Sunday, January 9, 2011

நாளை விடுதலை

கடந்த 19 ஆம் திகதி சக்தி பண்பலையில் ஒலிபரப்பான கவிராத்திரிக்கென நான் புனைந்த வரிகள் உங்கள் பார்வைக்கு வழக்கம் போல என்னை வழி நடத்தும் கவி ராத்திரியின் தயாரிப்பாளர் மற்றும் சக்தி வானொலியின் பிரதம தயாரிப்பாளர் திரு .ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி ...அன்புடன் அன்பன் ...கிருஷ்ணா


என்னையும் கவிதை எழுதச்சொன்னார்கள்
என் இரவுகளின் கருமையை மையாக்கினேன்
என் தனிமைகளின் வெறுமையை சொல்லாக்கினேன்
சிரம் சுமந்த வறுமையும் முறுவல் மறந்த முகங்களும்
அவல பொட்டலங்களுடன் அல்லாடும் மனிதர்களின் அடிப்படையும் தெரிந்ததனால்
நானும் எழுதினேன்
விடுதலை நாளை தேடி நாளை விடுதலை என்ற நம்பிக்கையில்

மழை கொண்டு வருகிறது சமதர்ம மேகம்
பஞ்சமில்லை எங்களுக்கு
வழி வழியாக தொடர்கிறது இந்த உழைப்பின் மோகம்
சோம்பல் இல்லை எங்களுக்கு




அளந்து அளந்து உணவை அளந்து
வளைந்து வளைந்து உழைப்பை சுமந்து
நெளிந்து நெளிந்து கூச்சம் மறந்து
இழந்து இழந்து அனைத்தும் மறந்து
நாங்கள் கொட்டிய உழைப்பில்தான்
கொடி கட்டி பறந்தது இந்து சமுத்திரத்தின் முத்து

இலை கூட கருகும் மார்கழி பனியிலும்
சுள்ளென்று சுடும் கோடை வெயிலிலும்
ஆளையே அல்லும் மாரி மழையிலும்
மலையை விட்டிரங்காத என் முப்பாட்டனின் உதிரம்தான்
இந்த மண்ணின் சிகப்பில் தெரிகிறது

உழைப்புக்கேட்ட்ற ஊதியம் இன்றி
பிழைக்க வேறு நாதியும் இன்றி
மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் ஒடுக்கப்பட்ட உடமைகளுக்கும்
சத்தமிடத்தெம்பில்லாத என் முப்பாட்டனின் வியர்வைதான் இந்த மண்ணில் செறிந்திருக்கிறது

எங்கள் முதுகெலும்புகள் ஒவ்வொன்றும் இந்த நாடிட்காகவே தேய்ந்த கதை தெரியுமா
எங்கள் அங்கங்கள் ஒவ்வொன்றும் அந்நிய செலாவனிக்காகவே காய்ந்த கதை தெரியுமா




வந்தவன் போனவன் எல்லாம் பணத்தில் மிதக்க
கண்டவன் நின்றவன் எல்லாம் சுகத்தில் திளைக்க
எங்கள் சுயத்தை கூட மறந்து நிற்க நாம் என்ன தெருவில் கிடக்கும் குப்பை நிரப்பும்
முச்சந்தி தொட்டிகளா

பன்னெடுங்கால சுதந்திரம் ,
பறை சாற்றும் ஜனநாயகம்
நாம் வெகுண்டெழுந்த போதெல்லாம்
கட்டியணைத்த தந்திரம்
இறுக்கத்தை தளர்த்தியபோது முதுகில் ரத்தம்
வழிந்தபோது தெரிந்தது எங்கள் இனத்தின் ஏமாற்றம்

அயலில் ஆறு கோடி பேர் என்பர்
எங்கள் தந்தை நாடென்பர்
வந்தால் வாழவைக்கும் மூத்தகுடி என்பர்

அது சரி .....
ரத்தம் இங்கு சிந்திய போதே
திரையில் முத்தம் சிந்தியவர்களுக்கு வீடேழுப்பியவர்களிடம்
மத்தியில் நாம் அநாதரவாய் நிற்பதை சொன்னால்
பதை பதித்து ஓடிவந்துவிடப்போகிறார்கள்

என் சகோதரனே
நீ உனக்காக சிந்திக்கிறாய்
நான் எனக்காக சிந்திக்கிறேன்
நாம் நமக்காக சிந்திப்பதில்லை
உன் விடுதலை உன்னிடம்
என் விடுதலை என்னிடம்
நம் விடுதலை நம்மிடம்



புகையிருட்டுக்குள் தொலைந்துகொண்டிருக்கும்
உன் பருவங்களை துலக்கு
வெற்றுபோதைக்குள் தோற்றுபோகும்
உன் விடலைபருவத்தை தட்டிஎழுப்பு
கூவி அழைக்கும் புதிய அலைகளின்
உரிமைசுவடுகளின் பின்னால் நட
முறுவல் சிந்த வேண்டிய முகத்தில்
முனகலிடும் வாயை கிழித்துவிடு

எங்கள் நெருப்பில் குளிர் காய்பவரிடம்
எங்கள் உவர்ப்பில் உணவுன்பவரிடம்
எங்கள் நிழலில் இளைப்பாருபவரிடம்
எங்களுக்கானதை கேள்
மறுத்தால் கொடுப்பதை நிறுத்து
கெடுபபதுதானே தவறு கொடுப்பதை நிறுத்துவதில் இல்லையே

நம்பிக்கயோடு கைகோர்ப்போம்
புரட்சி வீதியில் சேர்ந்து நடப்போம்
விடுதலை நாளை தேடி நாளை விடுதலை என்ற நம்பிக்கையில்

Sunday, January 2, 2011

இந்த வருடத்தின் முதல் கவிராத்திரியில் என் கவிதை முழக்கமும் உலகெங்கும் சக்தி கொண்டு சென்றது வாய்ப்பளித்த சக்தியின் பிரதான தயாரிப்பாளர் ராஜ் மோகனுக்கு மற்றும் என் கவிக்குழந்தையை சீராக வளர்க்க பொருப்பெடுத்திருக்கும் அத்தனை சக்தி ரசிகர்களுக்கும் கவிராத்திரியின் அவை முதல்வர் சடாகோபன் ஐயாவுக்கும் நன்றிகள்
கவிராத்திரி ஞாயிறு இரவு 10 மணிக்கு உங்கள் சக்தியில்


காலமே உனது கணக்கை நிறுத்து

காலமே நீ எங்களுக்கு யார் ?
காலம் காலமாய் காலம் ஒதுக்காமல் கேட்கிறேன்
காலமே நீ எங்களுக்கு யார் ?

நியாயம் இன்றி நீதி வழங்குகிறாய்
நயவஞ்சகனா நீ ?
உன்னை கடந்து சிந்தித்தால் தண்டனை பரிசு
உன் கணக்கிலிருந்து
கயவனா நீ ?

எதிலும் நிறைந்திருக்கிறாய்
எங்கும் பரந்திருக்கிறாய்
காற்றிலும் நேற்றிலும் செறிந்திருக்கிறது உன் கணக்கு

எல்லைகள் மீறப்படும் போதும்
தொல்லைகள் விஞ்சப்படும் போதும்
தர்மத்தை அழித்து கோரப்பட்களுடன்
சிரிக்கும் தூய மகராசர்கள்
அதர்மத்தை சிரத்தில் சுமக்கும் போதும்
தன்னம்பிக்கை அற்ற என் பரிதாப மனிதர்கள்
அவர்கணக்கை உன் கணக்கில் கண்ணீருடன் நிலையான வைப்பிளிடுகின்றனர்
அப்படியானால் நீ கடவுளா ?
அல்லது அவன் கணக்கே நீதானா?......
காலமே கடவுளா நீ ?
அல்லது அவன் போடும் கணக்கே நீதானா ?

புரியவில்லை எனக்கு உன் பெயர்
தெரியவில்லை எனக்கு உன் கணக்கு

வந்து போன தடங்களை அழித்து
வெந்த மனிதர் கதைகளை ஒழித்து
கனவுடன் திரிந்தால் முகம் சுழித்து
நெருப்பில் கிடந்தாலும் உனக்கு நெஞ்சம் உருகா
கொடூரனா நீ ...?
நெஞ்சம் உருகா கொடூரனா நீ ?...

பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளையும்
மன வீடு புக நேற்றுதான் தயாரான இழனங்கைகளையும் சித்திரைமாதம் எப்படியும் முகத்திரை காட்டிவிடலாம்
என்று 6 மாதம் குடத்தில் உயிர்காத்த குறை உயிர் சிசுவையும்
விட்டுவைக்காமல்

காலால் மித்தித்து, மார்புகளை வெட்டியும் , வயிற்ரை கிழித்தும் உயிர் பிடுங்கியவனை பார்த்து பொறுமையாக இருக்க சொல்கிறாய்
நீ என்ன பேடி பயலா ...?

காலமே நீ யார் எங்களுக்கு ?

தெரியாமல் கேட்கிறேன்
என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?

நீயாக கூடி வரும்வரி காத்திருந்த என்
பரம்பரையும்
நாளாக நாளாக நோய் கொண்டு மாண்டனர்

உன்னை மீறி உன் கணக்கை உலுக்கி
உனக்காய் காத்திருந்தவரை உயிரோடு மண்ணில் கருக்கி
சிரித்து நிற்பவர்கள் உன் தயவிலேயே மீண்டுக்கொண்டிருக்கின்றனர்

தெரியாமல் கேட்கிறேன்
என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?

ஆயிரம் ஆயிரம் மாந்தர்களும்

இன்று விதவை கோலம் கொண்ட தெய்வங்களும்

உயிர் பெறுமதி வேண்டாம் என்ற தங்கங்களும்

வாழ்த்தென்ன வீழ்ந்தென்ன வெறுமைதானே
பரிசாய் தந்தாய்
30 ஆண்டு கடத்தி வெறுமையை தானே
பரிசாய் தந்தாய்

ஏன் என் இனம் உனக்கு ஈனமா?
என் இனப்பிரவிகள் உனக்கு ஊனமா ?

நூறாண்டு என்பது உன் கணக்கு படி
சொற்பமாய் இருக்கலாம்
முப்பதாண்டு என்பது உன் கணக்குப்படி
அற்பமாய் இருக்கலாம்

மாடுகளை அடைக்கும் கொட்டில் போன்றதொரு மடம்
எங்கள் வாழ்விடம்
அகலமாய் கை விரித்து சோம்பல் முறிக்க முடியாது
எங்கள் உறைவிடம்
உடுத்தி உடுத்து கிழிந்துபோன துணியும்
இரும்புப்பெட்டிக்குள் பழைய மனிதர்களின் உருவப்படங்களும்
மாதமானால் சம்பளம் வாங்கும் பட்டியலின் பொலுத்தீன் உரையையும் தவிர
நூறாண்டுகளில் நீ தந்த பொங்கலும் இல்லை
உன் கணக்கு தந்த இனிப்பும் இல்லை

ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து
கொளுந்துபரிக்கும் என் குல மங்கைகள் உன் குரல்வளை நெரிக்க விரைந்துவருகின்றனர்
ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து

நீ ஈனம் என்றெண்ணிய என் இன மாந்தர்கள் வெறியோடு உன்னை எதிர்த்து தீ மிதிப்பார்
நீ ஊனம் என்றெண்ணிய என் இன இனப்பிறவிகள்
ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து

நூறாண்டுகளுக்கு முன்னாள் உன்னை காலால் எட்டி மிதித்த என் மீசைக்கார முப்பாட்டன்
பாரதி மீது ஆணை ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து


Thursday, December 30, 2010

வருடம் சொன்ன செய்தி

இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் 2010 ஆம் வருடத்திற்கு கை அசைக்க தயாராகும் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு இந்த கடந்த வருடம் திருப்பு முனையாக அமைந்தது என்பதை விட சில செய்திகளை எனக்கு மிகத்தெளிவாக சொன்ன ஒரு வருடமாகும் நான் எதிர்பாராத பல ஆச்சர்யங்களை கண்கூடாக கண்டுகொண்ட ஒரு வருடமாகும் ..........

அதிலும் கடைசி மாதம் நான் எதிர்பாராத பல சந்தோசங்களை எனக்கு தந்திருக்கின்றது நான் சார்ந்த சக்தி fm இன் நிகழ்ச்சி மாற்றங்களின் பின்னால் எனக்கும் சில பெறுமதியான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன அவற்றில் என் பன்முக திறன்களை நான் என்னால் முடிந்தவரை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன் மறக்க முடியாதது எனக்குள் இருந்த எழுத்து கோர்வையை கவிதைகள் என்ற பெயரில் மூத்தோர்கள் நிறைந்த கவியரங்கத்தில் என்னால் முழங்க முடிந்தது

ஞாயிறு இரவு நடக்கும் கவியரங்கத்திட்காக என் கவிதைகளும் இணைத்துக்கொள்ளப்பட்டு மக்களிடம் இருந்தும் சக நண்பர்களிடம் இருந்தும் மற்றும் கவியரங்க நண்பர்களிடம் இருந்தும் சுமாரான "கவிதை"
என்ற பெயர் கிடைத்தது எனக்கான முதல் அங்கீகாரம் என கருதுகிறேன்

இலங்கையின் எழுத்து துறை முன்னோடி கவிஞர் திரு இரா சடாகோபன் அய்யா அவர்களின் தலைமையில் மேடையேறிய என் கவியரங்க வரிகளை அடுத்த அடுத்த பதிவுகளில் பதிவிடுகிறேன் உங்கள் பின்னூட்டங்களை பதிவிடுங்கள் தயவு செய்து

அதே நேரம் ஊடகத்துறை சார்ந்த மற்றும் தென் இந்திய திரை உலகம் சார்ந்த பலரிடம் நேரடியாக நான் எடுத்த செவ்விகளையும் எழுத்துருவில் பதிவிட தயாராகிறேன்

கடந்து முடிந்த வருடம் எனக்கு சொன்ன செய்தி மட்டும் இப்போதும் என் காதுகளுக்குள் கேட்டுகொண்டே இருக்கிறது அது "கவனம் இந்த வாழ்க்கை அவ்வளவு சாதாரணம் இல்லை "கவனமாய் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் நம்பிக்கைகளுடன் அடுத்த ஆண்டில் நான் மீரா .......

Wednesday, December 29, 2010

இனிய புதுவருடம் இதமாய் இனிவருடும் நண்பர்களே..

புதியதொரு வருடம் சேர்ந்தே ஒரு வயது மூப்பு எனக்கு..22 வயது கடந்துபோனதை நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது "நட்சத்திரவீதியில் " நகர்வலம் சீரானதாக இல்லாவிட்டாலும் எனக்கு ஒரு நல்ல ஆரம்பத்தை பெற்றுத்தந்தது இந்த வலைப்பதிவு என்பதில் சந்தேகம் இல்லை என் கனவுகளின் பாதையில் என் பயணம் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நடைபோடுகிறது என்பதும் என் கற்பனையில் சேர்க்க முடியாத ஆச்சர்யம்

பதிவுலகில் நான் இன்னமும் அடையாலமில்லாமலேயே இருக்கிறேன் உண்மை என்னவென்றால் இந்த பதிவுகள் ஒவ்வொன்றும் பிறர் படிப்பதற்காக அல்ல பிறர் படிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்பதும் எனக்கு தெரியும் இந்த பதிவுகள் அனைத்துமே என் தனிப்பட்ட தாகத்துக்கானதாகவே ஆரம்பித்தேன் இதுவரை என் பதிவுகளை விளம்பரப்படுத்தும் எண்ணம் வராமைக்கு காரணமும் அதுதான்

பள்ளிக்கூட நாட்களில் எழுத்துக்களில் தொலைந்துபோன என் இரவுகளின் கருமையும் ,வானொலிக்கு வந்தபின் அசாத்தியமாய் என்னை தொடரும் தனிமைகளின் வெறுமையும் நாமும் எழுதினால் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்புமே இந்த "நட்சத்திரவீதியில்"

என் மீது அக்கறை உள்ள என் நலன்விரும்பிகளும் ,தமிழ் கடலில் நீந்த தயாராகும் தகுதி எனக்கு இருக்கின்றது என்ற நம்பிக்கை இருக்கும் சிலரும் பதிவுலகில் என்னை வழிநடத்துகின்றனர் அவர்களில் ரேடியோ மோகன் எனப்படும் சக்தி வானொலியின் சமகால நிகழ்ச்சி தயாரிப்பாளர் ராஜ்மோகன் ,அறிந்தும் அறியாமலும் பதிவுகளுக்கு சொந்தக்காரரும் சக்தி பண்பலையின் உதவி முகாமையாளருமான டயனா ..நண்பன் பாஹத் , மற்றும் சக்தயின் முன்னாள் நிகழ்ச்சி பொறுப்பதிகாரி திரு .மாயா மற்றும் சக்தி பண்பலையின் அறிவிப்பாளினி சஹோதரி ஓஷியாவும் முக்கியமானவர்கள்

இன்னும் தேர்ச்சியடயாத துளிர்விட முனையும் என் எழுத்துக்கள் என்னும் தளிர்களுக்கு உரமிட்டு இன்னும் இன்னும் மாறுபட்ட பதிவுகளை பதிவிட்டு பதிவுலகில் நானும் ஆழமாய் கால்பதிக்க நட்சதிரவீதிக்கு வரும் அனைவரும் உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களை கண்டிப்பாக பதிவிட வேண்டுகின்றான் என் எழுத்துக்குழந்தை .....நன்றிகளுடன் மீ.ரா.
இனிய புதுவருடம் இதமாய் இனிவருடும்

Sunday, October 3, 2010

இவன் மனதில் இன்று ....

கனவுகளை நான் தொலைத்ததும் இல்லை இதுவரை என் கனவுகளுக்கு முகவரியும் சரியாக புரியவில்லை ..காலம் கற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்த்து ஓரமாய் இருக்கும் பக்குவத்தை உடலோடு ஒட்டவிடாமல் தடுக்கும் என் வயதுக்கு அறிவு சொல்லும் அறிவுரைகளுக்கு மதிப்பும் இல்லை ...

என்ன செய்ய ? விடை காணமுடியாத என் வினாக்களுக்கு விடைகளை காலம் கற்றுகொடுக்கும் போது ,இலவச இணைப்பாக தந்துவிட்டுபோகும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ,மருந்தை நீயே தேடிக்கொள் என்று சொல்வது காலத்துக்கே மனிதாபிமானம் மறந்துவிட்டதை வேடிக்கைபார்க்க சொல்கிறது உலகத்துக்கு ....... (இன்று அக்டோபர் 3 ஆம் திகதி நீண்ட இடைவேளைக்கு பிறகு விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் இரவு 11 மணிக்கு என் மனதில் தோன்றிய உணர்வுகள் )

Sunday, September 12, 2010

உறையவைத்து உருகவைத்தவை



இன்னமும் மனம் எனக்கு ஆறவில்லை என் வயதுக்கும் என் ரசனைக்கும் சம்பந்தமே இல்லை என்று என் நண்பர்கள் கேலி செய்வார்கள் பழைய பாடல்கள் மீது எனக்கு இருந்த ஆர்வம்தான் எனக்கு சக்தி fm இல் அந்த நாள் ஞ்சாபகம் நிகழ்ச்சியை பழுதுபடாமல் சில நாட்கள் நடத்த உதவியது , வெளிச்சம் fm இன் மிகப்பிரபலமான பாலும் பழமும் நிகழ்ச்சியும் அப்படியே
இசை என்பது எனக்கு இன்று சில இரவுகளில் நான் மறக்கும் உறக்கத்துக்கும் மாற்றீடு , பல நேரங்களில் பசி என கத்திய என் வயிறுக்கு அமுதசுரபியாக இசை மட்டும்தான்

இதுவரை ஏன் இப்பொழுது எனக்கு தொழிலே அதுதான் ,இந்த பதிவு ஒரு இரங்கல் பதிவு அல்ல ஆனால் மனம் படும் வேதனைகளுக்கு கொஞ்சமும் அளவு கிடையாது , இப்பவும் நிமிடத்துக்கு நிமிடம் தோன்றுவது அந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்பில்லை என்று தெரிந்தும் இந்த குழந்தை மனம் அந்த இழப்பை தாங்குவதாக இல்லை

ஸ்வர்ணலதா என்ற குயிலின் குரல் எனக்கு நன்கு அறிமுகமாகி என் உறக்கத்தை பறித்தது இன்று நேற்று அல்ல அரை காற்சட்டைக்கு மேல் சட்டை போட்டு வழியும் மூக்கை கரங்களால் துடைத்த அந்த நேரங்களிலேயே என் வை முணுமுணுத்தது அந்த முக்காலா பாடல்தான் ( அவருக்கு உதாரணம் காட்ட இந்த பாடல் பொருத்தம் இல்லை என்றாலும் உண்மை அது தான் ) ஒரு கட்டத்தில் பாடல்கள்தான் எல்லாமே என்று ஆனபோது ஸ்வர்ணலதா அம்மாவை மறந்த இசை இல்லை என்றளவுக்கு நான் அவரின் குரலுக்கு அடிமையாகினேன்

"மாலையில் யாரோ மனதோடு பேச" ,குயில் பாட்டு வந்ததென்ன ,என்னுள்ளே என்னுள்ளே ,என்னை தொட்டு அள்ளிகொண்ட ,போவோமா ஊர்கோலம் என்று , ராஜா தந்த கற்பனைக்கு எட்டாத ஸ்வரங்களின் கோர்வைக்கு இந்த குயிலை தவிர வேறு எந்த குரலை பொருத்தினாலும் எதோ ஒன்று குறையும்

ரஹ்மானின் வருகைக்கு பிறகு அதிகரித்த பாடகர்களின் எண்ணிக்கையில் ,இவர் அடித்து செல்லாமல் நிலைத்து நின்றமைக்கான சான்றுகள் ,எவனோ ஒருவன் ,போறாளே பொன்னுத்தாயி ,காதலெனும் தேர்வெழுதி , என்று நீண்டு செல்லும் , ஹேரிஸ் ஜெயராஜின் இசையில் வந்த ஆரிய உதடுகள் இவரின் உதடுகள் தந்த என்றும் இனியவை

பார்வைக்கு எப்போதுமே எளிமையாக , தான் பெற்ற பெயரை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளாத பெருமை இவருக்கு நான் ஊடகத்துறைக்கு வர முன்னர் கண்ட கனவுகளில் , செவ்வி காண முடியாவிட்டாலும் ஒருமுறை நேரில் பார்த்தாகவேண்டும் என்று ஆசைப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்த குயில் இனி காற்றலையில் குரலாக மட்டுமே இருக்கபோகிறது

இந்த குயிலின் இடத்தை நிரப்ப இனி எந்த குயில் பிறக்குமோ ?

உறையவைத்து உருகவைத்தவை

அடங்கியது குயில் .... "குரல் அல்ல" , போவோமா ஊர்கோலம் பாடிய பொன்னுத்தாய் காலத்தோடு இன்று கரைந்தால் காற்றாக இன்று நான் தொகுத்து வழங்கிய வானொலி நிகழ்ச்சியில் என் உற்சாகத்தை பறித்த அந்த செய்தி பொய்யாக வேண்டும் என்று மனம் பல நொடிகள் ஸ்தம்பித்தது 23 வருடம் திரையிசையில் சகாப்தம் படைத்த ஸ்வர்ணலதா அவர்கள் அகால மரணம் அடைந்தது இசைபித்தன் என்ற வகையில் இன்று என்னை முழுமையாக கலங்க வைத்தது இந்த நாளை வெறுக்கிறேன் என் பார்வையில் என் செவியில் இன்றும் என் பல இரவுகளுக்கு இவர் வள்ளி படத்தில் பாடிய என்னுள்ளே என்னுள்ளே பாடல்தான் துணை

Friday, September 3, 2010

உறையவைத்து உருகவைத்தவை

அண்மையில் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த செய்திகளில் இரண்டு சம்பவங்களின் பால் நான் அதிகமாக ஈர்க்கப்பட்டேன் உண்மையில் இறுதி யுத்தத்தின் பொது செய்திகள் எப்படி என்னிடம் இருந்து என் உறக்கத்தை பரித்துகொண்டதோ , அதே போன்றதொரு உணர்வை இந்த செய்திகள் இரண்டும் ஏற்படுத்தியது

வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்று அந்த சகோதர மொழி பேசும் சகோதரிக்கு நேர்ந்த கொடுமைகள் என் மனதில் பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பியிருந்தன மத்தியகிழக்கு தேசத்துக்கு வேலை தேடி செல்பவர்கள் இப்படியான கொடுமைகளுக்கு ஆளாவதுபற்றி நாம் கேள்விபட்டது இது முதல் தடவை அல்ல என்றாலும் இது ஒரு புதரகம் ... கேட்கும் போதே மனதுக்கு தோன்றும் வேதனைகள் காட்சிகளைபார்க்கும் போது பீரிட்டு வந்துவிடுகிறது


நம் நாட்டிலிருந்து மத்தியகிழக்கு செல்லும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலைமையா? என்று தேடி பார்த்ததில் உதட்டை மட்டுமே பிதுக்க முடிந்தது ... இன்னும் கொஞ்சம் ஆழமாகப்போனால் பிற நாட்டு பெண்களுக்குத்தான் இந்த நிலைமையா என்றால் அதுவும் இல்லை சில நாட்களுக்கு முன் ஆனந்தவிகடன் சஞ்சிகையின் ஒரு பக்கம் என் இரவை ஆக்கிரமித்திருந்தது ...

ஆப்கானிஸ்தான் தேசத்தில் ஒரு பெண் 12 வது வயதில் பருவம் எய்தும் அவளுக்கு பெயர் ஆயிஷா
14 வது வயதில் ஒருவனுக்கு மனம் முடித்து கொடுக்கபடுகிறாள் ,இலவச இணைப்பாக மாப்பிள்ளைக்கு அவள் உடன் பிறந்த சோதரியும் ... அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் ... பாதிநாள் அவனுக்கு காடுகளுக்குல்தான் சரணாகதி .. கணவனை எப்போதாவது பார்க்கும் ஆயிஷாவுக்கு மத்த நாட்கள் அனைத்தும் மாமனார் மாமியாரின் கொடுமைகள் ஏராளமாக , தாங்க முடியாமல் வீட்டிலிருந்து ஓடும் அவளை கந்தகார் பெண்கள் சிறையில் அடைக்கிறது அந்த நாட்டின் சட்டம் ஒருவாறு அங்கிருந்து அவளை அவள் தந்தை மீட்க சில நாட்கள் நிம்மதி , காடுகளுக்குள் கரந்தடி வாழ்க்கை வாழும் அவள் கணவன் வீட்டுக்கு வந்து மனைவியை மிஸ் பண்ண ... வெறி தலைக்கேரியவனாக ஆயிஷாவை தேடி மாமனார் வீட்டுக்கு போக ... தடுக்க முடியாமல் அவள் தந்தை அவனுக்கு வழிவிடும் நொடிகளில் வெறி பிடித்துவரும் அவனிடம் இருந்து தப்பிக்க ஒழிந்து கொள்ளும் அவளை பிடித்து இழுக்கும் அவன் உலகம் வெட்கி தலைகுனியும் அந்த கொடூரத்த்தை நடத்துகிறான் அவள் கதற கதற அவள் மூக்கை துண்டாக அறுத்து எறிகிறான் வலி தாங்க முடியாத அந்த 18 வயது குழந்தை மரண ஓலமிட காதுகள் இரண்டையும் ஓட்ட அறுத்து வெறியை தீர்த்துகொல்கிறான் அவன் "
வாசிக்க எதோ படத்தின் கதை போலதான் எனக்கும் இருந்தது ஆனால் உண்மை அதுவல்ல என்று தெரிந்ததும் , கவலை மறந்து போனது பதிலுக்கு கோபம் மட்டுமே தலைக்கேறியது , தலிபான்களின் சட்டம் எவளவு இறுக்கமானது என்பதும் அது பெண்கள் மீது எப்படி பாய்கிறது என்பது குறித்தும் நான் எழுதித்தான் தெரியவேண்டும் என்று இல்லை ... ஒருபக்கம் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து தலீபான்கள் எப்போதோ வேரருக்கபட்டுவிட்டனர் என்று அமெரிக்க கொக்கரித்தாலும் இன்னமும் அவர்கள் வசம் சில கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன அங்கு அவர்கள் வைப்பதுதான் சட்டம் ...


இதெல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மாகன் முன்னாள் நடக்க அதற்கு ஆறடி பின்னால் பெண் நடக்க வேண்டும் சில வாரங்களுக்கு முன் அங்கு சென்ற செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் ஒருவர் பார்வைக்கு இது மாறி தெரிகின்றது ஒரு இடத்தில் பெண் முன்னாள் நடக்க அதற்கு சில அடிகள் பின்னால் அவள் தடத்தில் ஆண் ஒருவன் அதாவது அவள் கணவன் தொடர்கிறான் .... காட்சியை கண்ட அந்த பெண் சிலிர்த்து போய் அவள் கணவனிடம் கேட்க்க அவன் சொல்கிறான் ஏற்கனவே இங்கு கண்ணிவெடிகள் முழுதாக அகற்றப்படவில்லை அதான் அவளை முன்னே விட்டு ஊர்ஜிதபடுத்திகொண்டு தான் பின்னே செல்கிறேன் என்கிறான் எப்புடி பய புள்ள


இனி ஆயிஷாபற்றி மறுபடி பார்க்கலாம் சில நலன் விரும்பிகள் மூலம் அவள் இப்பொழுது முக மாற்று அருவைசிகிச்சைகாக அமெரிக்கா போய்விட்டால் இனியாவது அவள் வாழ்க்கை நிம்மதியடயட்டும் ஆனால் அவள் கவலைபடுவதேல்லாம் அவள் தங்கை இன்னமும் அந்த கொடூரர்களின் பிடியில் .......



மனிதாபிமானம் இல்லாத இடங்களில் மதங்களுக்கு பிரயோஜனம் கிடையாது ( ஆயிஷா ) இப்படி சொந்த மண்ணிலேயே அதுவும் சொந்த இனத்து பெண்களுக்கே விமோசனம் இல்லாத நாடுகளை நோக்கி நம் ஏழை நாட்டு பெண்கள் படையெடுப்பது வறுமைக்காக மட்டுமே உள்நாட்டில் அவர்களுக்கான சரியான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வக்கில்லாமல் ஒரு கூட்டம் மத்தியகிழக்கு சட்டத்தை சாடிக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறது

மூக்கோடு சேர்ந்து பெண் சுதந்திரம் அறுபட்ட நிலையில் இன்னமும் ஆயிரம் ஆயிஷாக்கள் மத்தியகிழக்கில்

Thursday, September 2, 2010

உறையவைத்து உருகவைத்தவை


இடைவெளிகள் தான் நெருக்கத்தை தீர்மானிக்கின்றன
ஆனால் நெருக்கமற்ற இடைவெளிகள் பிரயோசனமற்றவை

உறையவைத்து உருகவைத்தவை


தவறுதலாய் சோற்றில் ஒரு முடிகிடைந்தமைக்காக
தகப்பன் பிசாசு தருவிக்கும் வசைகளில்
கொச்சை படுத்தப்படும் அம்மாவின் பெண்ணுறவு முழுசாய்

கருவப்புதருக்குள் எச்சில் குவளையில் சாராயத்தை
மல்லாத்தும் போதும்
நோய் கொண்ட வைப்பாட்டியை நெருங்கும்போதும் அப்பன்மார்களுக்கு அவசியப்படுவதில்லை சுத்தம்
Copyright © 2014 நட்சத்திரவீதியில்