Tuesday, April 15, 2014

சித்திரை வருட பிறப்பு வண்ண வண்ண பூக்களோடு ஆரம்பித்தது

புதுவருட வாழ்த்துக்கள் சில மாதங்கள் கழித்து மீண்டும் எழுதி பார்க்க மனம் சொல்லியது கடந்த 14 திகதி அதிகாலை KTV இல் வண்ண வண்ண பூக்கள் படம் பார்த்தேன் நீண்ட காலமாக பார்க்க ஆசைப்பட்ட படம் அதிகாலை பொழுது என்பதால் விளம்பர தொல்லையும் இல்லை அதிலும்  முழுமையாக இரண்டரை மணி நேரம் ஒரு படம் இடைவெளி இல்லாமல் விளம்பர தொல்லை இல்லாமல்  KTV ல பார்க்க கிடைப்பது அபூர்வம்

காட்டுக்குள் தனியாக நிக்கும் ஒரு பெண் அவள் மீது காதல் கொள்ளும் நாயகன் நாயகனை ஒரு தலையாக காதலிக்கும் இன்னுமொரு நாயகி பிரஷாந்தின் ஆரம்ப கால முகம் பாலுமகேந்திரா இயக்கம் என்பதால் மிகைபடுத்தாத நடிப்பு

பிரஷாந்த் மீது சராசரி ரசிகனுக்கு இருக்கும் கோவம் மிக சாதாரணமானது அவரின் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் மட்டும் சில படங்களை தவிர்த்திருந்தால் இன்று பிரசாந்த் இன் நிலைமையே வேறு .ஒரு நல்ல நடிகனை நாசமாக்கிவிட்டார்கள் ...அடுத்தது தமிழின் மிக இயற்கையான இயல்பான அழகு கொண்ட நடிகைகளில் மௌனிகா , வினோதினி இருவருக்கும் முதல் 10 இடங்களுக்குள் கண்டிப்பாக இடம் இருக்கும் எவ்வளவு இயல்பு அதிலயும் வினோதினி இயல்பிலும் இயல்பு

ஒரு காட்சியில் விநோதினியை திருமணம் செய்ய ஆசைபடும் பிரசாந்திடம் எதோ தான்  செக்ஸுக்காக மட்டுமே பழகியதை போல சில வசனங்களை உச்சரிப்பார் வினோதினி கல்யாணத்துக்கு முன்னாள் உடல் உறவு என்பது எதோ மாபாதகம் போல காட்டப்பட்ட காலத்தில் பாலுமகேந்திரா அதை விரசமோ ஆபாசமோ இல்லாமல் இயல்பாக காட்டுகின்றார்  ,  அப்படி இல்ல தன்னால் நீண்ட காலம் வாழ முடியாது என்று பிரஷாந்தின் நண்பனிடம் சொல்லும் காட்சி என்று வினோதினி அழகு


மௌனிகாவின் இயற்கையான அழகு தமிழில் அபூர்வம் பாலுமகேந்திரா ரசனைகாரர் ....முள்ளும் மலரும் ஷோபாவுக்கு இயல்பான அழகு என்றால் மௌனிகா அதன் அடுத்த உயரம் ( இதுல முக்கியமானது இரண்டு பேரோடையும் பாலுமகேந்திரா கிசு கிசுக்கப்பட்டார் மௌனிகா இறுதி காலத்தில் அவரை மணந்துகொண்டார் )

எப்படியோ இந்த சித்திரை வருட பிறப்பு வண்ண வண்ண பூக்களோடு ஆரம்பித்தது சுவாரஷ்யம்  பின்னணி இசை என்னவோ அவ்வளவாக ஒட்டவில்லை ராஜா சாரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்

1 comment :

  1. இனிமையா பிரசாந் தொலைந்து போன நாயகன்

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்