."பவரு பவருதான் இது சூப்பர் பவருதான் "
பவரு ஜெயிசிட்டாறு அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பவர காமடி பண்ணவே அணுகின எல்லாரும் தப்பிச்சுட்டாங்க காலர தூக்கி விட்டுக்கலாம். ( அந்த பட்டியலில் இந்தியாவின் எல்லா தமிழ் தொலைக்காட்சிகளும் + மிர்ச்சி , ஹலோ fm மாதிரி வானொலிகளும் அடங்கும் ) ஆனால் பாவம் ஒரே ஒரு மனுஷன் மேல மட்டும் அநியாயத்துக்கு பலர் பாயிறாங்க "நீயா நானா" ல அந்த "போலி கெளரவம்" எப்பிசோடு நானும் பார்த்திருக்கின்றேன். உண்மைல கேள்வி கேட்ட கோபி மேலயும்., நடுவராக வந்திருந்த "எழுத்தாளர் செல்வப்புவியரசு" மீதும் விமர்சனங்கள் எழுந்ததுக்கு அந்த ரெண்டு பேரும் எப்டியும் காரணமாக அமையவே இல்லை. அங்கு ரெண்டு பேரையும் பெருமளவு விமர்சனங்களுக்குள்ள தள்ளினது "பவரின் வெகுளித்தனம்தான்றதும்" இங்கு உண்மை சம காலத்துக்கு தேவையான மிகப்பெரிய தத்துவத்த பவரு கத்து வச்சுருக்காரு "எது நடந்தாலும் வாய மூடி சும்மா இருடா ... பாட்டு வரிகள் பவர் ஸ்டாருக்கு ரொம்ப பொருத்தம் "
இதுல நான் தனிப்பட்ட ரீதியா முகம் சுழிச்சது ஒரே ஒரு இடத்துல, "கோபிநாத்" கேள்வி கேட்டு பவரை பற்றி எழுத்தாளர் செல்வப்புவியரசிடம் கேட்டபோது அதற்கு செல்வப்புவியரசு அவர்கள் ஒரு "தூசணத்தை" உபயோகித்து ஆரம்பிப்பார் அது "மயிரு" என்ற டீசண்டான தூசணத்தில் ஆரம்பிச்சு எதுவாவும் இருக்கலாம் விஜய் tv அத பீப் போட்டு மறைச்சுட்டாங்க . அந்த இடம் எனக்கு ரொம்பவே நெருடிடுச்சு "போலியான கவுரவத்த உருவாக்குரானு எல்லாருமே கிண்டல் பண்ற ஒருத்தன் அத கேட்டுட்டு அமைதியா சிரிச்ச முகத்தோட இருக்குறத பார்த்ததும் "எனக்கும் பவர் மீது ஈர்ப்பு வந்துடுச்சு ...
இன்னுமொரு முக்கியமான மேட்டர் பவர் உபயோகிச்சு பார்க்குற நூதனமான விளம்பர உத்தி , தன்னை எல்லாருமே கிண்டல் பண்றாங்கன்னு நன்றாக தெரியும்
அதே நேரம் தன்ன கிண்டல் பண்றத பலர் ரசிக்கிறாங்க என்றதும் பவர் நல்லா புரிஞ்சு வச்சுருக்காரு அதை வச்சே ஒரு சக்சஸ கொடுத்து பவரு நம்பிக்கைக்கு உதாரணமா மாறி சகிப்புக்கு முன்னுதாரனமாவே ஆகிட்டாருப்பா , ......
0 comments:
Post a Comment