Thursday, January 20, 2011

சுழியம்

சுழியத்தை பற்றி சொல்ல வேண்டும் சக்தி fm இன் பணிப்பாளராக திரு. காண்டீபன் அண்ணாவின் வருகைக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களில் என்னாலும் நண்பர் பிரசாந்தினாலும் முன்வைக்கப்பட்ட யோசனை தான் இந்த "சுழியம்" காண்டீபன் அண்ணாவின் முழுமனதான ஏற்புடன் "சுழியம்" என்ற பெயர் அடியேனால் வைக்கப்பட்டது விடைதெரியா "வினாக்கள் சுழலும் வரை" என திரைப்படங்களில் வரும் tag lines அதாவது அடிக்குறிப்பு போன்றதொன்று அடியேனால் உருவாக்கப்பட்டது மறக்க முடியாது



முதல் நிகழ்ச்சி கடந்த மாதம் பௌர்ணமியில் பல்வேறுபட்ட சுவாரஷ்யமான ரகளைகளுடன் ஒலியேற்றபட்டு நல்ல ஆரம்பம் என "மூத்தோர்களாலும்", "நேயர்களாலும்" வரவேற்கப்பட்டது அதனைத்தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சி நல்ல முன்னேற்றத்துடன் கூடிய படைப்பு என விமர்சனங்கள் வந்துள்ளன நேற்றைய சுழியத்திட்கு ஏராளமான வரவேற்புகளும் இல்லாமல் இல்லை குறிப்பாக ராஜ் அண்ணாவின் விவரணம் , பிரஜீவ் அண்ணாவின் ஒலிகலவை 100 வீதம் என பேசப்பட்டது ( அதில் ஆச்சரியம் இல்லை ) எனது படைப்புக்கு உருவம் தந்த அத்தனை சக்தி நிகழ்ச்சி பிரிவு நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

1 comment :

  1. அருமையான படைப்பு............... வெற்றி தொடர்க.......... இறை ஆசிகளும் & என் வாழ்த்துகளும்

    ReplyDelete

Copyright © 2014 நட்சத்திரவீதியில்