Friday, November 11, 2011

அஜீத் என்னும் ”மனிதன்” - ஒரு மேக்கப்மேனின் பார்வையிலிருந்து ..





நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இருந்தது. பொதுவாக லைவ் தொலைக்காட்சிக்குச் செல்லும்போது ஒப்பனையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒப்பனை அறை ஒன்று உள்ளது. ஒப்பனைக் கலைஞர்களும் உள்ளனர். நமக்கு மேக்கப் போடாமல் விடமாட்டார்கள்.
கண்ணுக்குக்கீழ் கருமையைப் போக்க ஏதோ மாவைப் பூசினார். முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டார். புருவத்தைச் சீராக்கினார்.

சிரித்தேன். ‘நான் என்ன சினிமாக்காரனா? எனக்கு எதற்கு இந்த மேக்கப் எல்லாம்? இதனால் என்ன பிரயோஜனம்?’ என்றேன்.
இல்ல சார், வயசை ஒரு 15 வருஷமாவது குறைச்சுக் காட்டும்’ என்றார்.
அது எனக்கு எதுக்கு? வயசு ஆகிட்டுத்தானே இருக்கு? முன்னாடி தலை எல்லாம் நரைக்க ஆரம்பிச்சாச்சே’ என்றேன்.

‘வேணும்னா அதை மாத்திடலாமா?’ என்றார்.
‘வேண்டாம், வேண்டாம். நான் ரஜினி மாதிரி’ என்றேன்.
‘அவரேகூட சினிமால நரைச்ச தலையோட வந்தா நீங்க ஏத்துப்பீங்களா?’ என்றார்.


‘சினிமால எப்படி வந்தாலும் நிஜ வாழ்க்கைல நரைச்ச முள்ளு தாடி, பாதி வழுக்கை ரேஞ்சில தைரியமா வராரே? அந்த மாதிரி யாரால முடியும்? கமலால முடியுமா?’ என்றேன்.


‘கமல், ரஜினி ரெண்டு பேருக்குமே நான் மேக்கப் போட்டிருக்கேன் சார்’ என்றார்.
‘ஓ, அப்படியா? அப்ப ஏன் சினிமாவ விட்டுட்டு இப்பிடி டிவிக்கு வந்திருக்கீங்க?’ என்றேன்.


‘சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.’


‘யாரோட எல்லாம் சினிமால வொர்க் பண்ணிருக்கீங்க?’
‘கமல், ரஜினி, விக்ரம், அஜித்னு தமிழ் ஹீரோக்கள் எல்லாரோடையும் வொர்க் பண்ணிட்டேன் சார். கமல்கிட்டேருந்துதான் வேலையே ஆரம்பம்.’



இந்த நடிகர்கள் எல்லாம் எப்படி?’
‘ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி சார். ஆனா அஜித் மாதிரி வராது சார்.’


‘ஏம்ப்பா அப்படிச் சொல்றே?’
‘அவர் ஒருத்தர்தான் சார் மனுஷனை மனுஷனா மதிக்கிறவர். மத்தவங்க மோசம்னு எல்லாம் சொல்லலை சார். ஆனா என்னவோ அஜித் ஒருத்தர மட்டும்தான் சார் இந்த மாதிரி நான் பார்த்திருக்கேன். அவர மாதிரி இன்னொருத்தர் இனிக் கிடைப்பாரான்னு தெரியலை சார். முந்தி ஜெனரேஷன்ல ஆக்டருங்க எப்படி இருந்தாங்கன்னு எனக்குத் தெரியாது சார். ஆனா இந்த ஜெனரேஷன்ல அஜித் மாதிரி ஒரு நல்ல மனிதர் யாருமே கிடையாதுன்னு சொல்வேன் சார்!’

ஹெப்படி அப்பா அவ்வளவு ஆழமாச் சொல்லறே? அப்படி என்ன பண்ணிருக்கார்?’


‘கூட வேலை செய்யற டெக்னீஷியன்ஸை மனுஷனா வேற யாரும் மதிச்சு நான் பார்த்ததில்லை சார். மங்காத்தா பட ஷூட்டிங் மொத நாள். இந்த ஃபால்ஸ் சீலிங் போடற போர்டை வெச்சு சுவர் மாதிரி அலங்காரம் பண்ணி, அதைத் தேச்சு தேச்சு, பொடி பொடியா உதிர்ந்து இருக்கும். அந்தப் பொடி அவர் மேல விழுந்து ஒரே அழுக்கா இருக்காரு ஆர்ட்ல செட் போடற ஒருத்தர். அஜித் அங்க உள்ள வந்து நேராப் போயி அந்த ஆளைத் தொட்டு, அப்படியே தன் கை அழுக்காறதையும் கவனிக்காம, கையைக் குலுக்கி நலம் விசாரிச்சாரு சார்.’


‘அது பெரிய விஷயமாப்பா?’
‘இல்ல சார். இங்க ஏர்போர்ட்டுக்கு முன்னாடி பழைய பின்னி மில்லுல ஷூட்டிங் சார். 14 நாள் நடந்துச்சு. சாப்பாடு சரியா இல்லை. மொத நாள் மோசமான சாப்பாடு. புரடக்‌ஷன்ல சரியாப் பாத்துக்கல. அடுத்த நாள் லைட் பாய்கிட்டப் பேசிக்கிட்டிருக்கறப்ப அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. உடனே அன்னிக்கு வீட்டுல மட்டன் பிரியாணிக்கு ரெடி பண்ணிக்கிட்டு வந்துட்டாரு. மட்டன் பீஸ் எல்லாம் வீட்டுலயே தயார் பண்ணிக் கொண்டுவந்துட்டாரு. அரிசி ஒரு கிலோ 190 ரூபாய் சார். அவரே சமையல் பண்ணாரு.’


‘என்னப்பா விளையாடற? அவரே சமையல் பண்ணாரா, இல்லை ஆளுகளை வெச்சு சமைச்சாரா?’
‘இல்லைங்க, அவரே சமையல். ஃப்ரீயா இருந்த டெனீஷியன்களைக் கூட்டு வெங்காயம், தக்காளி வெட்டித் தரச் சொன்னாரு. அவரே அரிசியை சோம்பு, பட்டை எல்லாம் போட்டு சமைச்சு, அப்புறம் மட்டனைச் சேர்த்து பிரியாணி செஞ்சாரு.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’
‘மொத நாள், எங்க யாருக்குமே பீஸ் கிடைக்கல சார். வெறும் சோறு மட்டும்தான். புரடக்‌ஷன்ல ஆளுங்க வந்து பீஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. டிஃபன் கேரியர்ல அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அதுவும் அவரோட காதுக்கு அடுத்த நாள் போயிருச்சு. ஒருத்தரக் கூப்பிட்டு பிரியாணி எப்படி இருந்துச்சுன்னு கேட்டாரு. அவர் வந்து, ‘நல்லா இருந்துச்சு சார், ஆனா பீஸ்தான் கிடைக்கல. எங்களுக்கு யாருக்குமே கிடைக்கலை’னு சொன்னாரு. அன்னிக்கு அவரே திரும்ப பிரியாணி பண்ணினதுமே, புரடக்‌ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு: ‘இன்னிக்கு டிஃபன் பாக்ஸ் கட்டற வேலை எல்லாம் கிடையாது. ஏ, பி, சி அப்பிடின்னு எந்த வித்தியாசமும் இல்லாம, எல்லாரும் இங்கியே உக்கார்ந்து சேர்ந்து சாப்பிடட்டும்.’ அன்னிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சதும் அவரேதான் சார் யூனிட்டுல உள்ள அத்தனை பேருக்கும் பிரியாணி செஞ்சு போடுவாரு. ஒவ்வொரு நாளும் டேஸ்டு அதிகமாகிக்கிட்டே போச்சு சார்.’


‘அப்புறம்?’
‘அப்புறம் ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் போனோம் சார். அங்க சமையல் செய்ய முடியாதுங்கறதுனால, அவரோட சொந்தக் காசுல, கிரீன் பாவர்ச்சின்னு ஒரு ஹோட்டல் சார். அதுலேர்ந்து அத்தனை பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பிரியாணிய நாலு பேர் சாப்பிடலாம். ஹைதராபாத்ல ஷூட்டிங் முடியறவரை அங்கேருந்துதான் சாப்பாடே.’


‘சாப்பாடு மட்டும்தானா?’
‘இல்ல சார். தீபாவளி சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் 3,000 ரூபாய்க்கு வெடி, ஆளுக்கு 500 ரூபாய் கேஷ் கொடுத்தாரு சார். அப்புறம் பொங்கல் சமயத்துல ஒவ்வொரு டெக்னீஷியனுக்கும் கால் பவுன் தங்கத்துல மோதிரம் வாங்கிப் போட்டாரு சார். வருஷப் பொறப்புக்கு…’ இப்படித் தொடர்ந்துகொண்டே போனார். கமல், ரஜினி போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவி செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால் அஜித் அளவுக்குத் தான் யாரையுமே பார்த்ததில்லை என்றார்.
செட்டில், உடல் நலம் சரியில்லாமல் யாரேனும் வேலைக்கு வரவில்லை என்றால் உடனே தன் மேனேஜரை அனுப்பி, என்ன விஷயம் என்று தெரிந்துகொண்டு, உடல் நலக் குறைவுக்கு ஏற்றார்போலப் பணம் அனுப்பிவைப்பாராம். கூட வேலை செய்வோரை அண்ணே என்றுதான் அழைப்பாராம்.
மேக்கப் கலைஞரின் குரல் தழுதழுத்தது.



பத்ரி சேசாத்ரி கிழக்கு பதிப்பக உரிமையாளர் ( நன்றி -அஜித் ரசிகர் இணையம் )

Sunday, October 30, 2011

விசித்திரமாகிப்போன சரித்திரம்



'சரித்திரம் விசித்திரங்களால் ஆனது அல்லது விசித்திரங்கள் நிறைந்தது தான் சரித்திரம் வெற்றியாளணினால் சரித்திரம் எழுதப்படுவதும் தோல்வியடைந்தவனின் விம்பம் அதில் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவதும் சரித்திரத்தின் விசித்திரம்தான். நாளை நிகழ்கால நல்லவர்களை அது கெட்டவர்களாக காட்டும் நிகழ்கால கெட்டவர்களை வீர தீர சாகசம் புரிந்தவனாக சரித்திர விம்பம் காட்டலாம் எல்லாமே வெற்றியின் கைகளில் உள்ளது. அல்லது சரித்திரத்தின் விம்பத்தை நிர்ணயிக்கும் சக்தி வெற்றிதான் '

கடாபி .......

கடந்த ஒரு வாரம் முழுவதும் உலகின் மூலைமுடுக்கெங்கும் உச்சரிக்கப்பட்ட அழுத்தமான பெயர் ஒரு சிலருக்கு கடாபி ஒரு கடுமையான புரட்சியாளன் ஒரு போராளி மேற்கின் நவகாலனித்துவ சக்திகளுக்கு எதிராக உரத்த தொனியில் எதிர்ப்பை காட்டியவர் லிபியாவை செல்வந்தனாக்கியவர் லிபிய தேசத்தை சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியவர் ஆரம்பத்தில் லிபியாவின் 'ச்சே குவேரா' என்று அழைக்கப்பட்டவர் உலக முஸ்லிம் இளைஞர்களின் 'ஹீரோவாக' போற்றப்பட்டவர் ஒரு சமயம் மத்தி
ய கிழக்கையும் மறு சமயம் ஆப்பிரிக்காவையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர முயன்ற 'மண்ணை தான் சார்ந்த இனத்தை'நேசித்த ஒரு தலைவன்

ஒரு சிலருக்கு அவர் ஒரு மோசமான சர்வாதிகாரி தானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு பிடிவாதக்காரன் தன்னை பற்றி அதீத நம்பிக்கை கொண்ட ஒரு கற்பனா வாதி வெகு சிலருக்கு அவர் ஒரு பயங்கர வாதி சர்வ அதிகாரங்களையும் கொண்டதனால் அத்து மீறல்களை தாராளமாய் செய்த ஒரு சுயநல வாதி

இப்படி கடாபி நல்லவரா கெட்டவரா? என்று யாராவது கேட்டால் நாயகன் பாணியில் 'தெரியலம்மா' என்றுதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது நாற்பது வருடங்கள் பின்னோக்கி சென்றால் லிபியாவின் ஒரு ஆட்சியாளனை எதிர்த்து ரத்தம் சிந்தா இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியை தன் கைக்குள் கொண்டு வந்த அந்த இளைஞன் ஒரு சாதாரண 'பழங்குடி இனத்தை சேந்தவன்'

வசீகரிக்கும் தோற்றம் கொண்ட அவனுக்கு வயது வெறும் இருபத்தேளே ஆனபோது உலகின் அனைத்து மூலையின் பார்வையையும் தன் வசப்படுத்தி ஆச்சர்ய படுத்தினான் தன்னை கேர்ணலாக தானே பதவி உயர்த்திக்கொண்டு ஆட்சியில் அமர்ந்த போது லிபிய மக்கள் அவனைஒரு மாவீரனாகவே பார்த்தனர் லிபியாவின் விடுதலைக்கான சரியான வழிகாட்டி அவன்தான் என பரி பூரணமாய் நம்பினர் மேற்குலகம் லிபிய என்னை வளங்களை சூறையாடுகிறது அவை லிபிய மக்களின் சொத்து என முழங்கிய பொது அவன் லிபிய மக்களின் 'ச்சே குவேராவாக' போற்றப்படுகிறான்

முழங்கியதோடு நின்றுவிடாமல் மேற்கு சூறையாடும் என்னை வள வருமானங்களை லிபியாவிட்குள்ளேயே முடக்கி லிபிய மக்களுக்கான பல நல திட்டங்களையும் உருவாக்கி வெற்றி கண்டான் என்னை வள வருமானங்கள் மக்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டு லிபியாவின் தனி நபர் வருமானத்தையும் உயர்த்திய போது அவன் ஒரு சிறந்த தலைவனாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டான் கடாபியின் அடுத்தடுத்த செயற்பாடுகளும் மக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டன இந்த அங்கீகாரமே கடாபிக்கு தான் செய்வதனைத்தும் சரி என்ற மமதையை கொடுத்திருக்கலாம்



அடிப்படையில் ஆழமான கல்வியறிவு கடாபிக்கு இருந்ததாக தெரியவில்லை அதுவே தனக்கான ஒரு அரசியல் சித்தாந்தத்தை கடாபி உருவாக்க காரணமாய் அமைந்தது இந்த அரசியல் சித்தாந்தமே பல சுவாரஸ்யங்களை கொண்டது 'கிரீன் புக'; என்ற பெயர் கொண்ட நூல் வடிவில் அந்த சித்தாந்தத்தை கீறினார் கடாபி பல்வேறு பழங்குடி இனக்குழுக்களை கொண்ட லிபியா என்னும் அகண்ட தேசத்தை ஆழ அந்த சித்தாந்தம் கிட்டத்தட்ட சரியானதுதான் ஜனநாயகத்தையே சர்வாதிகாரமாக சித்தரிக்கும் கடாபி மக்கள் குழுக்கள் மூலம் மக்களை கட்டுப்படுத்துவதும் மத்திய குழு மூலம் நாடு ஆளப்படுவதும் கடாபியின் பச்சை புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் ஆனால் இது நடைமுறைக்கு வந்ததன்

பின்னர்தான் கடாபியின் சுய ரூபம் மக்களுக்கு புலப்பட்டது மத்திய மக்கள் குழுவை மக்கள் காங்கிரசாக சித்தரித்த கடாபி முழு ஆட்சி அதிகாரத்தையும் தனக்கே உரித்தாக்கினார் லிபியாவின் பல்வேறு பட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் கொண்ட தலமைப்பதவிகளுக்கு தமது உறவுகள் பிள்ளைகளை நியமித்தார் லிபிய மக்களிடம் இருந்து கடாபி விலகி செல்ல ஆரம்பித்தது இந்த சமயத்தில் தான் மட்டுமல்லாமல் என்னை வளங்கள் மூலம் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் பில்லியன் கணக்கான சொத்துக்களையும் சேர்க்க ஆரம்பித்தார்

அமெரிக்காவை நேரடியாக பகைத்துக்கொண்ட தலைவர்களில் கடாபிக்கு தனி பங்கு உண்டு எண்பதுகளில் அமெரிக்க ஜனாதிபதிகளுள் ஒருவர் கடாபியை 'மத்தியகிழக்கின் பைத்தியகார நாய்' என்று அநாகரீகமாக திட்டியதிளிருந்தே தெரியும் கடாபி மீது அமரிக்காவின் விரோதம் கடாபியும் அமெரிக்காவுக்கு எதிராக சும்மா இருந்து விடவில்லை எந்த மூலையில் அமெரிக்காவுக்கு எதிராக எந்த குழு போராடினாலும் அங்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்தார் அவர் மட்டுமல்லாமல் கடாபியின் ஆதரவு குழுக்களும் அமெரிக்காவுக்கு எதிராக போராடும் குழுக்களுக்கு உதவி செய்தன

கடாபி பொது நலனுக்காக போராடுவது போன்று தம்மை சித்தரித்தாலும் ஆழத்தில் அதில் கடாபியின் சுய நலம் மிகுந்திருக்கிறது ஆப்பிரிக்காவை ஒன்றிணைத்து அதன் மூலம் உலகை வெல்ல அவர் கனவு கண்டார் ஆரம்பத்தில் லிபியாவை மத்திய கிழக்கு நாடாக கூறிக்கொண்டிருந்த கடாபி பின்னாளில் அதை ஆப்பிரிக்க நாடாக கூறிக்கொண்டார் இதன் மூலம் ஐக்கிய ஆபிரிக்க என்ற கோட்பாட்டை உருவாக்கி அதிலும் தலைமையை தமக்கு எதிர்பார்த்திருந்தார் கடாபி


என்னதான் தான் ஒரு போராளியாக மக்களிடம் தம்மை சித்தரிக்க கடாபி முயன்றாலும் அடிப்படையில் அவர் தம் பதவி புகழ் உயிர் பாதுகாப்பில் எப்போதும் கவனமாய் இருந்திருக்கிறார் சதாம் {ஹசைன் பிடிபட்ட பின் தம் மேற்குலக நகர்வுகளில் சில தளர்ச்சியான போக்குகளை காட்ட ஆரம்பித்ததை சொல்லலாம் இது முழுக்க முழுக்க தமது பாதுகாப்புக்காகவே கடாபியினால் மேட்கொள்ளப்பட்டது பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் இவரின் உற்ற நண்பன் ஆனார் அமெரிக்கவுடனும் நல்லிணக்கத்தை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திகொண்டார் இவையனைத்தும் தம் உயிர் மற்றும் பதவி மீது அவர் வைத்திருந்த பயத்தினாலேயே மேட்கொள்ளப்பட்டது

சுற்றியிருப்பவர்களின் பார்வை எப்போதும் தம்பக்கமே இருக்க வேண்டும் என்பது காடாபிக்கு அவசியமான ஒன்று இதற்காக தம் சொந்த பிள்ளைகளை கூட புகழின் உச்சிக்கு செல்ல விட மாட்டார் அதே சமயம் தம்மை சுற்றி நம்பிக்கையானவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே கன்னிப்பெண்களை மெய்ப்பாதுகாப்பிட்காய் அமர்த்தியிருந்தார் ( அவர்கள் கடாபியினாலும் அவர் பிள்ளைகளாலும் பாலியல் ரீதியில் பயன் படுத்தப்பட்டார்கள் என்று தற்போது கூறப்படுகிறது ) தன் உடல் சுகாதாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பார் கடாபி இதற்க்கும் உக்ரெயினில் இருந்த பெண் தாதியர்களை கொண்டு வந்து அருகில் வைத்திருந்தார் இவரை சூழ எப்போதும் அழகான பெண்கள் கூட்டம் இருக்கும் அது இவருக்கு ரொம்ப பிடித்த ஒன்று ஆனால் அதை மட்டுமே வைத்துக்கொண்டு கடாபியை சபலபுத்திகாரர் என்று எடை போட முடியாது , பழைய கேசட்டுக்களில் அரேபிய பாடல்களை கேட்பது கடாபிக்கு ரொம்ப பிடிக்கும் தம் மீது நோய்கள் அண்டி விடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருப்பார் இதற்காக கடாபி அருகில் செல்பவர்கள் கூட பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டனர்

அடிப்படயில் பழங்குடி நாடோடி இனத்தவர் என்பதால் தம் அரண்மனைக்கு வெளியே எப்போதும் இவர் தங்குவதற்கான கூடாரம் அமைக்கபட்டிருக்கும் அதிலும் வெளியிடங்களுக்கு சென்றால் கூடாரத்தில் தங்குவதை கட்டாய வழக்காக கொண்டிருந்தார் கடாபி

எல்லா வகையிலும் ராஜ சுகங்களை அனுபவித்த கடாபி தன்னை சுற்றி தன் தேசத்துக்குள் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மட்டும் கடைசி காலத்தில் சரியாக மதிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதுதான் உண்மை நாற்பதாண்டு கால ராஜ வாழ்க்கை என்பதால் தாம் செய்யும் அனைத்திலும் அவர் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வாய்ப்பிருக்கின்றது தம்மை ஒருபோதும் அழித்து விட முடியாது என்று பலமாக நம்பினார் அவர் அந்த நம்பிக்கையே அவரை ஒரு துர் மரணத்திற்கு சொந்த காரனாக்கியுள்ளது

மேற்;கு உலகத்திற்க்கு கடாபியை வீழ்த்த ஒரு சரியான தருணம் மட்டுமே தேவைப்பட்டது டுனீசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி அலை எகிப்தை தாக்கியது இதை லிபியாவை தாக்க வைத்தது மேற்கின் சூழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அந்த புரட்சி அலையின் சத்தம் கேட்க்க ஆரம்பித்த உடனேயே லிபியாவில் தமக்கான செல்வாக்கை பற்றியும் மாறிவந்துள்ள உலக ஒழுங்கியலை பற்றியும் கடாபி மதிப்பீடு செய்திருந்தால் இந்த நிலை இன்று அவருக்கு வந்திருக்காது தன் மீது கொண்ட அதீத நம்பிக்கை அவரை துரத்தி துரத்தி கொலை செய்திருக்கிறது

கடாபியின் வாழ்க்கை நல்லது கெட்டது இரண்டும் கலந்தது என்றாலும் அவர் மரணித்த விதம் மனித நேயத்தை கேவலத்துக்குல்லாகும் விதத்தில் அமைந்திருந்ததை மறுக்க முடியாது அவரை நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தமக்குரிய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள புரட்சி படைக்கு கிடைத்த வாய்ப்பை புரட்சிப்படை இழந்து விட்டது மட்டுமல்லாமல் கடாபி இல்லாத லிபியா எப்படி அமையபோகிறது என்ற கேள்வி இங்கு முக்கியம் பல்வேறு இஸ்லாமிய இன குழுமங்களை கொண்ட லிபிய தேசம் அதிகாரத்துக்கான போட்டியில் இப்போது முண்டியடிப்பது தெரிகிறது சில கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் ஆனால் மாறி வரும் உலகியல் ஒழுங்குகளுக்கு தம்மை உட்படுத்தி தளர்த்தி செல்லாத எந்த தனி மனிதனோ அல்லது தலைவனோ கடைசியில் இப்படித்தான் தனிமை படுத்தப்படுவான் என்ற அழுத்தமான செய்தியை கடாபி உலகத்திக்கு சொல்லியிருக்கிறார் இனி பல சந்ததிகளுக்கு கடாபி ஒரு கொடுங்கோலனாக மட்டுமே சித்தரிக்கப்படுவார் என்பது மட்டும் கொஞ்சம் வேதனைதான் காரணம் கடாபி சரித்திரத்தையும் வெற்றியாளர்கள் தான் எழுதப்போகிறார்கள்

Wednesday, October 26, 2011

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்




அளவா சிரிக்கிற அஞ்சலி.
பட படக்குற அனன்யா.,
எங்க ஊரு பையன் ஜெய்.,
கடைசி நிமிடம் கலங்க வைக்கும் சர்வானந்.,
நெஞ்சை அவ்வப்போது கீரிப்போடும் சத்யாவின் இசை.,
பழனி மலை , விதி ஓட்டிச்செல்லும் பஸ்.,
பஸ்சுடன் பயணிக்கும் இசைஞானி பாடல்.,
காதல் சிட்டுக்கள்.,
தொடங்க முதல் முடியும் காதல்.,
உடைந்த பஸ் இன் வெற்றி கோப்பை.,
கடைசி நிமிட அமைதி மரண படுக்கையில் சொல்லப்படும் காதல்.,
மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்.,
திரும்ப வருமா என ஏங்க வைக்கும் நொடிகள்.,
அறுந்து அறுந்து போகும் உயிர்கள்.,
இப்போதும் காலை கண் விழித்ததும் வெறுமை படுத்தும் அந்த முடிவு.,
டைரக்டர் சரவணன் (இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்).,

Thursday, September 15, 2011

மங்காத்தா (லாஜிக் இல்லா மேஜிக் )

மாப்பிள்ளை மாதிரி மொக்க படத்தையே மனசாட்சியில்லாமல் விளம்பரப்படுத்தி ஓட்டு ஓட்டு என்று ஓட்டும் சன் பிச்சர்ஸ் காரர்களின் கையில் மங்காத்தா மாதிரி மாஸ் படம் கிடைத்தால் சும்மாவா சென்னையில் மட்டும் படம் வந்து ஒரே வாரத்தில் முப்பது கோடி வசூல் ......


எல்லோருக்கும் தெரியும் அஜித்தின் ஐம்பதாவது படம் இது ஏற்கனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தல என்ற செல்ல பெயர் தமிழ் நாடு முழுவதும் இயங்கி வந்த முப்பத்தெட்டாயிரம் ரசிகர் மன்றங்கள் / நற்பணி மன்றங்கள் அத்தனையும் அஜித் கலைத்து கைவிட்ட பிறகு இந்த படம் என்ன கதியாகுமோ என்று பலரும் உச்சு கொட்ட , நரை முடியுடன் கொடூர வில்லத்தனத்துடன் படத்தை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக்கியிருக்கிறார் தல .. காட்சிக்கு காட்சி பார்வையிலேயே பேசும் வித்தை அஜித்துக்கே உரியது மனுஷன் அநியாயத்துக்கு அழகு கை தட்டல்களை ஏகத்துக்கு வாங்கி குவிக்கிறார் அஜித் வரலாறில் ஐம்பது படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள திரைப்படம் இது அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் தல தொடரட்டும் தல பயணம்


பி. கு - ஒரு சின்ன குறை ஐம்பதாவது படத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்

Wednesday, September 7, 2011

யாழ் பயணம் ......

யாழ்பாணத்தில் என்னை பார்க்க ஒரு மாற்று திறநாளி வந்திருந்தார் அவரையும் அவர் குரலையும் நான் கவிராத்திரி நிகழ்ச்சியில் பல முறை கேட்டிருக்கிறேன் உணர்வுகள் பொங்கும் அவர் வரிகளை என்னை மறந்து அனுபவிப்பேன் அவர் என்னை நேரில் பார்க்க வந்தபோதுதான் அவர் ஒரு மாற்று திறநாளி என்பதே எனக்கு தெரியும் ! அவர் என்னிடம் எத்தனையோ வானொலிகளில் நான் கவிதை சொல்லியிருக்கிறேன் ஆனால் நீங்கள் தந்த அங்கீகாரம் எனக்கு யாருமே தந்ததில்லை ,உங்க வார்த்தைகள இரவுல கேட்கும்போது என் அத்தனை கவலைகளும் எங்க போகுதுனே தெரியல நீ நல்ல இருக்கனும்பா என்று என் கையை இருகப்பிடித்துக்கொண்டார் இவ்வளவு தூரம் வந்ததே உங்களிடம் இதை சொல்லத்தான் என்று சொல்லிவிட்டு கையில் கொண்டுவந்திருந்த சில இனிப்புகளையும் கொடுத்துவிட்டு தன் வழியே போக ஆரம்பித்தார் அவர் அப்பாவித்தனமான அன்பு தெரிந்த அந்த கண்ணில் என் இரண்டு வருட உழைப்பின் உண்மை பெறுமதியை நான் அப்போதுதான் உணர்ந்தேன்
நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் அவமானங்களும்
அப்படியே கரைந்து போனது , இதற்காகத்தானே அத்தனை உழைப்பு ? உண்மையில் எனக்கான உண்மை அளவீடும் இப்படியான உண்மை மனிதர்களிடம்தான் இருக்கிறது என்பதை சரியாக உணர்ந்த பொழுது அவர் என் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்... !

நிற்க ......

யாழ் பயணம் வெகு சிறப்பாக இருந்தது நீண்ட நாட்கள் பார்க்க ஆசைப்பட்ட மண் அது உணர்வுக்கொப்பளிப்புகளுக்கு அளவே கிடையாது சக்தி கலையகம் நல்லூரில் இருந்தாலும் நான் நல்லூரிலும் கலையகத்திலும் இருந்தது என்னவோ ரொம்ப குறைவான நேரம் தான் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு வெளியிலேயே செலவு செய்தேன் அத்தனையும் ரசித்தேன் என்பதை விட ருசித்தேன் என்றால் தவறில்லை ( இனியொரு முறை யாழ் பயணம் சாத்தியப்படாது என்ற உணர்வு மேலோங்கி இருந்ததால் இந்த பயணத்தை அங்குலம் அங்குலமாக அனுபவித்தேன் ) எல்லாம் தவிர்த்து யாழ் பயணம் சிந்தனை ரீதியான பல மாற்றங்களை எனக்குள் ஏட்படுத்தியிருக்கிறது பழகும் பலரின் நிஜ முகங்களை
கூட என்னால் யாழ் பயணத்தில்தான் தெரிந்து கொள்ள முடிந்தது பல ஊர்களுக்கு சென்று வீடு வீடாக நாம் நம் துறை அது தொடர்பாக மக்கள் சம காலத்தில் என்ன பார்வையை செலுத்துகிறார்கள் என்று பலதும் தெரிந்து கொள்ளக்கூடியாதாக இருந்தது (மக்கள் ரசனையில் எத்தனை மாற்றங்கள் வந்துவிட்டது ?)


வவுனியா கிளிநொச்சியை தாண்டும் போது உணர்வில் ஏற்பட்ட விசித்திரங்கள் எனக்கு புதுமையானவை , இதற்கு முன் எங்கும் எப்போதும் அறிந்திராத உணர்வு அது கிளிநொச்சியில் சில நேரம் என்னை அறியாமலே கண்கள் காரணம் இல்லாமல் ? கலங்கியது அந்த மண்ணை கூட பத்திராமாக கொண்டு வந்து என் வீட்டில் வைத்திருக்கிறேன் யாழ்பாணத்தில் எங்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு இது வரை அல்லது இனிமேல் வேறு ஒரு வானொலிக்கு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது .. அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றிகள் தனிப்பட்ட என் வானொலி நிகழ்சிகளுக்கு விமர்சனங்களை சொன்ன , எனக்காக பரிசுகளை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 12, 2011

எண்ணெய் மனிதர்களின் நடமாட்டம்


தலை தூக்கியிருக்கும் எண்ணெய் மனிதன் விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் சூடு பிடிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை இந்த எண்ணெய் மனிதன் விவகாரம் எனக்கு ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ தரவில்லை காரணம் சில நாட்களுக்கு முன் மலேசியா வின் பிரபல இணைய சஞ்சிகையான வணக்கம் மலேசியாவில் இதே போன்றதொரு செய்தி படித்திருந்தேன் ( இப்போதும் அந்த சஞ்சிகையில் இது தொடர்பான செய்தி இருக்கிறது ) இது எதோ அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதில் பின்னணி காரணவாதிகள் நினைத்தது பிசுபிசுத்துவிட்டது மட்டும் நிம்மதி காரணம் இப்போது மக்களிடம் வர குறித்த ஆசாமிகளே பயம் கொள்ளும் அளவிற்கு மக்கள் நையப்புடைக்கின்றனர் .,

இந்த மலேசியா எண்ணெய் மனிதர்களின் அறிய சேவைகளுக்கும் இலங்கையின் எண்ணெய் மனிதர்கள் செய்யும் சேவைகளுக்கும் பாரிய வித்யாசம் இல்லை
1 ) பெண்களை குறி வைத்தல்
2 ) பயமுறுத்தும் விதத்தில் ஆங்காங்கே அசையாமல் நிற்றல்
3 ) உடலை கீறிவிட்டு ஓடுதல்
4 ) நான்காவதும் , முக்கியமானது மலேசியாவில் போலவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்துவது ( அது எப்புடி ?)

இன்று மாலை வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் இந்த பிரச்சினையினால் சில உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன , மலையகத்தை பொருத்தவரைக்கும் இப்போது கொஞ்சம் பிரச்சினை அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது

T.V .க்கு போயிட்டோம்ல ?

என் கடந்த பதிவு ஐம்பதாவது பதிவு அதுவே இப்போதுதான் நிணைவுக்கு வந்தது அது ஒருபுறம் இருக்க ஆகஸ்ட்டு மாதம் முதலாம் (2011/08/01) திகதி ஊடகத்துறையின் இன்னொரு பரிமாணத்துக்குள் உள்வாங்கப்பட்டேன் இதுவரை குரலில் மட்டுமே வித்தை காட்ட கிடைத்த எனக்கு காட்சி ஊடகத்திலும் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதிலும் சக்தி டி வீ யில் இந்த அறிமுகம் இலகுவில் கிடைக்கமுடியாத ஒன்று காலை நேர நிகழ்ச்சியான good morning srilanka வில் முகத்தை எல்லோரும் கதற கதற காட்டிவிட்டேன் நீண்டகால கனவு என்பதால் இந்த வாய்ப்பையும் இறுகப்பிடித்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது இந்த வாய்ப்பை எனக்கு வழங்க பலவாறு முயற்சி செய்த கஜமுகன் அண்ணாவிற்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன் ! (ஆனாலும் கஜமுகன் அண்ணாவுக்கு தைரியம் ரொம்ப அதிகம்தான் என்னையெல்லாம் தொலைக்காட்சில காட்ட ஒரு தைரியம் வேணும் இல்ல ???)...ஆனாலும் ஒரு சின்ன கவலை அப்பா இருந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பார் ஹ்ம்ம்ம் ...............

Monday, August 1, 2011

"கலைக்காவலன்A. இராஜ்மோகன்"


"கலைக்காவலன் A.இராஜ்மோகன்"( பகுதி -1)

தனி ஒரு மனிதனை உயர்த்திப்பிடிக்கும் என் இன்னுமொரு பதிவு இப்படியான பதிவுகளை படிக்கும் போது வயிறு மற்றும் இதர உறுப்புகளில் எரிச்சல் ஏற்படும் என்று கருதுபவர்கள் இப்போதே வேறு பதிவுக்கு செல்வது உசிதம் ( அவ்வாறான எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல )

இன்றைய தேதிக்கு இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு முன்னணி வானொலிக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது சில நேரங்களில் அந்த அடையாளம் ஒரு அறிவிப்பாளராகவும் இருக்கிறது வெற்றியை பொருத்தமட்டில் லோஷன் அண்ணா அதன் அடையாளம் (வெற்றி என்றால் லோஷன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு ) , சூரியனை பொருத்தமட்டில் அங்கும் இருவர் அடையாளமாக இருக்கின்றனர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை )



மதிப்பிற்குரிய திரு . A.R.V லோசன் அவர்கள்


நான் சார்ந்த சக்தியை பொருத்தமட்டில் கடந்த ஒரு தசாப்த காலமாக பலரை தன் அடயாளமாக சுமந்திருக்கிறது அப்படி அடயாளமாக இருந்த பலர் வானொலிகளுக்கே புது வடிவம் கொடுத்தனர் என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது எழில் வேந்தன் அவர்களின் காலம் , இறுக்கமான அதே நேரம் அழகிய சரளமான தமிழில் ஒரு வானொலியாய் சக்தி வளம் வந்தது , அபர்ணாவின் வருகையை தொடர்ந்து இன்னும் இலகு தமிழில் சக்தி பட்டி தொட்டியெங்கும் கலக்கியது ( பாமரர்களுக்கும் சராசரி தோட்ட தொழிலாளர்களிடமும் சக்தியை அடையாளப்படுத்திய பெருமை அபர்ணா அண்ணாவையே சாரும் )


மதிப்பிற்குரிய திரு . R.P.அபர்ணா சுதன் அவர்கள்


அவருக்கு பிற்பட்ட காலத்தில் எந்த வடிவ மாற்றமும் இல்லாமல் ஒரே வடிவில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை தாக்கத்தை ஏட்படுத்தியிருந்தார் தமிழகத்தில் இருந்து வந்த மாயா இலகு தமிழில் அவர் காட்டும் வார்த்தை ஜாலங்களை ரசிக்காத வானொலி பிரியர்களே இல்லை என்று கூட சொல்லலாம் அவர் சக்தியில் இருந்த நாட்களில் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அணைத்து வகுப்பினரையும் உள்ளடக்கியது , படித்தவர் முதல் பள்ளிக்கூடமே செல்லாதவர்களை கூட வார்த்தைகளால் கட்டிப்போடும் ஒரு அற்புதமான கலைஞனாக விளங்கினார்


மதிப்பிற்குரிய திரு. மாயா அவர்கள்


... இப்படி அவர் காலத்தினை தாண்டிப்பார்த்தால் மறுக்க முடியாத , தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாய் தன்னை வளர்துகொண்டவர்தான் இந்த ராஜ்மோகன் ( இந்த பதிவின் கதாநாயகன் )

"ராஜ்மோகனும் சக்தியும்,ஓரமாய் நானும்"


மதிப்பிற்குரிய திரு . இராஜ்மோகன் அவர்கள்


எப்படி சக்திக்குள் வந்தார் யார் மூலம் வந்தார் என்பதெல்லாம் கிடக்கட்டும் ஆனால் ராஜ் அவர்களின் வருகையை தொடர்ந்து சக்தி ஒரு புதுமையான பரிமாணத்தை தொட்டது (அதை நான் வானொலி ரசிகனாய் உணர்ந்தேன் ) தமிழில் வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கொட்டும் இவருக்கு இலங்கை முழுவதும் ரசிகர்கள் ( நேயர் என்ற பதத்திற்கு பதில் இங்கு ரசிகன் என்ற பதத்தை பயன்படுத்துவதில் ஒரு நோக்கம் உண்டு சராசரி அறிவிப்பாளர்கள் எல்லோருக்குமே நேயர்கள் உண்டு ஆனால் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்கள் உண்டு யார் யாருக்கு என்பதை மேல் பந்திகளில் புரிந்து கொள்ளலாம் ) வானொலி விளம்பரங்களில் ( treilors) எமது வானொலிக்கென தனி ஒரு அடையாளத்தை ஏட்படுத்திக்கொடுத்தவர் ராஜ் , வானொலி ரசிகன் ஒருவன் என்ன எதிர் பார்ப்பான் அதை அப்படியே கொடுக்காமல் அவன் ஆச்சர்யப்படும் வகையில் கொடுக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு

இன்றைய திகதிக்கு சக்தியில் ஒலிபரப்பாகும் பல நிகழ்சிகளின் வடிவத்திற்கு இவர்தான் உரிமையாளர் ! இவரின் ஆளுமையால்
வானொலி நாடகங்கள் என்றுமில்லாத அளவு வீரியம் பெற்றன வந்திய தேவனை பற்றி பலகலைக்கழக கருத்தரங்குகளில் பேசப்பட்டது , வாராந்தரிகளில் முன்னணி நாளேடுகளில் பெருமையாக பேசப்பட்டது துணிந்து யாரும் தொடாத வந்திய தேவனை பெரும் செலவில் எமது வானொலியால் தயாரிக்கப்பட்டது அதை மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாக்கினார் ராஜ் , அதிகம் பயன்பட்ட , பயன்படாத , நம் நாட்டு தங்கங்களை ஒன்று திரட்டி தேடி தேடி வாய்ப்பு கொடுத்தார் , பிரபல நடிகர் கே. எஸ் . சந்திர சேகர் , ஜப்பு நாசீர், முது பெரும் நடிகர் ராஜா கணேஷன் , மகேஸ்வரி அம்மா , சில்மியா ஹாதி , புர்க்கான் பீ இப்திகார் , இளைய அறிமுகம் சஞ்சூபன் , அறிமுகம் தேவையில்லாத அசோக் பரன் , நிரோஜி, சம்ரத் , பிரகாஷ் , சில நேரங்களில் நான் என்று அத்தனை திறமைகளையும் லாவகமாக பயன்படுத்தி பல வெற்றிப்படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் , நெகிழ்வான ஒரு உண்மையும் உண்டு மறைந்த அமரர் சகல கலா வல்லவன் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் நாடகம் ஒன்றுக்கு கடைசியாக குரல் கொடுத்தது இவருக்காகத்தான் ( வந்திய தேவன் படைப்பில் )


வந்திய தேவன் கதை வசனக்கோர்வை

மணித்தியாலத்திட்கு ஒரு தடவை வரும் நகைச்சுவை பகுதிகள் இவர் காலத்தில் புது வடிவம் பெற்றது . . . அது வரை நகைச்சுவை என்ற பெயரில் இருந் நிமிடக்கனக்கான அலட்டல்களை இருபது செக்கண்களுக்குள் அடக்கி சிரிக்க வைத்தார் , இவரின் குபேரன் பட்டி தொட்டி எங்கும் ராஜ நடை போட்டது குழந்தைகளின் செல் பொம்மை ஆனான் குபேரன் , தந்திரன் இளையவர்களை கொள்ளையடித்தான் ,
அண்டா புளுகன் ஆகாச புளுகன் என்ற நிகழ்ச்சி வெறும் பதினைந்தே செக்கன்கள் நீடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஆனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கண்டது இப்படி எல்லாவற்றிலும் புதுமை எதிலும் புதுமையல் புகுத்தும் வல்லமை ராஜ்கே உரியது

இன்றைய திகதியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் அரேபிய இரவுகள் , மகா லக்ஷ்மி , தக்காளி தியட்டர் ,என்று அத்தனை படைப்புகளும் இவரின் இயக்கத்திலேயே சென்று கொண்டிருக்கிறது தக்காளி தியட்டர் வானொலிகளுக்கே புதிய வடிவம் , ( லொள்ளு சபாவின் பிரதி என்றாலும் வியாபாரத்தை மையநோக்காக கொண்ட வானொலி நிகழ்ச்சி என்ற வரம்பு மீறாமல் மாற்றி அமைத்துக்கொடுத்தவர் ராஜ் ). .. இவ் அனைத்து படைப்புகளிலும் பிரஷாந்த் ,ஹோசியா . சதீசன் , ரஜீவன் , அவ்வப்போது நான் என்று பல உதவி இயக்குனர்களையும் உருவாக்கினவர் இந்த ராஜ் மோகன்

இவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததின் உந்துதலால் அல்லது அது தந்த நம்பிக்கையினால் நான் உருவாக்கிய சுழியம் என்ற மர்ம விவரண நிகழ்ச்சி சக்தியின் மெகா ஹிட் நிகழ்ச்சி ! கொழும்பு தமிழ் சங்கத்தில் இவரின் குரலில் தமிழ் ஒலிக்காத வார இறுதிகளே இல்லை என்றளவில் இருக்கிறது நிகழ்காலம் ...... இப்படி இலங்கையில் ஒரு வானொலி அறிவிப்பாளன் படைப்பாளன் பெற வேண்டிய அதி உச்சத்தை தொட்டு சத்தமில்லாமல் வாழும் ஒரு அற்புதமான மனிதன் ( (இவையனைத்தும் அவரோடு பணி புரிந்தபோது நான் நேரடியாக கண்டவை சில விடயங்கள் குறிப்பிட தவறியும் இருக்கலாம் )


தொடரும் ................

Saturday, July 9, 2011

தெற்கு சூடான் விடுதலை



"50 வருடகால போராட்டத்தின் முடிவில் கருப்பு தேசம் ஒன்றிற்கு வைர விடுதலை இருபது லட்சம் ஆத்மாக்களை காவுகொண்ட குழல் துப்பாக்கி அரக்கர்களாலும் கேவலமான சித்திரவதை கூடங்களாலும் தடுக்க முடியாமல் போன நியாயத்தின் வெற்றி ! புதிய தேசத்திற்கு தமிழனாய் வாழ்த்துகிறேன் !

Tuesday, July 5, 2011

"தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே "



ஆவணப்படம் பார்த்து அதிர்ந்த பலரில் நானும் ஒருவன் , பாதிக்கு மேல் உடல் நடுக்கம் எடுக்கவே நிறுத்திவிட்டேன் (நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல்தான் ) மறுநாள் வெற்றியின் லோஷன் அண்ணாவின் பதிவில் ஆவணப்படம் பார்த்த அவரின் உணர்வை கவிதையாக தீட்டியிருந்தார் , அதுவும் அதன் பங்குக்கு என் சட்டையை பிடித்து கேள்வி கேட்க எல்லாமே நாம் வாழும் காலத்தில் தானே நடந்திருக்கிறது என்றால் நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல் தானே ?, கையாலாகாத பேடிப்பயல்தானே ? அனால் ஒன்று மட்டும் உண்மை இரண்டாயிரம் வருடங்கள் மூத்தகுடியின் அடக்கப்பட்ட ஓசையை பறை ஓசை சாற்றுவது போல் இனி என் தமிழனுக்கு இப்பேற்பட்ட அவலம் எந்த யுகத்திலும் வராது என்றளவுக்கு அந்த காட்சிகள் எங்கள் அழு ஓலங்களை உலகம் முழுக்க சத்தமிட்டிருக்கிறது !

இதற்கு மேல் இதை பற்றி பேசும் எழுதும் தைரியம் இருந்தால் நான் ஏன் காட்சிகளை பாதியிலேயே நிறுத்த போகிறேன் ?
Copyright © 2014 நட்சத்திரவீதியில்