Tuesday, June 7, 2011

போங்கையா நீங்களும் உங்க பேச்சுவார்த்தையும் "



என்ன அண்ணாச்சி நீங்க? மறுபடியும் இப்டி பண்ணிட்டீங்களே ...அண்ணாச்சி இந்த முறை உங்கள எப்டியும் மந்திரி ஆக்கி அனுப்பியே தீரணும்னு நம்ம படிச்ச பயபுள்ளைக சொன்னதால தான் அனுப்பினோ ...எனக்கு படிக்க வராது பாருங்க அதக்காக எத்தன வாட்டி இப்டி எங்கள காட்டிக்கொடுப்பீங்க மூணு பேரா மொத்தமா அள்ளிக்கிட்டு பார்லிமென்ட் போகும்போதே நெனச்சேன் இந்த வாட்டி நம்மாளுகளுக்காக ஏதோ பெருசா கிழிச்சி கோர்துடுவீங்கனு

அதே மாதிரி பிரிச்சு மேஞ்சிடீங்க போங்க நாலு புள்ளைகளோட நானும் மனுசியும் விழுந்து விழுந்து வேலை செஞ்சும் ரொட்டிக்கு மாவு வாங்க பெட்டிக்கடைல கால்கடுக்க நிக்கிற வேதனை உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லீங்க
மூனாவது பொண்ணு படிக்கிறதுக்கு புஸ்தகம் கேட்டு நிக்கிறப்போ பயலுக்கு வகுப்பு பீசு கொடுக்க இருந்த காசுல பாதிய குடுத்துட்டு திரும்புரப்போ வயசுக்கு வந்த ரெண்டாவது புள்ளைக்கு சடங்கு சுத்த காசு இல்லாம பொண்டாட்டி தாளித்துண்ட எடுத்துகுட்டு வட்டிக்காரன்கிட்ட போறப்போ மனசுக்குள்ள நான் அழுகுறது என் பொண்டாட்டிக்கே தெரியாது உங்களுக்கு எங்க தெரியப்போவுது

காய்ச்சல் தும்மல் வந்தா கூட சாய்த்தன்னிய குடிச்சுபுட்டு மலைய உட்டு எறங்காம வேல பாக்குற அவளுக்கு நா எப்டி ஆறுதல் சொல்லறது ? ... நா என்ன தொன்நூராயிரமா சம்பளம் கேட்டே ? ... ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா வாங்கி தர முடியாதா ? உண்மைல மோதலாளிமாரோட மாசக்கணக்க அப்டி என்னதான் பேசுறீங்க ...இந்த நூறு ர்ரோவா வாங்கத்தான் ஆயிரக்கணக்குல செலவு பண்ணிட்டு மீட்டிங் போடீங்கலாகும்

முன்னூத்தி என்பது ரூபா எனக்கு போதும்னு நீங்க எப்டி முடிவு பண்ணுவீங்க ...நீங்க என்ன எனக்கு சகலையா இல்ல சம்மந்தியா ...... இல்ல மாசத்துல பதினஞ்சு நாள் என்கூட மலைல ஏறி கூட சொமக்குறீங்களா தேர்தல தவிர எப்பவாவது உங்கள நேர்ல நான் பார்த்தா நெனவே இல்லையே ...நீங்க எவ்ளோதான் எங்க வயித்துல அடிச்சாலு வலிக்குமா எங்களுக்குன்னு ? வடிவேலு சொல்றமாதிரி நாங்களும் ஒவ்வொரு தேர்தளுளையும் அனுப்பிட்டுதான் irukkom நம்ம புள்ளைகளோட புள்ளைங்க என்னைக்காவது இந்த பாவத்துக்காக எங்களை காரித்துப்புமேயா ?

அது சரி எனக்கு பிரச்சன இருந்தா தானே உங்களுக்கு பதவி ...இந்த பயளுகலாவது உருப்படியா நாலு எழுத்து படிச்சு இங்கயே ஒரு வேலைய செஞ்சி எங்கள வேலைய விட்டு நிப்பாடுவானுங்கனு பார்த்தா அவனுங்களும் கொழும்புக்கு பொய் ரொட்டி அடிக்கிறேனுதான் இருக்கானுங்க அவனுங்க பயலுகலாவது படிச்சு எங்க ஆத்மாவயாவது சந்தோசப்படுத்தட்டும் .... அப்பயாவது ஐநூறு ரூபா வாங்கி தருவீங்களா அண்ணாச்சி!!! ?? ..

1 comment :

  1. Inraiya velai vaasiyil 500 ரூபா kooda pothathu.உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எப்போது தான் கிடைக்குமோ?

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்