Wednesday, April 16, 2014

திருமிகு மலிங்க

அப்போதே என் பெயரில் பல சாதனைகள் இருந்தன ...ஆனாலும் பலர் பார்வையில் நான்  முடிக்கு சாயம் பூசிக்கொண்ட ,காதுக்கு தோடு போட்ட ...,டட்டூ அடித்திருக்கும் ( கிட்டத்தட்ட ரௌடி ) ஒரு ஒழுக்கமற்றவனாகவே தெரிந்தேன். அதனாலேதான் இந்த பதவி என்னிடம் வர இவ்வளவு காலமோ என்னவோ.! கடைசி போட்டியில் பிடிஒன்றை தவறவிட்டபோது அணியின் தலைவனாக அவமானமாக இருந்தது ! ஆனால் அதற்காக என்னால் தலை  குனிய முடியாது அப்படி குனிந்தால் தலைவனாக அணியை என்னால் வழி நடத்த முடியாமல் போயிருக்கும். அதை அந்த நிமிடமே மறந்துவிட்டு அடுத்த பந்திலிருந்து அணியை மீண்டும் தன்னம்பிக்கையுடன் வழி நடத்தினேன் உலகக்கின்னத்தையும் வென்றேன் 


என் வெளித்தோற்றத்தை பார்த்து என்னை எடை போட்டபோதேல்லாம் என்னால் கிரிக்கட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே யோசித்தேன், எவருக்காகவும் என்னை மாற்றிக்கொண்டதில்லை மாற்றப்போவதுமில்லை, தலைமை பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை சிந்தனையில் இருந்ததெல்லாம் முடியுமான காலம் வரை கிரிக்கட் விளையாட வேண்டும் என்பது மட்டுமே ..இப்போதும் என்னால் ஆனதை சொல்லித்தருவேன் ஆனால் என் வெளிதோற்றத்தை கண்டு யாரும் என்னை எடை போட்டால் அது என் தவறு அல்ல 

லசித் மலிங்க ஒரு தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய செவ்வி அந்த செவ்வி முழுக்க மலிங்க கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை சொல்லும் செவ்வியாக இருந்தது 

1 comment :

  1. நன்றாக இருக்கிறது சகோதரா தொடரட்டும் உங்கள் பதிவுகள்

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்