Friday, August 12, 2011

எண்ணெய் மனிதர்களின் நடமாட்டம்


தலை தூக்கியிருக்கும் எண்ணெய் மனிதன் விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் சூடு பிடிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை இந்த எண்ணெய் மனிதன் விவகாரம் எனக்கு ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ தரவில்லை காரணம் சில நாட்களுக்கு முன் மலேசியா வின் பிரபல இணைய சஞ்சிகையான வணக்கம் மலேசியாவில் இதே போன்றதொரு செய்தி படித்திருந்தேன் ( இப்போதும் அந்த சஞ்சிகையில் இது தொடர்பான செய்தி இருக்கிறது ) இது எதோ அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதில் பின்னணி காரணவாதிகள் நினைத்தது பிசுபிசுத்துவிட்டது மட்டும் நிம்மதி காரணம் இப்போது மக்களிடம் வர குறித்த ஆசாமிகளே பயம் கொள்ளும் அளவிற்கு மக்கள் நையப்புடைக்கின்றனர் .,

இந்த மலேசியா எண்ணெய் மனிதர்களின் அறிய சேவைகளுக்கும் இலங்கையின் எண்ணெய் மனிதர்கள் செய்யும் சேவைகளுக்கும் பாரிய வித்யாசம் இல்லை
1 ) பெண்களை குறி வைத்தல்
2 ) பயமுறுத்தும் விதத்தில் ஆங்காங்கே அசையாமல் நிற்றல்
3 ) உடலை கீறிவிட்டு ஓடுதல்
4 ) நான்காவதும் , முக்கியமானது மலேசியாவில் போலவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்துவது ( அது எப்புடி ?)

இன்று மாலை வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் இந்த பிரச்சினையினால் சில உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன , மலையகத்தை பொருத்தவரைக்கும் இப்போது கொஞ்சம் பிரச்சினை அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்