Saturday, April 16, 2011

நடு நிசி நாய்கள் (மனிதர்களுக்கு அல்ல)



அழுக்கில் கிடக்கும் நெல்மணியை பொருக்கி திண்ண முடியுமா?

தின்னச்சொல்கிறார் நம்ம கெளதம் மேனன் ... ஒன்னும் இல்ல நடு நிசிநாய்கள் படம் பார்த்தேன் ( தவறிகூட பார்திடாதிங்கப்பா ) ஒட்டுமொத்த வக்குரத்தையும் ஒன்னா சேர்த்து நல்லதா எடுத்துகோங்கனு சொல்லியிருக்கார் ... ( எப்டிங்க முடியும் ) இந்த படத்தை கவர்ச்சியானது , மோசமானது , குழந்தைகளுக்கு ஒவ்வாது , அட மோசமானது ஆபாசமானது என்றுகூட அடக்கிவிடமுடியாது ... இது ஒரு முழுநீள வக்கிரம் கொடூரம் .....

அப்பாவால் பாலியல் ரீதியில் சீரழிக்கப்படும் மகன் , மகனால் சீரழிக்கப்படும் வளர்ப்புத்தாய் , மன நிலை பாதிக்கப்படும் ஒருவனால் கிராமமாக சீரழிக்கப்படும் பெண்கள் ...இப்படி ஒரு கதையில் நல்லதை எப்படி பொருக்கி கொள்வது ( இப்படியானா சமூக சீர்கேடுகள் நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் நம் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு இதை கண்டிப்பாக காட்டவேண்டிய தேவை இல்லை ).சினிமா என்பது பொழுதுபோக்குக்கானது எல்லாவற்றையும் மறந்து ஒரு 3 மணித்தியாலம் ரசிக்கிறோம் அதிலிருந்து நல்லது கிடைக்கிறதோ இல்லையோ கெட்டது கிடைத்துவிடக்கூடாது



காட்சிக்கு காட்சி குமட்டல் வருகிறது .. வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர்கள் கதை இருக்கிறதே அந்த கதையை கமல் பார்வையில் இல்லாமல் , கொலைகாரர்களின் பார்வையில் யோசித்து இருக்கிறார் கெளதம் .... என்னதான் கதையை குறை கூறினாலும் இசையால் சொல்லவேண்டிய காட்சிகளை கூட கமராவால் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார் ... இசையே இல்லாமல் வெறும் கமரா சூப்பர் ...அதிலும் புதுமுகம் வீரா நடிப்பிலும் பாஸ் ... ( மச்சக்கார நடிகர் ! )



கடைசியில் படத்தில் ஒரு message ... மன நோயாளிகளை ஒதுக்கிவிடக்கூடாது ( ஏம்ப்பா இத சொல்ல வந்துதான் அவ்ளோ குப்பய காட்டிநீங்கலாக்கும் ) என் தயவான கருத்து தயவு செய்து இந்த படத்தை பார்துவிடவேண்டாம் மீறி பார்த்தால் பத்தே நிமிடத்தில் குமட்டும் நான் உத்தரவாதம் .....

1 comment :

  1. """ஏம்ப்பா இத சொல்ல வந்துதான் அவ்ளோ குப்பய காட்டிநீங்கலாக்கும் ...."" nan anum pakala...

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்