Monday, January 17, 2011

சரித்திரத்தின் உயிர்ப்பு ( எம் ஜி ஆரின் பிறந்தநாள் )


கும்பகோணம் யானயடிப்பள்ளி - வறுமையில் கழிந்த வால்டேக்ஸ் ரோடு -முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் -எப்போதாவது படவுலகில் அவ்வப்போது சின்ன சின்ன வாய்ப்பு - ஒரே ஒரு நெறுக்க காட்சி தரக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு - கதருக்குள் இருந்துகொண்டு கலைஞர் மீது காதல் - வந்து சேர்ந்த வாய்ப்புகளை சிதறாமல் பயன்படுத்திய செம்மை - முப்பது வயதுக்கு மேல் வாழ்கையில் சந்திரோதயம் - நாற்பதுக்கு மேல் வாழ்கையில் சூர்யோதயம் - பட படவென்று வளர்ச்சி - மனித நேயம் என்னும் மாட்சி - காட்சியிலிருந்து கட்சி - கட்சியிலிருந்து ஆட்சி அப்பப்பா என்ன ஒரு வளர்ச்சி

அயல்வீட்டுக்காரனுக்கு அறிமுகமில்லாமல் ஒரு வாழ்க்கையோடு தொடங்கி அரசாங்க மரியாதையோடு அடக்கம் ஆணீர்களே

m g r கே மரணமா எனக்கு முதன் முதலில் மரண பயம் வந்தது காற்று - சமுத்திரம் - வானம் இவைகள் எல்லாமே மரணிக்க முடியாத சமாச்சாரங்கள் என்று கிராமத்து மக்களை போல நானும் நம்பிக்கிடந்தேன் அந்த நான்காவது நம்பிக்கை சரிந்துவிட்டது

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் தொகுப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய வார்த்தைகள் இவை

0 comments:

Post a Comment

Copyright © 2014 நட்சத்திரவீதியில்