுக்கு அது ஒரு அறுவை படம். ஆனால் அதையே தழுவி 10 வருடம் கழித்து வந்த காதல் கொண்டேன் வெற்றி அடைந்ததே? அப்படியான ஒரு முயற்சிதான் கமலின்  DTH  முயற்சி இங்கு நான் கமல் கலைத்துறைக்கு சேவை செய்யும் பரிபூரண எண்ணத்தில் இதை செய்கிறார் என்று சொல்ல வரவில்லை, வியாபாரம்தான் ஆனாலும் காலமாற்றத்திற்கு ஏற்ற விதத்தில் துறையில் மாற்றம் கொண்டு வருபவர்களும் அதை உள்வாங்க முயல்பவர்களாலும் மட்டும்தான் காலம் கடந்து நிலைக்க முடியும் குறைந்தது காலத்துடன் ஓட முடியும்.  கமலின் தீர்க்க தரிசனம் இப்போதைக்கு பொருந்தாது என்பதும் உண்மைதான் ஆனால் DTH  இல் வெளியிடப்பட்டிருந்தால்   அது திரைத்துறையில் ஒரு பெரிய மயில் கல்லாக இருந்திருக்கும் !...

மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம்

நம் கண்முன்னே அந்த கொடூரம் நடந்திருக்கின்றது. நேற்று இரவுதான் அந்த செய்தி காதுகளுக்கு எட்டியது கொஞ்ச நேர அமைதி, இயங்க முடியாத மௌனம் என்று தன்னிலை மறந்ததும்.... சில நிமிடங்களில்  ஒரு விரக்தி நீண்ட பெருமூச்சு  ( இவை வர்ணிப்பாக யாரும் கருதக்கூடாது ) மரண தண்டனைக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் கொள்கை கொண்டவர்கள் மட்டும் பதிவை தொடருங்கள் , பதினைந்து செங்கல் கற்கள் இரண்டு தகரம் கை நீட்ட இடமில்லாத ஒரு வீட்டை அதில் குருவிகள் போல வாழும் ஒரு குடுமபத்தின் எதிர்காலத்துக்காக தன்னை அர்பணிக்க சென்ற அந்த தாய்க்கு எவ்வளவு ஆசைகள் இருந்திருக்கும்?  தனக்காக யார் யாரோ முயற்சி செய்கிறார்கள் என்ற செய்தி சிறைக்குள் அவள் காதுகளுக்குள் எட்டியிருந்தால் இறுதி நிமிடம் வரை வாழும் நம்பிக்கை எவ்வளவு இருந்திருக்கும் , உலகின் உச்சகட்ட கொடுமை நூறு வீத வாழும் நம்பிக்கை இருக்கும் போது தனக்கே தெரியாமல்  இறப்பதுதான். 

ரிசானாவுக்கு நடந்ததும் அதுதான் " நேற்று முன்தினம் ரிசானாவை  கவனிக்கும் வைத்தியர் உலக ஊடகங்களுக்கும் , இலங்கை ஊடகளுக்கும்  அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார்  ரிசானா   சிறைக்குள் எதுவும் அறியாதவளாக இருக்கின்றார், மரண தண்டனை உறுதியானது அவருக்கு தெரியாது,  தான் குடும்பத்துடன் மீண்டும் சந்தோசமாக வாழப்போவதாக   முழுமையாக நம்புகிறார் என்று " தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் . அப்படியானால் ஒரு உச்சகட்ட கொடுமை ஒன்று அந்த தாய்க்கு நடத்தப்பட்டுள்ளது, 

இன்னுமொருபுறம் ரிசானாவின் கையில் இருக்கும் போது  இறந்த அந்த குழந்தை மூச்சு திணறல் காரணமாகவே இறந்தார் என்றும் அது கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் gulf  news உள்ளிட்ட பல ஊடகங்கள் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியே இருந்தாலும் வெறும் 17 வயது சிறுமி ஒரு  குற்றம் புரிந்தால் அவரை சீர்திருத்த முயலக்கூடாதா ? மரண தண்டனைதான் தீர்வா??? இன்று எல்லா ஊடகங்களிலும்  ரிசானாவின் குடும்ப புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது அந்த படங்களை பார்க்கும் துணிவு இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன் ரிசானா  மரணித்து ஒரு செய்தியை தெளிவாக சொல்லி இருக்கின்றார். சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை இன்னும் பல ரிசானாக்கள் வாழ்வை தேடி சென்று வாழ்கையை தொலைக்கும் அவலம் கண்டிப்பாய் தொடரும், மரண தண்டனை "தண்டனை" அல்ல அது இன்னுமொரு குற்றம் ...

Wednesday, December 26, 2012

"வதன நூல் வதை நூல் ஆன கதை "

என் முகப்புத்த்கம் அடிக்கடி heck செய்யப்படுகின்றது பலருக்கு தவறான தகவல்கள் அனுப்பப்படுகின்றது, எனக்கே தெரியாமல் பலருக்கு request அனுப்பி un friend செய்யப்படுகின்றது , எல்லாமே சரி அதுக்காக என் சித்தப்பா பொண்ணு , பெரியப்பா பொன்னுக்கெல்லாமா  தப்பான தகவல் அனுப்புறது ? தகவல் அனுப்பப்பட்டுள்ள இரண்டாயிரம் பேரிடமும் மீள் தகவல் அனுப்பி நான் இல்லை என்று வாதிட பிடிக்கவில்லை , ஒரு பொறுப்புள்ள தொழிலில் இருப்பவன் என்ற வகையில் இப்போதைக்கு முகப்புத்தகத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் ..

Tuesday, December 18, 2012

"இரவு தேசம் " 1

       நெடுநாள் பழகியது  போன்ற உணர்வை ஏற்படுத்தும் முகங்கள், நன்கு தெரிந்த பழக்கப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடங்கள். என பல விடயங்கள் சில நிமிடங்கள்  அல்லது நொடிகளுக்குள் ஏற்படுபவைதான். எப்போதோ எங்கேயோ மனதுக்குள் ஒரு ஓரமாய் ஒழிந்து
 கிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் அந்த சமாச்சாரங்களை கிண்டிக்கிளறி எடுக்கும் மேற்படி விடயங்களுக்கு நன்றி சொல்லி மரியாதை செய்வது அதிகம் பொருந்தும். நிதானிக்க நேரமின்றி 
  ஒடுபவார்களுக்கு ஏறி வந்த ஏணியை நினைவுபடுத்தும் வல்லமை உள்ளவை இம்மாதிரியான நினைவுபடுத்தும் விடயங்கள்

நேற்று இரவு நாடு முழுவதும் கன மழை. கொழும்பில அல்லது நகர்ப்புறங்களில் இயற்கை கொடுக்கும் சந்தோசங்களை ஈடுபாட்டுடன் அனுபவிக்க ஒரு மகான் நிலை கண்டிப்பாய் வேண்டும். அவ்வளவு கஷ்டமானது. வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தும்மல் வராமல் போவது போன்ற  அசவ்கரியத்தை கொடுக்கும் சம்பவங்கள் நிறைய நடப்பது இங்குதான் ,  பல பொழுதுகள் கடற்கரை, காற்றையும் அலை சொல்லும் சேதிகளையும் கேட்டு ரசிக்க செல்லும் மன நிலையை  கூட அலை அலையாய் வரும் காதல் ஜோடிகள் மாற்றி விடுகின்றன என்பது  உதாரணம். இது வயது கோளாறு?

இருளை அனுபவிப்பது ஒரு அலாதியான இன்பம். அதிலும் அது செயற்கை தன்மை அல்லாத இருளாக இருப்பது இன்பத்தை கூட்டும், கலப்படம் இல்லாத இருள் என்பது முக்கியம் ,  இங்கும் நகர்புற இருளை குறை சொல்ல வேண்டிவருகின்றது, உண்மை இருள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு மோன நிலை...  அது கனவில்லாத தெளிந்த உறக்கம் போன்றது , நினைவில்லாத நிம்மதி போன்றது , இயற்கைக்கே உரிய அழகான ஓசைகளை தவிர்த்து அனைத்தும் வாய் மூடி மௌனித்திருக்கும் நிலை, பிறந்து 6 , 7 மாதம் ஆன  குழந்தை  விடிவதற்குள் எழுந்து தனக்குத்தானே சிரித்துக்கொள்லுமே  அப்படியான ஒளியும் இயற்கையின் அழகான சத்தங்களில் ஒன்றுதான்.   அவை ஒன்று கலந்த இருளை அனுபவிப்பதும் அள்ளி அள்ளி பருகுவதும் அளவில்லாத ஆனந்தத்தை தரவல்லது,இப்படியான இருள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் கிடைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று !...

Thursday, December 13, 2012

"சூப்பர் ஸ்டாரை பாதுகாத்த தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகனை முழுமையாக பாதுகாக்கவில்லை "



ரஜினி சாரை பார்க்கும் போதெல்லாம் வியப்பும், ஒரு சின்ன   கவலையும்  குடிகொள்ளும் வியப்பு என்பது ஒரு தனி மனிதன் அடைந்திருக்கும் இந்த எட்ட முடியாத எல்லையை நினைத்து, அந்த உயர்வை நினைத்து, உழைப்பை நினைத்து .  கவலைகொள்வது சினிமாவில் ரஜினி என்ற ஆளுமை பின்னாளில் சிக்கிப்போன குறுகிய வட்டம்தான். மிக சிறிய வட்டம் அது, ஆனால் அந்த குறுகிய வட்டத்தை உலகம் முழுவதும் திரும்பி பார்த்து வியக்கும் புள்ளியாக மாற்றியமைத்த ரஜினி சார் மீது மறுபடியும் வியப்பு ....


அண்ணாமலை வெற்றிக்கு பிறகு வந்த படங்களை பார்த்தால் அந்த வட்டம் என்ன என்பது நன்றாக தெரியும் வெளிப்படையாக் புரியும் ( எந்திரன்  , பாபா வை தவிர ). என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிகை நடிப்பு தெரியாத மிக சரியான நடிகர் ரஜினி சார்தான் சிவாஜி கணேசன் அவர்களின் பழைய படங்கள்; பார்த்தவர்களுக்கு புரியும் ஒரு பாடல் என்றால்கூட வாய் கிட்டத்தட்ட 190 பாகைகளை தாண்டும், நெஞ்சு  நரம்பெல்லாம் புடைத்து வெடிக்கும் இது அக்மார்க் நாடகத்தனம்  , கமல் சார் ஒரு புது வடிவத்தை கதாபாத்திரத்ற்கு கொடுப்பார். ஆனால் மிக சரியாக பாத்திரம் என்னவோ அதை அப்படியே உள்வாங்கி கொடுக்கும் ஒரு தனித்துவ நடிகர் என்றால் ரஜினி சார்தான். முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களுக்கு அது புரியும் இன்னொரு பக்கம் ராகவேந்தரா படத்தில் ரஜினி சாரின் முக அமைதி ஒரு ஞானியால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று , ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பரிணாமத்தை காட்டுவார் , மறக்க முடியாதது அவர் பண்ணிய தில்லுமுல்லு , தளபதி படத்தில் மௌனத்தில் ஒரு உணர்ச்சி பிரளயத்தையே முகத்தில் காட்டுவார் .



" உண்மை நடிப்பு என்பது நடிக்காமல் இருப்பது"என்ற வாசகத்தை  தாரக மந்திரமாக கொண்டு படம் எடுத்தவர் இயக்குனர் மகேந்திரன் அதை அப்படியே பின்பற்றுபவர் என்பதால்தானோ என்னவோ மகேந்திரனுக்கு மிக பிடித்த நடிகர் ரஜினி.  (இன்றளவும் தமிழின் முக்கிய இயக்குனர்களில் மகேந்திரன்  முதன்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என்று நம்புகின்றேன்  ) .அப்பேற்பட்ட நடிகனை வணிக சினிமா ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துவிட்டது என்பது கவலையைத்தான்  தருகிறது,  எது எப்படியோ விறு விறு வேகம். மந்திர புன்னகை, சின்ன சிரிப்பில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் லாவகம், எவனாலும் செய்ய முடியாத stayle  என்று ரஜினி சாருக்கு தமிழ் சினிமா வகுத்துக்கொடுத்த சின்ன வட்டத்தை கொண்டு உலகம் முழுவதும் உயர்ந்து நிற்க அவருக்கு துணை வந்த அவரின் உழைப்பு இருக்கின்றதே அது அவ்வளவு இலகுவானது   இல்லை " 63 வயதில் நம் எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டார் பத்திரமாக மிகப்பெரிய எவராளும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் ,ஆனால் ஒரு நல்ல  யதார்த்த நடிகனை நாம் எப்போதோ  தொலைத்துவிட்டோம் "....
Copyright © 2014 நட்சத்திரவீதியில்