Wednesday, October 26, 2011

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்




அளவா சிரிக்கிற அஞ்சலி.
பட படக்குற அனன்யா.,
எங்க ஊரு பையன் ஜெய்.,
கடைசி நிமிடம் கலங்க வைக்கும் சர்வானந்.,
நெஞ்சை அவ்வப்போது கீரிப்போடும் சத்யாவின் இசை.,
பழனி மலை , விதி ஓட்டிச்செல்லும் பஸ்.,
பஸ்சுடன் பயணிக்கும் இசைஞானி பாடல்.,
காதல் சிட்டுக்கள்.,
தொடங்க முதல் முடியும் காதல்.,
உடைந்த பஸ் இன் வெற்றி கோப்பை.,
கடைசி நிமிட அமைதி மரண படுக்கையில் சொல்லப்படும் காதல்.,
மதிக்கப்பட வேண்டிய சாலை விதிகள்.,
திரும்ப வருமா என ஏங்க வைக்கும் நொடிகள்.,
அறுந்து அறுந்து போகும் உயிர்கள்.,
இப்போதும் காலை கண் விழித்ததும் வெறுமை படுத்தும் அந்த முடிவு.,
டைரக்டர் சரவணன் (இப்போதும் எப்போதும் என் நெஞ்சில்).,

Thursday, September 15, 2011

மங்காத்தா (லாஜிக் இல்லா மேஜிக் )

மாப்பிள்ளை மாதிரி மொக்க படத்தையே மனசாட்சியில்லாமல் விளம்பரப்படுத்தி ஓட்டு ஓட்டு என்று ஓட்டும் சன் பிச்சர்ஸ் காரர்களின் கையில் மங்காத்தா மாதிரி மாஸ் படம் கிடைத்தால் சும்மாவா சென்னையில் மட்டும் படம் வந்து ஒரே வாரத்தில் முப்பது கோடி வசூல் ......


எல்லோருக்கும் தெரியும் அஜித்தின் ஐம்பதாவது படம் இது ஏற்கனவே அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தல என்ற செல்ல பெயர் தமிழ் நாடு முழுவதும் இயங்கி வந்த முப்பத்தெட்டாயிரம் ரசிகர் மன்றங்கள் / நற்பணி மன்றங்கள் அத்தனையும் அஜித் கலைத்து கைவிட்ட பிறகு இந்த படம் என்ன கதியாகுமோ என்று பலரும் உச்சு கொட்ட , நரை முடியுடன் கொடூர வில்லத்தனத்துடன் படத்தை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக்கியிருக்கிறார் தல .. காட்சிக்கு காட்சி பார்வையிலேயே பேசும் வித்தை அஜித்துக்கே உரியது மனுஷன் அநியாயத்துக்கு அழகு கை தட்டல்களை ஏகத்துக்கு வாங்கி குவிக்கிறார் அஜித் வரலாறில் ஐம்பது படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள திரைப்படம் இது அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் தல தொடரட்டும் தல பயணம்


பி. கு - ஒரு சின்ன குறை ஐம்பதாவது படத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் பற்றியும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம்

Wednesday, September 7, 2011

யாழ் பயணம் ......

யாழ்பாணத்தில் என்னை பார்க்க ஒரு மாற்று திறநாளி வந்திருந்தார் அவரையும் அவர் குரலையும் நான் கவிராத்திரி நிகழ்ச்சியில் பல முறை கேட்டிருக்கிறேன் உணர்வுகள் பொங்கும் அவர் வரிகளை என்னை மறந்து அனுபவிப்பேன் அவர் என்னை நேரில் பார்க்க வந்தபோதுதான் அவர் ஒரு மாற்று திறநாளி என்பதே எனக்கு தெரியும் ! அவர் என்னிடம் எத்தனையோ வானொலிகளில் நான் கவிதை சொல்லியிருக்கிறேன் ஆனால் நீங்கள் தந்த அங்கீகாரம் எனக்கு யாருமே தந்ததில்லை ,உங்க வார்த்தைகள இரவுல கேட்கும்போது என் அத்தனை கவலைகளும் எங்க போகுதுனே தெரியல நீ நல்ல இருக்கனும்பா என்று என் கையை இருகப்பிடித்துக்கொண்டார் இவ்வளவு தூரம் வந்ததே உங்களிடம் இதை சொல்லத்தான் என்று சொல்லிவிட்டு கையில் கொண்டுவந்திருந்த சில இனிப்புகளையும் கொடுத்துவிட்டு தன் வழியே போக ஆரம்பித்தார் அவர் அப்பாவித்தனமான அன்பு தெரிந்த அந்த கண்ணில் என் இரண்டு வருட உழைப்பின் உண்மை பெறுமதியை நான் அப்போதுதான் உணர்ந்தேன்
நான் பட்ட அத்தனை கஷ்டங்களும் அவமானங்களும்
அப்படியே கரைந்து போனது , இதற்காகத்தானே அத்தனை உழைப்பு ? உண்மையில் எனக்கான உண்மை அளவீடும் இப்படியான உண்மை மனிதர்களிடம்தான் இருக்கிறது என்பதை சரியாக உணர்ந்த பொழுது அவர் என் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்... !

நிற்க ......

யாழ் பயணம் வெகு சிறப்பாக இருந்தது நீண்ட நாட்கள் பார்க்க ஆசைப்பட்ட மண் அது உணர்வுக்கொப்பளிப்புகளுக்கு அளவே கிடையாது சக்தி கலையகம் நல்லூரில் இருந்தாலும் நான் நல்லூரிலும் கலையகத்திலும் இருந்தது என்னவோ ரொம்ப குறைவான நேரம் தான் கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்த அளவு வெளியிலேயே செலவு செய்தேன் அத்தனையும் ரசித்தேன் என்பதை விட ருசித்தேன் என்றால் தவறில்லை ( இனியொரு முறை யாழ் பயணம் சாத்தியப்படாது என்ற உணர்வு மேலோங்கி இருந்ததால் இந்த பயணத்தை அங்குலம் அங்குலமாக அனுபவித்தேன் ) எல்லாம் தவிர்த்து யாழ் பயணம் சிந்தனை ரீதியான பல மாற்றங்களை எனக்குள் ஏட்படுத்தியிருக்கிறது பழகும் பலரின் நிஜ முகங்களை
கூட என்னால் யாழ் பயணத்தில்தான் தெரிந்து கொள்ள முடிந்தது பல ஊர்களுக்கு சென்று வீடு வீடாக நாம் நம் துறை அது தொடர்பாக மக்கள் சம காலத்தில் என்ன பார்வையை செலுத்துகிறார்கள் என்று பலதும் தெரிந்து கொள்ளக்கூடியாதாக இருந்தது (மக்கள் ரசனையில் எத்தனை மாற்றங்கள் வந்துவிட்டது ?)


வவுனியா கிளிநொச்சியை தாண்டும் போது உணர்வில் ஏற்பட்ட விசித்திரங்கள் எனக்கு புதுமையானவை , இதற்கு முன் எங்கும் எப்போதும் அறிந்திராத உணர்வு அது கிளிநொச்சியில் சில நேரம் என்னை அறியாமலே கண்கள் காரணம் இல்லாமல் ? கலங்கியது அந்த மண்ணை கூட பத்திராமாக கொண்டு வந்து என் வீட்டில் வைத்திருக்கிறேன் யாழ்பாணத்தில் எங்களுக்கு கிடைத்த வரவேற்ப்பு இது வரை அல்லது இனிமேல் வேறு ஒரு வானொலிக்கு கிடைக்கும் என்று நினைத்து கூட பார்க்க முடியாது .. அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றிகள் தனிப்பட்ட என் வானொலி நிகழ்சிகளுக்கு விமர்சனங்களை சொன்ன , எனக்காக பரிசுகளை தந்த அனைவருக்கும் நன்றி

Friday, August 12, 2011

எண்ணெய் மனிதர்களின் நடமாட்டம்


தலை தூக்கியிருக்கும் எண்ணெய் மனிதன் விவகாரம் இவ்வளவு பெரிய அளவில் சூடு பிடிக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை இந்த எண்ணெய் மனிதன் விவகாரம் எனக்கு ஆச்சர்யத்தையோ அதிர்ச்சியையோ தரவில்லை காரணம் சில நாட்களுக்கு முன் மலேசியா வின் பிரபல இணைய சஞ்சிகையான வணக்கம் மலேசியாவில் இதே போன்றதொரு செய்தி படித்திருந்தேன் ( இப்போதும் அந்த சஞ்சிகையில் இது தொடர்பான செய்தி இருக்கிறது ) இது எதோ அமானுஷ்ய சக்தி என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதில் பின்னணி காரணவாதிகள் நினைத்தது பிசுபிசுத்துவிட்டது மட்டும் நிம்மதி காரணம் இப்போது மக்களிடம் வர குறித்த ஆசாமிகளே பயம் கொள்ளும் அளவிற்கு மக்கள் நையப்புடைக்கின்றனர் .,

இந்த மலேசியா எண்ணெய் மனிதர்களின் அறிய சேவைகளுக்கும் இலங்கையின் எண்ணெய் மனிதர்கள் செய்யும் சேவைகளுக்கும் பாரிய வித்யாசம் இல்லை
1 ) பெண்களை குறி வைத்தல்
2 ) பயமுறுத்தும் விதத்தில் ஆங்காங்கே அசையாமல் நிற்றல்
3 ) உடலை கீறிவிட்டு ஓடுதல்
4 ) நான்காவதும் , முக்கியமானது மலேசியாவில் போலவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்துவது ( அது எப்புடி ?)

இன்று மாலை வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் இந்த பிரச்சினையினால் சில உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன , மலையகத்தை பொருத்தவரைக்கும் இப்போது கொஞ்சம் பிரச்சினை அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது

T.V .க்கு போயிட்டோம்ல ?

என் கடந்த பதிவு ஐம்பதாவது பதிவு அதுவே இப்போதுதான் நிணைவுக்கு வந்தது அது ஒருபுறம் இருக்க ஆகஸ்ட்டு மாதம் முதலாம் (2011/08/01) திகதி ஊடகத்துறையின் இன்னொரு பரிமாணத்துக்குள் உள்வாங்கப்பட்டேன் இதுவரை குரலில் மட்டுமே வித்தை காட்ட கிடைத்த எனக்கு காட்சி ஊடகத்திலும் இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதிலும் சக்தி டி வீ யில் இந்த அறிமுகம் இலகுவில் கிடைக்கமுடியாத ஒன்று காலை நேர நிகழ்ச்சியான good morning srilanka வில் முகத்தை எல்லோரும் கதற கதற காட்டிவிட்டேன் நீண்டகால கனவு என்பதால் இந்த வாய்ப்பையும் இறுகப்பிடித்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது இந்த வாய்ப்பை எனக்கு வழங்க பலவாறு முயற்சி செய்த கஜமுகன் அண்ணாவிற்கு இந்த நேரத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன் ! (ஆனாலும் கஜமுகன் அண்ணாவுக்கு தைரியம் ரொம்ப அதிகம்தான் என்னையெல்லாம் தொலைக்காட்சில காட்ட ஒரு தைரியம் வேணும் இல்ல ???)...ஆனாலும் ஒரு சின்ன கவலை அப்பா இருந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பார் ஹ்ம்ம்ம் ...............

Monday, August 1, 2011

"கலைக்காவலன்A. இராஜ்மோகன்"


"கலைக்காவலன் A.இராஜ்மோகன்"( பகுதி -1)

தனி ஒரு மனிதனை உயர்த்திப்பிடிக்கும் என் இன்னுமொரு பதிவு இப்படியான பதிவுகளை படிக்கும் போது வயிறு மற்றும் இதர உறுப்புகளில் எரிச்சல் ஏற்படும் என்று கருதுபவர்கள் இப்போதே வேறு பதிவுக்கு செல்வது உசிதம் ( அவ்வாறான எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல )

இன்றைய தேதிக்கு இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு முன்னணி வானொலிக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது சில நேரங்களில் அந்த அடையாளம் ஒரு அறிவிப்பாளராகவும் இருக்கிறது வெற்றியை பொருத்தமட்டில் லோஷன் அண்ணா அதன் அடையாளம் (வெற்றி என்றால் லோஷன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு ) , சூரியனை பொருத்தமட்டில் அங்கும் இருவர் அடையாளமாக இருக்கின்றனர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை )



மதிப்பிற்குரிய திரு . A.R.V லோசன் அவர்கள்


நான் சார்ந்த சக்தியை பொருத்தமட்டில் கடந்த ஒரு தசாப்த காலமாக பலரை தன் அடயாளமாக சுமந்திருக்கிறது அப்படி அடயாளமாக இருந்த பலர் வானொலிகளுக்கே புது வடிவம் கொடுத்தனர் என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது எழில் வேந்தன் அவர்களின் காலம் , இறுக்கமான அதே நேரம் அழகிய சரளமான தமிழில் ஒரு வானொலியாய் சக்தி வளம் வந்தது , அபர்ணாவின் வருகையை தொடர்ந்து இன்னும் இலகு தமிழில் சக்தி பட்டி தொட்டியெங்கும் கலக்கியது ( பாமரர்களுக்கும் சராசரி தோட்ட தொழிலாளர்களிடமும் சக்தியை அடையாளப்படுத்திய பெருமை அபர்ணா அண்ணாவையே சாரும் )


மதிப்பிற்குரிய திரு . R.P.அபர்ணா சுதன் அவர்கள்


அவருக்கு பிற்பட்ட காலத்தில் எந்த வடிவ மாற்றமும் இல்லாமல் ஒரே வடிவில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை தாக்கத்தை ஏட்படுத்தியிருந்தார் தமிழகத்தில் இருந்து வந்த மாயா இலகு தமிழில் அவர் காட்டும் வார்த்தை ஜாலங்களை ரசிக்காத வானொலி பிரியர்களே இல்லை என்று கூட சொல்லலாம் அவர் சக்தியில் இருந்த நாட்களில் அவருக்கு இருந்த ரசிகர் கூட்டம் அணைத்து வகுப்பினரையும் உள்ளடக்கியது , படித்தவர் முதல் பள்ளிக்கூடமே செல்லாதவர்களை கூட வார்த்தைகளால் கட்டிப்போடும் ஒரு அற்புதமான கலைஞனாக விளங்கினார்


மதிப்பிற்குரிய திரு. மாயா அவர்கள்


... இப்படி அவர் காலத்தினை தாண்டிப்பார்த்தால் மறுக்க முடியாத , தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாய் தன்னை வளர்துகொண்டவர்தான் இந்த ராஜ்மோகன் ( இந்த பதிவின் கதாநாயகன் )

"ராஜ்மோகனும் சக்தியும்,ஓரமாய் நானும்"


மதிப்பிற்குரிய திரு . இராஜ்மோகன் அவர்கள்


எப்படி சக்திக்குள் வந்தார் யார் மூலம் வந்தார் என்பதெல்லாம் கிடக்கட்டும் ஆனால் ராஜ் அவர்களின் வருகையை தொடர்ந்து சக்தி ஒரு புதுமையான பரிமாணத்தை தொட்டது (அதை நான் வானொலி ரசிகனாய் உணர்ந்தேன் ) தமிழில் வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை கொட்டும் இவருக்கு இலங்கை முழுவதும் ரசிகர்கள் ( நேயர் என்ற பதத்திற்கு பதில் இங்கு ரசிகன் என்ற பதத்தை பயன்படுத்துவதில் ஒரு நோக்கம் உண்டு சராசரி அறிவிப்பாளர்கள் எல்லோருக்குமே நேயர்கள் உண்டு ஆனால் ஒரு சிலருக்குத்தான் ரசிகர்கள் உண்டு யார் யாருக்கு என்பதை மேல் பந்திகளில் புரிந்து கொள்ளலாம் ) வானொலி விளம்பரங்களில் ( treilors) எமது வானொலிக்கென தனி ஒரு அடையாளத்தை ஏட்படுத்திக்கொடுத்தவர் ராஜ் , வானொலி ரசிகன் ஒருவன் என்ன எதிர் பார்ப்பான் அதை அப்படியே கொடுக்காமல் அவன் ஆச்சர்யப்படும் வகையில் கொடுக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு

இன்றைய திகதிக்கு சக்தியில் ஒலிபரப்பாகும் பல நிகழ்சிகளின் வடிவத்திற்கு இவர்தான் உரிமையாளர் ! இவரின் ஆளுமையால்
வானொலி நாடகங்கள் என்றுமில்லாத அளவு வீரியம் பெற்றன வந்திய தேவனை பற்றி பலகலைக்கழக கருத்தரங்குகளில் பேசப்பட்டது , வாராந்தரிகளில் முன்னணி நாளேடுகளில் பெருமையாக பேசப்பட்டது துணிந்து யாரும் தொடாத வந்திய தேவனை பெரும் செலவில் எமது வானொலியால் தயாரிக்கப்பட்டது அதை மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாக்கினார் ராஜ் , அதிகம் பயன்பட்ட , பயன்படாத , நம் நாட்டு தங்கங்களை ஒன்று திரட்டி தேடி தேடி வாய்ப்பு கொடுத்தார் , பிரபல நடிகர் கே. எஸ் . சந்திர சேகர் , ஜப்பு நாசீர், முது பெரும் நடிகர் ராஜா கணேஷன் , மகேஸ்வரி அம்மா , சில்மியா ஹாதி , புர்க்கான் பீ இப்திகார் , இளைய அறிமுகம் சஞ்சூபன் , அறிமுகம் தேவையில்லாத அசோக் பரன் , நிரோஜி, சம்ரத் , பிரகாஷ் , சில நேரங்களில் நான் என்று அத்தனை திறமைகளையும் லாவகமாக பயன்படுத்தி பல வெற்றிப்படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் , நெகிழ்வான ஒரு உண்மையும் உண்டு மறைந்த அமரர் சகல கலா வல்லவன் ஸ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் நாடகம் ஒன்றுக்கு கடைசியாக குரல் கொடுத்தது இவருக்காகத்தான் ( வந்திய தேவன் படைப்பில் )


வந்திய தேவன் கதை வசனக்கோர்வை

மணித்தியாலத்திட்கு ஒரு தடவை வரும் நகைச்சுவை பகுதிகள் இவர் காலத்தில் புது வடிவம் பெற்றது . . . அது வரை நகைச்சுவை என்ற பெயரில் இருந் நிமிடக்கனக்கான அலட்டல்களை இருபது செக்கண்களுக்குள் அடக்கி சிரிக்க வைத்தார் , இவரின் குபேரன் பட்டி தொட்டி எங்கும் ராஜ நடை போட்டது குழந்தைகளின் செல் பொம்மை ஆனான் குபேரன் , தந்திரன் இளையவர்களை கொள்ளையடித்தான் ,
அண்டா புளுகன் ஆகாச புளுகன் என்ற நிகழ்ச்சி வெறும் பதினைந்தே செக்கன்கள் நீடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஆனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கண்டது இப்படி எல்லாவற்றிலும் புதுமை எதிலும் புதுமையல் புகுத்தும் வல்லமை ராஜ்கே உரியது

இன்றைய திகதியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் அரேபிய இரவுகள் , மகா லக்ஷ்மி , தக்காளி தியட்டர் ,என்று அத்தனை படைப்புகளும் இவரின் இயக்கத்திலேயே சென்று கொண்டிருக்கிறது தக்காளி தியட்டர் வானொலிகளுக்கே புதிய வடிவம் , ( லொள்ளு சபாவின் பிரதி என்றாலும் வியாபாரத்தை மையநோக்காக கொண்ட வானொலி நிகழ்ச்சி என்ற வரம்பு மீறாமல் மாற்றி அமைத்துக்கொடுத்தவர் ராஜ் ). .. இவ் அனைத்து படைப்புகளிலும் பிரஷாந்த் ,ஹோசியா . சதீசன் , ரஜீவன் , அவ்வப்போது நான் என்று பல உதவி இயக்குனர்களையும் உருவாக்கினவர் இந்த ராஜ் மோகன்

இவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததின் உந்துதலால் அல்லது அது தந்த நம்பிக்கையினால் நான் உருவாக்கிய சுழியம் என்ற மர்ம விவரண நிகழ்ச்சி சக்தியின் மெகா ஹிட் நிகழ்ச்சி ! கொழும்பு தமிழ் சங்கத்தில் இவரின் குரலில் தமிழ் ஒலிக்காத வார இறுதிகளே இல்லை என்றளவில் இருக்கிறது நிகழ்காலம் ...... இப்படி இலங்கையில் ஒரு வானொலி அறிவிப்பாளன் படைப்பாளன் பெற வேண்டிய அதி உச்சத்தை தொட்டு சத்தமில்லாமல் வாழும் ஒரு அற்புதமான மனிதன் ( (இவையனைத்தும் அவரோடு பணி புரிந்தபோது நான் நேரடியாக கண்டவை சில விடயங்கள் குறிப்பிட தவறியும் இருக்கலாம் )


தொடரும் ................

Saturday, July 9, 2011

தெற்கு சூடான் விடுதலை



"50 வருடகால போராட்டத்தின் முடிவில் கருப்பு தேசம் ஒன்றிற்கு வைர விடுதலை இருபது லட்சம் ஆத்மாக்களை காவுகொண்ட குழல் துப்பாக்கி அரக்கர்களாலும் கேவலமான சித்திரவதை கூடங்களாலும் தடுக்க முடியாமல் போன நியாயத்தின் வெற்றி ! புதிய தேசத்திற்கு தமிழனாய் வாழ்த்துகிறேன் !

Tuesday, July 5, 2011

"தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே "



ஆவணப்படம் பார்த்து அதிர்ந்த பலரில் நானும் ஒருவன் , பாதிக்கு மேல் உடல் நடுக்கம் எடுக்கவே நிறுத்திவிட்டேன் (நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல்தான் ) மறுநாள் வெற்றியின் லோஷன் அண்ணாவின் பதிவில் ஆவணப்படம் பார்த்த அவரின் உணர்வை கவிதையாக தீட்டியிருந்தார் , அதுவும் அதன் பங்குக்கு என் சட்டையை பிடித்து கேள்வி கேட்க எல்லாமே நாம் வாழும் காலத்தில் தானே நடந்திருக்கிறது என்றால் நானும் ஒரு தொடை நடுங்கிப்பயல் தானே ?, கையாலாகாத பேடிப்பயல்தானே ? அனால் ஒன்று மட்டும் உண்மை இரண்டாயிரம் வருடங்கள் மூத்தகுடியின் அடக்கப்பட்ட ஓசையை பறை ஓசை சாற்றுவது போல் இனி என் தமிழனுக்கு இப்பேற்பட்ட அவலம் எந்த யுகத்திலும் வராது என்றளவுக்கு அந்த காட்சிகள் எங்கள் அழு ஓலங்களை உலகம் முழுக்க சத்தமிட்டிருக்கிறது !

இதற்கு மேல் இதை பற்றி பேசும் எழுதும் தைரியம் இருந்தால் நான் ஏன் காட்சிகளை பாதியிலேயே நிறுத்த போகிறேன் ?

Monday, July 4, 2011

ஹி ஹீ ஹி ஹீ .....



எங்கள் அலுவலக வளாகத்தில் எப்போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தோசங்களுக்கும் பரபரப்பிற்கும் கொஞ்சமும் குறைவிருக்காது விளையாட்டாக பேசும் பல விடயங்கள் வானொலியில் நிகழ்சிகளாக படைத்து மக்களிடம் வரவேற்பும் பெரும் அனுபவங்களும் அலாதியானவை
சம காலத்தில் நடக்கும் கடுமையான விடயங்களைக்கூட வெகு நகைச்சுவையாக சமைத்து கொடுப்பதில்
எங்கள் ராஜ் அண்ணாவுக்கு நிகர் அவர்தான் எனக்கு அவர் குரு என்பதால் பல விடயங்களை கற்றுக்கொடுப்பார் அப்படி ஒருநாள் நடந்த ஒரு சுவாரஷ்யமான உரையாடல்

நான் - அண்ணா அது என்ன சாகசத்தொடர்?
ராஜ் - க்ரிஷ் கவனிச்சுக்கோ யானை நடக்கிறது தொடர் ,
யானை ஓடுகிறது வீரத்தொடர்
அதே யானை பறக்கிறது சாகசத்தொடர்

( எனக்கு புரியிரா மாதிரி சொல்லுராராமாம் நான் தலையாட்டிக்கொண்டிருக்கிறேன் எங்கிருந்தோ வந்த சக அறிவிப்பாளர் பிரசாந்த் விட்டாரே ஒரு கமெண்ட் ...)

பிரசாந்த் - ராஜ் அப்ப யானை அழுகிறது மெகா சீரியலாடா ??????????

தாலாட்டு பாடவா



எங்கள் வானொலியில் என்னிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பல நிகழ்சிகளை நான் அனுபவித்து ரசித்து வழங்குவதுண்டு . நேற்றைய கவிராத்திரி தாலாட்டு பாடவா என்ற தலைப்பில் நகர்ந்தது .வழக்கம் போல சக்தி கவிஞர்கள் தங்கள் பங்குக்கு அசத்த என் பங்குக்கு திடீரென நிணைவுக்கு வந்த சில வரிகளை சிந்திக்க முன் என் மைப்பேனா கிறுக்கியது ....

வலிக்கிறது .....
என்ன என்ன வலிக்கிறது .....
நினைக்க் நினைக்க நெஞ்சு விம்மி வெடிக்கிறது ....
என்ன அவசரம் உனக்கு ...

வெட்டிப்பயளிவன்
வெறும் பயலிவன்
கடைசிவரை அப்படித்தான் என்று நீயாய் முடிவேடுத்தாயோ

இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ

தகப்பன் மட்டுமா நீ எனக்கு
தங்கத்தின் தங்கம் அல்லவே
அப்பன் அல்ல நீ எனக்கு அதையும் தாண்டி..
பொன்னல்லவே நீ ?
தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய்
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?

உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மருஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ....
Copyright © 2014 நட்சத்திரவீதியில்