Sunday, October 3, 2010

இவன் மனதில் இன்று ....

கனவுகளை நான் தொலைத்ததும் இல்லை இதுவரை என் கனவுகளுக்கு முகவரியும் சரியாக புரியவில்லை ..காலம் கற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்த்து ஓரமாய் இருக்கும் பக்குவத்தை உடலோடு ஒட்டவிடாமல் தடுக்கும் என் வயதுக்கு அறிவு சொல்லும் அறிவுரைகளுக்கு மதிப்பும் இல்லை ...

என்ன செய்ய ? விடை காணமுடியாத என் வினாக்களுக்கு விடைகளை காலம் கற்றுகொடுக்கும் போது ,இலவச இணைப்பாக தந்துவிட்டுபோகும் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ,மருந்தை நீயே தேடிக்கொள் என்று சொல்வது காலத்துக்கே மனிதாபிமானம் மறந்துவிட்டதை வேடிக்கைபார்க்க சொல்கிறது உலகத்துக்கு ....... (இன்று அக்டோபர் 3 ஆம் திகதி நீண்ட இடைவேளைக்கு பிறகு விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்தேன் இரவு 11 மணிக்கு என் மனதில் தோன்றிய உணர்வுகள் )

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்