"பரதேசி "... பாலா சொன்னது சரி - 2
கடந்த பதிவுடன் இதையும் இணைத்துக்கொள்கிறேன் "பரதேசி"
படத்திலும் சரி அதன் மூலமான "எரியும் பணிக்காட்டிலும்" சரி ஒரு பூசாரி கதாபாத்திரம் உலவிக்கொண்டிருக்கும் கொடுமைகளாலும் , குளிராலும், மலேரியாவினாலும் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கும் மனிதர்களை கடவுள் பெயரால் அரித்து தின்றுக்கொண்டிருக்கும் , அது எப்படி எல்லாம் மனிதர்களின் பயத்தை வைத்து தன பிழைப்பை தேடியது என்பது பற்றி ph .டேனியல் தெளிவாக சொல்லியிருப்பார் விளக்கியிருப்பார்.
தாயத்துக்கு நாலு அனா , ஆத்தாளுக்கு பூஜை என்று எட்டணா இப்படி அந்த சனத்தின் ரத்தத்தில் பாதியை தன பங்குக்கு உறிஞ்சுக்கொள்ளும், ஏற்கனவே கடனில் இருக்கும் அந்த மனிதர்களின் கடனை இன்னுமின்னும் உயர்த்தும். கடைசியில் வள்ளி என்ற அந்த முதல் கதாபாத்திரம் தாயத்தும் பிரயோசனமின்றி நம்பிய கடவுளும் பிரயோசனம் இன்றி பரிதாபமாய் இறந்து போவாள் நான் கேட்கிறேன் "ph .டேனியல் என்ற வேற்று மதக்காரர் ஒருவர் இந்துத்துவ கடவுளை அவமானப்படுத்துகிறார் என்று சொல்ல முடியுமா??? "
அப்படி சொல்வது எவ்வளவு அடி மட்டமான புத்தி ? அப்படித்தான் பாலாவை விமர்சிப்பதும் , பாலா கிறிஸ்தவர்களை சாடுகிறார் என்றால் அந்த பூசாரி கதாபாத்திரத்தை எதற்கு காட்ட வேண்டும் ? பாலா அந்த மக்கள் பட்ட ஒட்டுமொத்த வலியையும் 2 மணிகளுக்குள் சொல்ல முற்பட்டிருக்கின்றார் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் .....
0 comments:
Post a Comment