Sunday, October 7, 2012

உனக்குள் நான் எனக்குள் நீ ( அறிந்ததை உளறுகிறேன் )-1


(இந்த பதிவு ஒரு தொடர் பதிவு... சைக்கோ   என்று ரொம்ப சாதாரணமாக அடையாளப்படுத்தப்படும் பலர் பற்றியது வார்த்தை கோர்வைகள் சில நேரம் புரியாமல் இருக்கலாம் இரண்டொரு தடவை பொறுமையாய் வாசித்து பாருங்கள் .. நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும்  சைக்கோ   தனத்தை அல்லது மன நிலை மாற்றத்தை பதிவிடும் ஒரு முயற்சி ..)

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது மிகவும்  சிக்கலான வார்த்தைதான். அதில் பொதிந்து போயிருக்கும் அர்த்தமும் மிக  ஆழமானது. ஆழமாய் போக போக என்ன ஏது என்ற முடிவு பெறுவதும் அவ்வளவு சுலபம் அல்ல. இந்த வார்த்தைக்குள் நாம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை அடக்கி வைத்தியசாலை என்ற பெயரில் அடைத்து வைத்துவிட்டிருக்கின்றோம் என்றால், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்குள் அடங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் என்பதும் உண்மை அல்ல.

 கடைசி வரியில் எழுதியிருப்பது பலருக்கு பரீட்சயமானது. நம் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்க்குமொவ்வொருவரும் விதம் விதமான மனோபாவம் கொண்டவர்கள்.  பல விடயங்களில் இந்த மனோபாவங்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருக்கும் அதில் இருந்து யாரேனும் ஒரு சின்ன வித்தியாசத்தை காட்டினாலும் அவனை வித்தியாசமாக பார்க்க வைப்பதும் இந்த மன நலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தைதான் .மிக சராசரியான வாழ்க்கை அமைந்தவர்களுக்காக இருக்கட்டும் , அந்தந்த வயதில் கிடைப்பதெல்லாமே கிடைத்தவனாக இருக்கட்டும் சராசரியான வாழ்க்கை அமையாதவனாக இருக்கட்டும் , அல்லது அதை தேடுபவனாக இருக்கட்டும்  ( வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் இந்த நான்கு பிரிவுக்குள் அடக்கிவிடலாம ) எல்லோருக்குமே இந்த வார்த்தை மிக பொதுவானது. 

ஆனால் பைத்தியம் என்ற பெயரில் நாம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் பைத்தியமா? பெரும்பான்மைக்கு பிடிக்காத ஒன்றை ஒருவன் செய்தால் அவன் பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டால் அவனை அந்த வார்த்தைக்குள் அடக்கியவர்கள் எல்லோருமே மன நலத்தில் நூறு வீதம் உயர்ந்தவர்களா? பைத்தியம் என்றவனும் சிரிக்கிறான், அழுகிறான், கோபப்படுகிறான் அவனை பைத்தியம் என்று அடையாளம் கொடுத்தவனும் இந்த சராசரி உணர்வுகளை அசாமான்யமாய் வெளிக்காட்டும் பல சந்தர்ப்பங்களை நினைக்க முடிகின்றது  , மன நலம் பாதிக்கப்பட்டவன் தனியாய் சிரிக்கின்றான் என்றால், ஒருவன் சிரிப்பதை பார்த்து காரணமே இல்லாமல் சிரிப்பவனையும் அடுத்தவனை காயப்படுத்தி சிரிப்பவனையும் , விரக்தியில் சிரிப்பவனையும் வெறியில் சிரிப்பவனையும் எந்த வார்த்தையில் அடக்குவது நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்ற எண்ணம் வந்தவனும், இல்லை நான் தெளிவு என்ற எண்ணம் கொண்டவனும் என்று எவனுமே மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தையில் இருந்த இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் தப்பவே முடியாது .... (இரண்டாம் தொடுப்பு வரும் )

2 comments :

  1. unmaikku putiya parimaanattai ettum sintanaiyin peeridum terippuhal..adutta toduppu seekkirame pativaagaddum...

    ReplyDelete
  2. தனக்கு புரியாத ஒன்றை/தனது கேவலாமன முகத்திரையை கிழிக்கும் முகமாக பேசுபவனை பற்றியும் இவ்வுலகம் பைத்தியம் என்று தான் சொல்கிறது!!!
    “அம்மண தேசத்தில் கோவணம் கட்டுபவன் கோமாளி” நம்ம ஊரில்!!!

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்